News March 18, 2025
வீடுகளை விட்டு மக்கள் வெளியே வர தடை!

நாக்பூரில் அவுரங்கசீப் சமாதியை அகற்றக் கோரி நடந்த போராட்டத்தில் வன்முறை வெடித்ததால் நகரின் பல்வேறு பகுதிகளில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மருத்துவ காரணங்கள் தவிர, வேறு எதற்காகவும் மக்கள் வீடுகளை விட்டு வெளியே வரக்கூடாது என உத்தரவிடப்பட்டுள்ளது. வன்முறை பாதித்த பகுதிகளில் சாலைகள் மூடப்பட்டுள்ளன. முகமூடி அணிந்து வந்தவர்கள்தான் கலவரத்தில் ஈடுபட்டதாக நேரில் பார்த்தவர்கள் கூறியுள்ளனர்.
Similar News
News September 22, 2025
நடிகை ராதிகா வீட்டில் துயரம்.. CM ஸ்டாலின் இரங்கல்

மறைந்த நடிகர் எம்.ஆர். ராதாவின் மனைவியும், நடிகை ராதிகாவின் தாயாருமான கீதா ராதாவின் மறைவுக்கு CM ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். அவரது பிரிவால் வாடும் சகோதரி ராதிகா சரத்குமார் உள்ளிட்ட குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்துக் கொள்வதாக அவர் குறிப்பிட்டுள்ளார். நயினார் நாகேந்திரன், தங்கம் தென்னரசு ஆகியோரும் கீதா ராதாவின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளனர். RIP
News September 22, 2025
போன் Back case-ல பணம் வைக்குறீங்களா? ஜாக்கிரதை!

போன் Back case-ல் ரூபாய் நோட்டுகளை (அ) கிரெடிட் கார்டுகளை வைப்பவரா நீங்கள்? இதனால் உங்கள் போன் வெடிக்கலாம் என நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். இப்படி செய்வதால் போனில் உருவாகும் வெப்பம் வெளியாகாமல் தடைபடுகிறது. இதனால் நாளடைவில் பேட்டரிகள் வீங்கும், சில சமயங்களில் அது வெடிக்கலாம் என்கின்றனர். மேலும், போனில் உருவாகும் வெப்பம் ATM கார்டுகளை சேதப்படுத்துகின்றன. எனவே இப்படி பண்ணாதீங்க. SHARE.
News September 22, 2025
அதிமுக வெற்றிக்கு அணில் போல உதவுங்கள்

MGR-க்கு கூடிய கூட்டம் யாருக்கும் கூடாது என்றும் எந்த கூட்டத்தையும் கண்டு அதிமுகவினர் பயப்பட வேண்டாம் எனவும் செல்லூர் ராஜு கூறியுள்ளார். மதுரை அதிமுக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்தில் பேசிய அவர், ராமர் பாலத்தை கட்ட உதவியதாக கூறப்படும் அணில் போல, 2026-ல் அதிமுக ஆட்சியமைக்க இளைஞர்கள் உதவ வேண்டும் என்றார். அப்போது, நீங்கள் வேற அணிலை நினைத்துவிடாதீர்கள் என கூறி விஜய்யை மறைமுகமாக சீண்டினார்.