News May 16, 2024
கெஜ்ரிவால் சிறைக்கு சென்றதால் மக்கள் மகிழ்ச்சி

சிறைக்கு சென்றபின் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் மனக் குழப்பத்தில் இருப்பதாக உ.பி முதல்வர் யோகி ஆதித்யநாத் கூறியுள்ளார். இது குறித்து பேசிய அவர், துடைப்பத்தை (ஆம் ஆத்மி சின்னம்) கையில் எடுத்த கெஜ்ரிவால் அதை வைத்து அன்னா ஹசாரேவின் கனவை துடைத்து விட்டார் என விமர்சித்துள்ளார். மேலும், மதுபானக் கொள்கை முறைகேட்டு வழக்கில் அவர் சிறைக்கு சென்ற பின் டெல்லி மக்கள் நிம்மதியாக இருந்தனர் என்றார்.
Similar News
News November 24, 2025
நாளை பள்ளிகள் விடுமுறையா? கலெக்டர்களுக்கு உத்தரவு

தமிழகத்தில் 3 நாள்கள் மிக கனமழைக்கான எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால், கலெக்டர்களுக்கு முக்கிய உத்தரவு பறந்துள்ளது. டெல்டா & தென் மாவட்டங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள அரசு அறிவுறுத்தியுள்ளது. நேற்று இதேபோல் கலெக்டர்களுக்கு அறிவுறுத்தப்பட்டதை தொடர்ந்து, பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. இதனால், நாளையும் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட வாய்ப்புள்ளது. SHARE IT.
News November 24, 2025
உரிய நேரத்தில் கூட்டணி பற்றி அறிவிப்போம்: பிரேமலதா

சட்டமன்ற தேர்தலில் தேமுதிக முத்திரை பதிக்கும் என்று பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார். அதிமுகவுடனான <<18372669>>கூட்டணி<<>> முறிந்து போனதாக கூறுவதில் உண்மையில்லை என தெரிவித்திருந்த அவர், உரிய நேரத்தில் கூட்டணி குறித்த அறிவிப்பை அதிகாரப்பூர்வமாக வெளியிடுவோம் என்று கூறியுள்ளார். தேமுதிக இடம்பெறும் கூட்டணியே தேர்தலில் வெற்றி பெறும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
News November 24, 2025
இது நியாயமா கவுதம் கம்பீர்?

எவ்வித காரணமும் இன்றி வாஷிங்டன் சுந்தரின் பேட்டிங் வரிசையை கம்பீர் மாற்றுவதாக ரசிகர்கள் சாடுகின்றனர். கடந்த 7 இன்னிங்ஸில் அவர் வெவ்வேறு வரிசையில் களமிறங்கியுள்ளார். கொல்கத்தா டெஸ்ட்டில் ஒன் டவுன் வீரராக இறங்கி சரியான டெக்னிக்குடன் சுழலை எதிர்கொண்ட சுந்தர், கவுஹாத்தி டெஸ்ட்டில் 8-வது வரிசையில் இறங்கினார். அடிக்கடி chop & change செய்வது வீரர்கள் மனதில் இன்செக்யூரிட்டியை ஏற்படுத்த வாய்ப்புள்ளது.


