News May 16, 2024

கெஜ்ரிவால் சிறைக்கு சென்றதால் மக்கள் மகிழ்ச்சி

image

சிறைக்கு சென்றபின் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் மனக் குழப்பத்தில் இருப்பதாக உ.பி முதல்வர் யோகி ஆதித்யநாத் கூறியுள்ளார். இது குறித்து பேசிய அவர், துடைப்பத்தை (ஆம் ஆத்மி சின்னம்) கையில் எடுத்த கெஜ்ரிவால் அதை வைத்து அன்னா ஹசாரேவின் கனவை துடைத்து விட்டார் என விமர்சித்துள்ளார். மேலும், மதுபானக் கொள்கை முறைகேட்டு வழக்கில் அவர் சிறைக்கு சென்ற பின் டெல்லி மக்கள் நிம்மதியாக இருந்தனர் என்றார்.

Similar News

News December 1, 2025

தி.மலை: தலைகுப்புற அரசு பேருந்து கவிழ்ந்து விபத்து!

image

கலசபாக்கம் வட்டம் தென் பள்ளிப்பட்டு அருகே சாலையில் வாகனத்தை முந்த முயன்ற ஆந்திரா காரின் மீது மோதாமல் இருக்க ஒதுங்கிய அரசு பேருந்து நிலை தடுமாறி சாலை ஓரம் கவிழ்ந்தது. பேருந்தில் பயணிகள் குறைவாக இருந்ததால் யாருக்கும் பெரிய அளவில் பாதிப்பு ஏற்படவில்லை. மேலும், பேருந்தை மீட்க வந்த கிரேனும் கவிழ்ந்ததால், கூடுதல் கிரேன்கள் வரவழைக்கப்பட்டு பேருந்தும் கிரேனும் மீட்கப்பட்டது.

News December 1, 2025

Sports 360°: கால்பந்தில் கலக்கும் இந்தியா

image

*U-17 ஆசிய கோப்பை கால்பந்து குவாலிஃபையர் போட்டியில் IND 2-1 என்ற கோல் கணக்கில் IRN-ஐ வீழ்த்தியது. *சுல்தான் அஸ்லான் ஷா கோப்பை ஹாக்கியின் இறுதிப்போட்டியில் பெல்ஜியத்திடம் 1-0 என்ற கோல் கணக்கில் இந்தியா தோல்வி. *ITTF யூத் டேபிள் டென்னிஸ் சாம்பியன்ஷிப்பில் இந்தியாவின் திவ்யான்ஷி வெண்கலம் வென்றார். *சையத் மோடி பேட்மிண்டன், மகளிர் இரட்டையரில் இந்தியாவின் காயத்ரி கோபிசந்த் & த்ரிஷா ஜோலி இணை சாம்பியன்.

News December 1, 2025

டிட்வா புயல்.. இன்று கனமழை பொழியுமா?

image

டிட்வா புயல் கரையை கடக்காமல், கடலோரப்பகுதிகள் வழியாக சென்று வலுவிழந்துள்ளது. இதைத்தொடர்ந்து சென்னை அல்லது நெல்லூர் அருகே தாழ்வு மண்டலமாகவோ, தாழ்வுப்பகுதியாகவோ இன்று நிலைகொள்ள வாய்ப்புள்ளது. அவ்வாறு நிலைகொண்டால், சென்னை உள்ளிட்ட வடமாவட்டங்களில் மழைக்கான சூழல் ஏற்படும். அதன் பிறகு மீண்டும் கிழக்கு திசை காற்று தமிழக பகுதிகளை நோக்கி வந்து, ஓரிரு இடங்களில் கனமழை பெய்யும் என கணிக்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!