News August 5, 2024
பொதுமக்கள் அமைதி காக்க வேண்டும்: மம்தா

வங்கதேச கலவரம் தொடர்பாக மேற்குவங்க மக்கள், நிதானத்தை கடைபிடிக்க முதல்வர் மம்தா பானர்ஜி வேண்டுகோள் விடுத்துள்ளார். யாரும் எந்த ஆத்திரமூட்டும் நடவடிக்கைகளில் ஈடுபடக் கூடாது என்ற அவர், இந்த விவகாரத்தில் 2 நாடுகள் சம்பந்தப்பட்டதால் பொறுமையாக இருக்க வேண்டியது மிக அவசியம் எனக் கூறினார். இந்த விவகாரத்தில் மத்திய அரசின் அறிவுறுத்தலின் படி செயல்பட உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
Similar News
News January 17, 2026
சற்றுமுன்: 9 குழந்தைகள் அடுத்தடுத்து பலி

ரஷ்யாவின் நோவோகுஸ்னெட்ஸ்க் பகுதியில் உள்ள பிரபல ஹாஸ்பிடலில் 9 குழந்தைகள் பிறந்து சிலமணி நேரங்களிலேயே அடுத்தடுத்த சில நாள்களில் உயிரிழந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனால் ஆத்திரமடைந்த உறவினர்கள் ஹாஸ்பிடலை முற்றுகையிட்டதால் பரபரப்பு நிலவியது. போலீஸார் விசாரித்ததில், டாக்டர்களின் கவனக்குறைவே இறப்புக்கு காரணம் என தெரியவந்தது. இதனையடுத்து, தலைமை டாக்டர் உள்பட 2 பேரை போலீஸார் கைது செய்துள்ளனர்.
News January 17, 2026
தேர்தலில் போட்டியிடலாமா? குழப்பத்தில் இருந்த திமுக!

தற்போது ஆளும் கட்சியாக உள்ள திமுக, கட்சி தொடங்கி 7 ஆண்டுகள் வரை தேர்தலில் போட்டியிடலாமா என்ற குழப்பத்தில் இருந்தது தெரியுமா? 1956-ல் திருச்சியில் 2வது மாநில மாநாடு நடந்தது. அதில் திமுக தேர்தலில் பங்கேற்பது குறித்து 2 வாக்கு பெட்டிகள் அமைத்து தொண்டர்களிடம் விருப்பம் கேட்கப்பட்டது. பெரும்பான்மை வாக்குகள் அடிப்படையில் 1957 தேர்தலில் முதல்முறையாக திமுக போட்டியிட்டு 15 இடங்களில் வென்றது.
News January 17, 2026
சிபிஐ விசாரணைக்கு விஜய் போய்தான் ஆகணும்: TTV

ஜன நாயகன் படத்தை நீதிபதிகள் தடை செய்துள்ளபோது அரசு மீது எப்படி குற்றம் சுமத்த முடியும் என TTV தினகரன் கேட்டுள்ளார். மேலும், தனக்கு பாஜக எந்த அழுத்தமும் தரவில்லை என்றவர், கரூர் சம்பவம் தொடர்பாக ஓய்வுபெற்ற நீதிபதி மூலம் விசாரிக்க வேண்டும் என்று தவெக தான் கேட்டது. அதன்படி தற்போது நடக்கும் சிபிஐ விசாரணைக்கு விஜய் போய்தான் ஆக வேண்டும். அது எப்படி பாஜகவின் அழுத்தமாகும் எனவும் கேள்வி எழுப்பியுள்ளார்.


