News April 15, 2024
தேர்தலை புறக்கணிக்கும் வேங்கைவயல் மக்கள்

புதுக்கோட்டை மாவட்டம் வேங்கைவயல் கிராம மக்கள் தேர்தலை புறக்கணிக்கப் போவதாக அறிவித்துள்ளனர். குடிநீர் தொட்டியில் மலம் கலந்த விவகாரத்தில் நீதி கிடைக்காததால் தேர்தலை புறக்கணிக்கப் போவதாக அவர்கள் அறிவித்துள்ளனர். 2022ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் வேங்கைவயல் கிராமத்தின் குடிநீர் தொட்டியில் மனித மலம் மிதந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அதனை குடிநீரில் கலந்தது யார் என்பது இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை.
Similar News
News December 9, 2025
விஜய்க்கு அரசியல் தெரியாது: நயினார் நாகேந்திரன்

புதுச்சேரிக்கு வளர்ச்சி திட்டங்களை மத்திய அரசு கொண்டு வரவில்லை என குற்றஞ்சாட்டிய விஜய்யை நயினார் கடுமையாக விமர்சித்துள்ளார். ஒரு கவுன்சிலர் கூட ஆகாமல் நேரடியாக CM அரியணையில் அமர்வதற்கு விஜய் ஆசைப்படுவதாகவும் அவர் சாடியுள்ளார். மேலும் மத்திய அரசின் ஆயுஷ்மான் பாரத், ஜல் ஜீவன் உள்ளிட்ட திட்டங்கள் தொடர்பாகவும், அரசியல் பற்றியும் விஜய்க்கு ஏதாவது தெரியுமா என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
News December 9, 2025
முடி அடர்த்தியா வளர இந்த 2 பொருள்கள் போதும்

ஒருவரின் முக அழகை மெருகேற்றுவது முடியாக தான் இருக்கிறது. இதனால் அதீத முடி உதிர்வால் சிலர் மன அழுத்தத்திற்கு ஆளாகின்றனர். இதனை சரி செய்ய 2 பொருள்கள் போதும். முட்டை & தயிரில் புரதம், பையோட்டின் அதிக அளவில் இருப்பதால் முடி சார்ந்த பிரச்னைகளை இது சரி செய்கிறது. இதற்கு, வாரத்திற்கு இருமுறை முட்டையின் வெள்ளைக் கரு & ஒரு ஸ்பூன் தயிர் சேர்த்து ஹேர் பேக் போட்டுவந்தால் முடி அடர்த்தியாக வளரும். SHARE.
News December 9, 2025
காதலியின் சர்ச்சை போட்டோ.. கொந்தளித்த ஹர்திக்

தனது காதலி மஹிகா சர்மாவை ஆபாசமாக போட்டோ எடுத்த புகைப்பட கலைஞர்களை ஹர்திக் பாண்ட்யா கடிந்து கொண்டுள்ளார். பரபரப்புக்காக மலிவான செயலில் ஈடுபடுவது சரியல்ல என்றும், புகைப்பட கலைஞர்கள் பெண்களுக்கு மரியாதை அளிக்க வேண்டும் எனவும் அவர் கூறியுள்ளார். இந்த விஷயத்தில் சிலர் மஹிகா சர்மாவை சாடினாலும், ஆடை சுதந்திரம் என்பது ஒருவரின் தனிப்பட்ட விருப்பம் என்று பலரும் ஆதரவு தெரிவித்துள்ளனர்.


