News March 18, 2025

வீடுகளை விட்டு மக்கள் வெளியே வர தடை!

image

நாக்பூரில் அவுரங்கசீப் சமாதியை அகற்றக் கோரி நடந்த போராட்டத்தில் வன்முறை வெடித்ததால் நகரின் பல்வேறு பகுதிகளில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மருத்துவ காரணங்கள் தவிர, வேறு எதற்காகவும் மக்கள் வீடுகளை விட்டு வெளியே வரக்கூடாது என உத்தரவிடப்பட்டுள்ளது. வன்முறை பாதித்த பகுதிகளில் சாலைகள் மூடப்பட்டுள்ளன. முகமூடி அணிந்து வந்தவர்கள்தான் கலவரத்தில் ஈடுபட்டதாக நேரில் பார்த்தவர்கள் கூறியுள்ளனர்.

Similar News

News July 6, 2025

2026-ல் திமுகவுக்கு இருக்கும் பாதகம்?

image

ஆட்சியை தக்க வைக்க வேண்டும் என <<16963562>>திமுகவும்<<>>, ஆட்சியை கைப்பற்ற அதிமுகவும் கங்கணம் கட்டி தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டுள்ளன. குறிப்பாக, பல்வேறு அரசின் திட்டங்கள் திமுகவுக்கு சாதகமாக இருந்தாலும், சட்டம்-ஒழுங்கு பிரச்னை பாதகமாக இருக்கிறது. அதேபோல், 2021-ல் தேர்தல் வாக்குறுதியில் கொடுத்த மாத மாதம் மின் கணக்கீடு, பழைய ஓய்வூதிய திட்டம், நீட் தேர்வு ரத்து உள்ளிட்டவைகளை நிறைவேற்றாதது பாதகமாக உள்ளன.

News July 6, 2025

IBPS: 1,007 பணியிடங்கள் அறிவிப்பு

image

வங்கிகளில் காலியாக உள்ள Scale 1 அளவிலான 1,007 சிறப்பு அதிகாரி பணியிடங்களுக்கான அறிவிப்பை IBPS வெளியிட்டுள்ளது. பொறியியல் படித்தோரும் இதற்கு விண்ணப்பிக்கலாம். முதல்நிலைத் தேர்வு, முதன்மைத் தேர்வு & நேர்காணல் அடிப்படையில் செலக்‌ஷன் நடைபெறும். சம்பளம்: ₹48,480 – ₹85,920. விண்ணப்பிக்க கடைசி நாள்: ஜூலை 21. இதுகுறித்து மேலும் அறிய & விண்ணப்பிக்க இங்கே <>கிளிக்<<>> செய்யுங்கள்.

News July 6, 2025

நடிகை கைலி பேஜ் மரணம்.. போதை மருந்து காரணமா?

image

ஆபாச படங்களில் நடித்து பிரபலமடைந்த இளம் நடிகை கைலி பேஜ்(28) கடந்த 3-ம் தேதி லாஸ் ஏஞ்சல்ஸில் உள்ள தனது வீட்டில் சடலமாக கிடந்தார். 2016 முதல் 200-க்கும் மேற்பட்ட வீடியோக்கள் மூலம் உலகம் முழுவதும் அறியப்பட்ட இவருக்கு பலரும் இரங்கல் கூறி வருகின்றனர். இந்நிலையில், TMZ சினிமா வலைத்தள தகவலின்படி அவர் அளவுக்கு அதிகமாக போதை மருந்து எடுத்ததே உயிர்போக காரணமாக இருக்கலாம் என கூறப்படுகிறது. Say no to drugs

error: Content is protected !!