News May 27, 2024

40 ஆண்டுகளுக்கு பிறகு வாக்களித்த மக்கள்

image

ஜார்க்கண்டின் தான்பாத் தொகுதிக்குட்பட்ட துண்டி கிராமத்தில் 40 ஆண்டுகள் கழித்து முதல்முறையாக வாக்குப்பதிவு நடைபெற்றுள்ளது. தேர்தலின் 6ஆம் கட்ட வாக்குப்பதிவின் ஒரு பகுதியாக நக்சல்கள் ஆதிக்கம் நிறைந்த துண்டி கிராமத்தில் 1984ஆம் ஆண்டு நடந்த மக்களவைத் தேர்தலுக்கு பின்னர் ஒரு சதவீத வாக்குக் கூட பதிவானதில்லை. இந்நிலையில், மக்கள் வாக்குச்சாவடிகளுக்கு ஆர்வமாக வந்து ஜனநாயக கடமையை (57%) ஆற்றியுள்ளனர்.

Similar News

News March 4, 2026

TN-ல் சாதிவெறி, கலவர அரசியல்.. இயக்குநர் ஆதங்கம்

image

திமுக, அதிமுக ஆகிய கட்சிகள் தங்களது அதிகார வெறிக்காக வளர்த்தெடுத்த சாதிவெறியே நாங்குநேரி சம்பவத்திற்கு காரணம் என லெனின் பாரதி விமர்சித்துள்ளார். X பதிவில் அவர், திருப்பரங்குன்றத்தில் இல்லாத தீபத்தூணை வைத்து கலவர அரசியலை RSS செய்கிறது என்றும், வெற்று திரைக்கவர்ச்சி அரசியல் மட்டுமே தவெகவிடம் உள்ளதாகவும் கூறியுள்ளார். TN இன்னும் என்னவெல்லாம் பார்க்கபோகிறதோ எனவும் ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

News March 4, 2026

வள்ளலார் பொன்மொழிகள்

image

*பசிபோக்குவதே ஜீவகாருண்யம் *வாக்கு வேறு, மனம் வேறு, செய்கை வேறு என்ற நிலையில் இறைவனை வழிபடாதீர்கள். மூன்றும் ஒன்றிய நிலையில் வழிபடுங்கள் *பல்லாயிரம் சொற்களை உபசாரமாகப் பேசுவதைவிட, முகமலர்ச்சியுடன் ஒருவரைப் பார்த்தாலே நம்மைச் சந்திப்பவர் மகிழ்வார் *நல்லோர் மனதை நடுங்கச் செய்யக் கூடாது. தானம் கொடுப்போரைத் தடுத்து நிறுத்தக் கூடாது. நட்புக்கு வஞ்சகம் செய்யக் கூடாது.

News March 4, 2026

பிறந்த ஊரிலேயே புதைக்கப்படும் கமேனி?

image

போரில் கொல்லப்பட்ட கமேனியின் இறுதிச்சடங்கு ஈரானில் உள்ள மஷாத் நகரில் நடைபெறும் என தகவல் வெளியாகியுள்ளது. அங்குள்ள இமாம் ரேசா புனித தளத்தில் கமேனியின் உடல் புதைக்கப்படவுள்ளதாக ஈரானிய ஊடகங்கள் கூறுகின்றன. அதேஇடத்தில் தான் கமேனியின் தந்தை கல்லறையும் உள்ளது குறிப்பிடத்தக்கது. ஆனால், தேதி குறித்த அறிவிப்பு வெளியாகவில்லை. கமேனியின் இறுதிச்சடங்கிற்கான ஏற்பாடுகளை ஈரான் அரசு செய்து வருகிறது.

error: Content is protected !!