News May 15, 2024
புதிய பயனாளிகளுக்கு ஜூலையில் பணம்?

மகளிர் உரிமைத் தொகை ₹1000 இன்று வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், தகுதி இருந்தும் சிலருக்கு பணம் கிடைக்கவில்லை. அவர்களது விவரம் குறித்து தமிழக அரசு ஏற்கெனவே விண்ணப்பங்களைப் பெற்றுள்ள நிலையில், ஜூலை மாதம் முதல் விடுபட்டவர்களுக்கு ₹1000 கிடைக்கும் எனத் தகவல் வெளியாகியுள்ளது. இதனிடையே, விடுபட்ட தங்களுக்கு பணம் கிடைக்க செய்யுமாறு தமிழக அரசுக்கு பெண்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Similar News
News November 26, 2025
FLASH: ஜெட் வேகத்தில் உயர்ந்த பங்குச்சந்தைகள்!

கடந்த 2 நாள்களாக சரிவிலிருந்த பங்குச்சந்தைகள் இன்று(நவ.26) வர்த்தகம் தொடங்கியது முதலே ஜெட் வேகத்தில் உயர்ந்து வருகின்றன. தற்போதைய நிலவரப்படி சென்செக்ஸ் 666 புள்ளிகள் உயர்ந்து 85,253 புள்ளிகளிலும், நிஃப்டி 210 புள்ளிகள் உயர்ந்து 26,095 புள்ளிகளிலும் வர்த்தகமாகின்றன. JSW Steel, Adani Ports, Trent, TMPV, Axis Bank நிறுவனங்களின் பங்குகள் 2 – 4% உயர்ந்துள்ளதால் முதலீட்டாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
News November 26, 2025
5 விக்கெட்கள் காலி.. தடுமாறும் இந்தியா

549 என்ற இமாலய இலக்கை நோக்கி களமிறங்கியுள்ள இந்திய அணி, மிக மோசமான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. 5-ம் நாள் ஆட்டம் தொடங்கியதில் இருந்தே தொடர்ந்து விக்கெட்களை இந்தியா இழந்து வருகிறது. குல்தீப் 5, கேப்டன் பண்ட் 13, ஜுரேல் 2 என சொற்ப ரன்களுக்கு அவுட்டாகியுள்ளனர். இந்திய அணி தற்போது 60/5 எடுத்துள்ளது. களத்தில் சுதர்சன் 8, ஜடேஜா 2 ரன்களுடன் களத்தில் உள்ளனர்.
News November 26, 2025
மாநிலங்களின் உரிமையை காக்க அனைத்தும் செய்வோம்: CM

இந்தியா, ஒரு சித்தாந்தத்திற்கோ கலாசாரத்திற்கோ சொந்தமானதல்ல, அது அனைவருக்கும் சொந்தம் என CM ஸ்டாலின் பதிவிட்டுள்ளார். அம்பேத்கரின் பார்வையை சுருக்க முயற்சிக்கும் சக்தியை எதிர்ப்போம் என்ற அவர், சமத்துவம், சகோதரத்துவத்தை பாதுகாக்க வேண்டும் என அறிவுறுத்தியுள்ளார். மேலும், அரசியலமைப்பின்படி கூட்டாட்சியை நிலைநிறுத்தவும், மாநில உரிமைகளை பாதுகாக்கவும் அனைத்தையும் செய்வோம் என்றும் குறிப்பிட்டுள்ளார்.


