News April 5, 2025
அமைதி பாதை.. நக்சல்களுக்கு அமித்ஷா வேண்டுகோள்

ஆயுதங்களை கீழே போட்டு அமைதி பாதைக்கு திரும்பும்படி நக்சலைட் தீவிரவாதிகளுக்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா மீண்டும் வேண்டுகோள் விடுத்துள்ளார். சத்தீஸ்கர் மாநிலம் தண்டேவாடாவில் நடந்த நிகழ்ச்சியில் பேசிய அவர், என்கவுன்ட்டரில் நக்சல்கள் கொல்லப்படுவதை யாரும் விரும்பவில்லை என்றார். நக்சல் தீவிரவாதம் இல்லாத கிராமத்திற்கு வளர்ச்சிப் பணிக்காக ரூ.1 கோடி அளிக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.
Similar News
News December 31, 2025
2025-ன் கடைசி சூரிய அஸ்தமனம்!

புத்தாண்டு என்பதை தாண்டி 2025-ம் ஆண்டின் கடைசி நாள் பலரை உணர்ச்சிவசப்பட செய்துள்ளது. அந்த வகையில் ஆண்டின் கடைசி சூரிய அஸ்தமனத்தை காண நாட்டின் கடற்கரைகள், மலை பகுதிகளில் மக்கள் குவிந்து வருகின்றனர். இந்நிலையில் இந்தாண்டின் கடைசி சூரிய அஸ்தமனம் முதலில் அருணாச்சலில் நடந்துள்ளது. அதேபோன்று இந்தியாவிலேயே இங்கு தான் புத்தாண்டின் முதல் சூரிய உதயம் நிகழும் என்பதும் குறிப்பிடத்தக்கது. Bye Bye 2025!
News December 31, 2025
இன்று இரவு சரக்கு அடிப்பவர்களே.. உங்களுக்காக

இந்த ஆண்டின் கடைசி நாளான இன்று ஒருநாள் மட்டும்தான் குடித்துக்கிறேன்; நாளை முதல் சரக்கை கையில் கூட தொட மாட்டேன் என்று பலரும் சத்தியம் செய்வார்கள். அப்படித்தான் பலர் தற்போது டாஸ்மாக் கடைகளில் நோக்கி கூட்டம் கூட்டமாக படையெடுக்க தொடங்கியுள்ளனர். இந்நிலையில், பார்ட்டி நடத்தினாலும், டி.ஜே மியூசிக் மற்றும் சாலைகளில் வீலிங் செய்தாலும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என TN போலீசார் எச்சரித்துள்ளனர்.
News December 31, 2025
’தமிழ்நாடு’ – நீக்கியது ஜெயலலிதா தான்: சிவசங்கர்

அரசு பஸ்களில் தமிழ்நாடு என்ற பெயர் நீக்கப்பட்டதற்கு ஜெயலலிதா தான் காரணம் என அமைச்சர் சிவசங்கர் பேசியுள்ளார். பஸ்களில் தமிழ்நாடு இல்லாததை கண்டித்து சீமான் தொடர் போராட்டம் நடத்தி வருகிறார். இந்நிலையில் அரியலூரில் பேசிய சிவசங்கர், தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் என்று கருணாநிதி வைத்த பெயரை, நீளமாக இருக்கிறது என்று கூறி, அதில் தமிழ்நாடு நீக்கப்பட்டது ஜெயலலிதா ஆட்சியில் தான் எனத் தெரிவித்துள்ளார்.


