News March 18, 2025

வீடுகளை விட்டு மக்கள் வெளியே வர தடை!

image

நாக்பூரில் அவுரங்கசீப் சமாதியை அகற்றக் கோரி நடந்த போராட்டத்தில் வன்முறை வெடித்ததால் நகரின் பல்வேறு பகுதிகளில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மருத்துவ காரணங்கள் தவிர, வேறு எதற்காகவும் மக்கள் வீடுகளை விட்டு வெளியே வரக்கூடாது என உத்தரவிடப்பட்டுள்ளது. வன்முறை பாதித்த பகுதிகளில் சாலைகள் மூடப்பட்டுள்ளன. முகமூடி அணிந்து வந்தவர்கள்தான் கலவரத்தில் ஈடுபட்டதாக நேரில் பார்த்தவர்கள் கூறியுள்ளனர்.

Similar News

News March 18, 2025

தீவிரவாதிகளுக்கு புகலிடம்: குமுறும் பாக்., மக்கள்

image

பாகிஸ்தானில் லஷ்கர் இ தொய்பாவின் அபு சிந்தி கொல்லப்பட்டது, மும்பை தாக்குதல் சதிகாரன் ஹபீஸ் சையதுக்கு குறிவைக்கப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அங்குள்ள பிரபல யூடியூபர் சுஹெய்ப் நடத்திய விவாதத்தில் கலந்து கொண்ட மக்கள், நிழல் உலக தாதா தாவூத் இப்ராஹிம், ஹபீஸ் சையத் போன்ற தீவிரவாதிகளுக்கு ஏன் புகலிடம் தர வேண்டும். இந்தியாவை போல் ஏன் வளர்ச்சியில் கவனம் செலுத்தவில்லை என கேள்வி எழுப்பினர்.

News March 18, 2025

அமேசான், ஃபிளிப்கார்ட் சேமிப்புக் கிடங்குகளில் ரெய்டு

image

அமேசான், ஃபிளிப்கார்ட் நிறுவனங்களின் சேமிப்புக் கிடங்குகளில் இந்திய தர நிர்ணய ஆணையம் (BIS) ரெய்டு நடத்தியுள்ளது. தரம் குறைந்த பொருள்கள் விற்பனை செய்வதாக எழுந்த குற்றச்சாட்டுகளின் அடிப்டையில், நாடு முழுவதும் உள்ள கிடங்குகளில் இந்த ரெய்டு நடத்தப்பட்டதாக BIS அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். எலக்ட்ரிக் பொருள்கள், வாட்டர் பாட்டில்கள் என 100க்கும் அதிகமான பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

News March 18, 2025

உலகை உலுக்கும் புகைப்படங்கள்.. கண்ணீர்

image

காசாவில் இஸ்ரேல் நடத்திய கோரத் தாக்குதலில் இதுவரை 300 பேர் இறந்துள்ளனர். எந்த பக்கம் திரும்பினாலும் சிறுவர்கள், பெண்கள் என அப்பாவி மக்களின் உடல்கள் சிதறிக் கிடக்கின்றன. இறந்தவர்களின் உடல்களை பார்த்து உறவினர்கள் கதறும் சத்தம் நெஞ்சை ரணமாக்குகிறது. இதுதொடர்பான <>Video <<>>& Photo-களை வெளியிடும் நெட்டிசன்கள், ‘எந்த நாட்டு மக்களுக்கும் இதுபோன்ற மோசமான நிலை வந்துவிடக்கூடாது’ என கண்ணீருடன் பதிவிடுகின்றனர்.

error: Content is protected !!