News March 18, 2024
திருச்சி மக்களே இதை மிஸ் பண்ணாதீங்க

திருச்சியில் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி மற்றும் ஊரக சுய வேலைவாய்ப்பு பயிற்சி நிறுவனம் இணைந்து நடத்தும் துரித உணவுகள் தயாரித்தல் குறித்த இலவச பயிற்சி வகுப்பு நடைபெறுகிறது. 10 நாட்கள் நடைபெறும் இந்த பயிற்சியில் முடித்தவுடன் சான்றிதழ் வழங்கப்படும் என இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் விவரங்களுக்கும் முன்பதிவிற்கும்
8903363396 என்ற எண்ணை அழைக்க கூறப்பட்டுள்ளது.
Similar News
News October 26, 2025
போக்சோ வழக்கு குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை

முசிறி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் கடந்த 22ம் தேதி சிறுமியை கற்பழித்த வழக்கில் பாண்டியன் என்பவர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார். இந்த நிலையில் இந்த வழக்கு திருச்சி மகிளா நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த போது வழக்கை விசாரித்த நீதிபதி சண்முகப்பிரியா, பாண்டியனுக்கு வாழ்நாள் சிறை தண்டனை மற்றும் 20 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து தீர்ப்பளித்தார்.
News October 25, 2025
திருச்சி: B.E முடித்தவர்களுக்கு அரசு வேலை!

Bharat Electronics Limited (BEL) நிறுவனத்தில் காலியாக உள்ள 340 Probationary Engineer (PE) பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது.
1. வகை: மத்திய அரசு வேலை
2. கல்வித் தகுதி: B.E / B.Tech / B.Sc Engineering Degree
3. சம்பளம்: ரூ.40,000 – 1,40,000/-
4. வயது வரம்பு: 21-25
5. கடைசி தேதி : 14.11.2025
6. ஆன்லைனில் விண்ணப்பிக்க: [<
7.அனைவருக்கும் ஷேர் பண்ணி தெரியப்படுத்துங்க!
News October 25, 2025
திருச்சி: இரிடியம் விற்பதாக மோசடி- சிபிசிஐடி விசாரணை

திருச்சி, மருங்காபுரி அருகே உள்ள நெல்லிப்பட்டியைச் சேர்ந்த நல்லமுத்து, சியாமளா தம்பதியினர் இரிடியம் விற்பதாக கூறி மோசடி செய்து வருவதாக கிடைத்த தகவலின் பேரில், சிபிசிஐடி போலீசார் நேற்று அவர்களது வீட்டில் சோதனை செய்தனர். அதில் சில ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக கூறப்படுகிறது. மேலும் விசாரணைக்காக தம்பதியினரை சிபிசிஐடி போலீசார் அழைத்து சென்றுள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


