News December 11, 2024
மொடாக்குடியில் இருந்து மீண்ட மக்கள்

தென் கொரியாவில் தீவிர குடிப்பழக்கம் கொண்டிருந்த பெரும்பான்மையான மக்கள், அதிலிருந்து மீண்டிருப்பது தெரியவந்துள்ளது. முன்பு கூட்டம் நிரம்பி வழிந்த பார்கள், தற்போது வெறிச்சோடி காணப்படுகின்றன. குடிப்பழக்கத்தை மக்கள் கைவிடுவதற்கு, அந்நாட்டின் நீண்டகால பணவீக்கம்தான் காரணம் என பொருளாதார நிபுணர்கள் கூறுகின்றனர். பெரும்பான்மையானோர் கடனாளிகளாக இருப்பதால், குடிக்கு பணம் செலவு செய்ய யோசிக்கின்றனர்.
Similar News
News August 12, 2025
மூட்டு எலும்புகளை வலுவாக்கும் ‘தடாசனா வின்யாசனம்’

✦இது முதுகெலும்பை சீராக வைக்கவும், தோள்கள், இடுப்பு & முழங்கால்கள் எலும்புகளை வலுவாக்கும்
✦கால்களை ஒன்றாக சேர்த்து, கைகளை உடல் ஒட்டியபடி வைக்கவும். கைகளை ‘T’ வடிவில் உயர்த்தவும்.
➥கால்களை கொஞ்சம் வளைத்து, இரு கைகளையும் ஒன்றாக சேர்த்து நிற்கவும்.
➥10- 15 விநாடிகள் இந்த நிலையில் இருந்துவிட்டு, பிறகு பழைய நிலைக்கு திரும்பவும். SHARE IT.
News August 12, 2025
தேமுதிகவின் கூட்டணி கணக்கு.. சீட் பேரம்..

ஜெ.,வுடன் தான் இருக்கும் புகைப்படத்தால் பரபரப்பு தொற்றியதால் அதிமுக கூட்டணியில் தேமுதிக தற்போது இல்லை என்று பிரேமலதா விளக்கமளித்தார். ஆனால், எல்.கே.சுதீஷ் போட்டோவை வெளியிட்டதற்கு பின்னால், அரசியல் காரணம் இல்லாமல் இல்லை. அதிமுகவின் கதவு திறந்து இருப்பதை மறைமுகமாக சுட்டிக்காட்டி, திமுக அல்லது தவெகவிடம் கூடுதல் சீட் பேரம் பேசுவதற்கு வாய்ப்பாக அமைந்துள்ளதாக அரசியல் விமர்சர்கள் கூறுகின்றனர்.
News August 12, 2025
ஆசிய கோப்பை தொடரில் பாண்ட்யா பங்கேற்பாரா?

ஆசிய கோப்பை தொடர் வரும் செப்.09-ம் தேதி UAE-ல் துவங்க உள்ளது. இதற்கான இந்திய அணியில் ஹர்திக் பாண்ட்யா இடம்பெறுவாரா என்ற எதிர்பார்ப்பு உள்ளது. இந்நிலையில் வரும் ஆக.11,12-ம் தேதிகளில் பெங்களூருவில் உள்ள BCCI-ன் சிறப்பு மையத்தில் (COE) 2 நாட்கள் உடற்தகுதி மதிப்பீட்டை அவர் மேற்கொள்வார் என தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்த மதிப்பீட்டின் முடிவே இத்தொடரில் அவர் பங்கேற்பாரா, இல்லையா என்பதை தீர்மானிக்கும்.