News August 8, 2024
மது அரக்கன் பிடியில் மக்கள்: அன்புமணி

மதுவிடமிருந்து மக்கள் மீட்கப்படும் நாள்தான் உண்மை விடுதலை என பாமக தலைவர் அன்புமணி தெரிவித்துள்ளார். வெள்ளையர்களிடமிருந்து நாம் விடுதலை பெற்று விட்டாலும் மது அரக்கனிடமிருந்து இன்னும் விடுதலை பெறவில்லை என்று விமர்சித்துள்ள அவர், ஆகஸ்ட் 15ஆம் தேதி நடைபெறவுள்ள கிராம சபை கூட்டத்தில், மதுவிலக்கை நடைமுறைப்படுத்த வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் எனக் கூறியுள்ளார்.
Similar News
News October 26, 2025
சாதிவாரி கணக்கெடுப்பு: 15 லட்சம் பேர் புறக்கணிப்பா?

கர்நாடகாவில் கடந்த செப்.22-ல் தொடங்கிய சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு வரும் 31-ம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்நிலையில், இந்த கணக்கெடுப்பை 15 லட்சம் பேர் புறக்கணித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. Infosys நாராயண மூர்த்தி-சுதா தம்பதியும், இந்த கணக்கெடுப்பை புறக்கணித்த நிலையில், CM சித்தராமையா சாடியிருந்தார். கர்நாடகாவில் மொத்தம் உள்ள 6.80 கோடி பேரில், இதுவரை 6.10 கோடி பேர் தகவல் அளித்துள்ளனர்.
News October 26, 2025
ரோஹித் சர்மா Retirement எப்போது? புதிய தகவல்

ரோஹித் சர்மா நடப்பு ஆஸி., தொடருடன் ஓய்வை அறிவிப்பார் என்ற பேச்சு அடிபட்டது. இந்நிலையில், ரோஹித்தின் எதிர்காலம் குறித்து அவருடைய சிறு வயது பயிற்சியாளர் தினேஷ் லாட் கருத்து தெரிவித்துள்ளார். ரோஹித் 2027 WC-ல் விளையாட எண்ணுவதாகவும், அதற்கு பின்பே ஓய்வை அறிவிப்பார் எனவும் தெரிவித்துள்ளார். மேலும், தன்னம்பிக்கையால் மட்டுமே ரோஹித் சர்மா இதுவரை கிரிக்கெட்டில் தொடர்கிறார் எனவும் அவர் கூறியுள்ளார்.
News October 26, 2025
FLASH: முன்கூட்டியே உருவாகிறது ‘மொன்தா’ புயல்

வங்கக்கடலில் நாளை உருவாகும் எனக் கணிக்கப்பட்டிருந்த ‘மொன்தா’ முன்கூட்டியே இன்று மாலை 5:30 மணிக்கு புயலாக வலுப்பெறும் என IMD கணித்துள்ளது. மேலும், இது நாளை மறுநாள் காலை தீவிர புயலாக வலுப்பெற்று அன்றே மாலை அல்லது இரவு ஆந்திராவின் மசூலிப்பட்டினம் – கலிங்கப்பட்டினம் இடையே கரையை கடக்கும் என கூறப்பட்டுள்ளது. இதனிடையே, சென்னை, திருவள்ளூரில் நாளை மிக கனமழைக்கான எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.


