News April 4, 2024
மக்கள் அடையாளம் காண வேண்டும்

இந்தியா தற்போது மிக முக்கியமான கட்டத்தில் உள்ளதாக ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக தனது X பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், நாட்டை உருவாக்குபவர்கள், நாட்டை அழிப்பவர்கள் இடையே உள்ள வித்தியாசத்தை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும் என வலியுறுத்தியுள்ளார். மேலும், சாதிவாரி கணக்கெடுப்பு, அரசியலமைப்பு உரிமைகளை காங்கிரஸ், INDIA கூட்டணி உறுதியாக செய்யும் எனவும் அவர் கூறியுள்ளார்.
Similar News
News January 12, 2026
வெளியூரில் இருந்தே பொங்கல் பரிசு ₹3,000 வாங்கலாம்

பொங்கல் பரிசு ₹3,000 மட்டுமல்ல தவிர்க்க முடியாத சூழலில் உங்களுடைய ரேஷன் பொருள்களை கூட நீங்கள் நியமிக்கும் ஒருவர், வாங்க முடியும். அதற்கான வழிமுறைகள் TNPDS-ல் உள்ளன. அதற்கு ரேஷன் அட்டையில் இணைக்கப்பட்ட உங்களது செல்போன் எண், நியமிக்கும் நபரின் ஆதார் அவசியம். <
News January 12, 2026
ஒரே மேட்ச்.. 5 மெகா ரெக்கார்டுகள்!

களமிறங்கும் ஒவ்வொரு மேட்ச்சிலும் ஏதோவொரு சாதனையை விராட் கோலி படைத்து கொண்டே இருக்கிறார். NZ-க்கு எதிரான முதல் ODI-ல் அவர் 93 ரன்களில் அவுட்டானது ரசிகர்களுக்கு வருத்தமளித்தாலும், அந்த போட்டியில் மட்டும் அவர் 5 மெகா ரெக்கார்டுகளை படைத்துள்ளார். அவை என்னென்ன என தெரிஞ்சிக்க மேலே உள்ள போட்டோக்களை வலது பக்கமாக Swipe செய்து பார்க்கவும்.
News January 12, 2026
CM ஸ்டாலினை காப்பது துர்காவின் பக்தி: HM

திருப்பரங்குன்றம், குமரன் குன்று கோயில் விவகாரங்களை சுட்டிக்காட்டிய இந்து முன்னனி (HM) மாநில தலைவர் காடேஸ்வரா சுப்ரமணியம், முருகன் CM ஸ்டாலினுக்கு தக்க பாடம் புகட்டுவார் என தெரிவித்துள்ளார். சமீபத்தில் CM-ன் கார் டயர் வெடித்தது, இருக்கையில் பாம்பு இருந்ததாக வெளியான தகவல் அனைத்தும் எச்சரிக்கை மணி என்று கூறிய அவர், மனைவி துர்காவின் பக்தி தான் CM ஸ்டாலினை பாதுகாத்து வருவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.


