News May 15, 2024
புதிய பயனாளிகளுக்கு ஜூலையில் பணம்?

மகளிர் உரிமைத் தொகை ₹1000 இன்று வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், தகுதி இருந்தும் சிலருக்கு பணம் கிடைக்கவில்லை. அவர்களது விவரம் குறித்து தமிழக அரசு ஏற்கெனவே விண்ணப்பங்களைப் பெற்றுள்ள நிலையில், ஜூலை மாதம் முதல் விடுபட்டவர்களுக்கு ₹1000 கிடைக்கும் எனத் தகவல் வெளியாகியுள்ளது. இதனிடையே, விடுபட்ட தங்களுக்கு பணம் கிடைக்க செய்யுமாறு தமிழக அரசுக்கு பெண்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Similar News
News November 23, 2025
உதயநிதிக்கு போதிய புரிதல்: அண்ணாமலை

விளையாட்டுதுறை அமைச்சராக உதயநிதி இதுவரை என்ன சாதனை செய்தார் என தெரியவில்லை என்று அண்ணாமலை கேள்வியெழுப்பினார். பொதுமக்களிடம் பெற்ற புகார் மனுக்களில் எத்தனை தீர்த்து வைத்தோம் என்பதை பற்றியெல்லாம் DCM பேசமாட்டார் என்ற அவர், ஆனால் சமஸ்கிருதம் செத்து மொழி என பேசியதை திரும்பி திரும்பி பேசிக்கொண்டிருக்கிறார் என்றும் சாடினார். மேலும் பொது விவகாரங்கள் பற்றிய புரிதல் அவருக்கு இல்லை எனவும் சாடினார்.
News November 23, 2025
தமிழ்நாட்டில் ஓர் செவ்வாய் கிரகம் PHOTOS

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள தேரிக்காடு, இந்தியாவின் மிகவும் ஆச்சரியமான நிலப்பரப்புகளில் ஒன்றாக உள்ளது. சுமார் 500 சதுர கி.மீ., பரப்பளவில் பரந்து விரிந்திருக்கும் இந்த சிவப்பு பாலைவனம், இரும்பு நிறைந்த மணல் மற்றும் நகரும் குன்றுகளுடன் கிட்டத்தட்ட செவ்வாய் கிரகத்தைப் போலவே இருக்கிறது. இந்த பகுதி, ஒருகாலத்தில் கடலுக்கு அடியில் இருந்ததாக விஞ்ஞானிகள் கூறுகின்றனர். இதன் போட்டோஸ் மேலே உள்ளன. SHARE
News November 23, 2025
தைவானை தாக்க தயாராகும் சீனா

சிவிலியன் கப்பல்களை பயன்படுத்தி தைவானை தாக்க சீனா தயாராகி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. ராணுவ பயிற்சிக்காக சீனா சிவிலியன் கப்பல்களை பயன்படுத்துவது இந்த செய்தியை உறுதிப்படுத்துவதாக உள்ளது. மேலும், தைவான் மீது சைபர் தாக்குதல்கள் மூலமாக பொருளாதார அழுத்தம் கொடுக்க தொடங்கியுள்ளதுடன், போர் ஒத்திகையையும் சீனா தீவிரப்படுத்தி உள்ளதாக கூறப்படுகிறது. இதனால், அப்பகுதியில் பதற்றம் அதிகரித்துள்ளது.


