News April 18, 2025
வியக்க வைக்கும் பவன் கல்யாணின் மனிதநேயம்

நடிகரும் ஆந்திராவின் துணை முதல்வருமான பவன் கல்யாண் செய்த ஒரு காரியம் பலரை நெகிழ்ச்சியடைய வைத்துள்ளது. சமீபத்தில்
பழங்குடி கிராமமான பெடபாடுவுக்கு சென்றிருந்த அவர் வயதான பெண்கள் உள்பட பலர் காலில் செருப்பின்றி இருந்ததை கண்டுள்ளார். உடனடியாக அந்த கிராமத்தில் இருக்கும் 350 பேருக்கு செருப்பு வாங்கி கொடுக்க முடிவு செய்து, அதை நிறைவேற்றியும் உள்ளார். யார் சாமி இவர்?
Similar News
News November 26, 2025
இன்று மதியம் புயல் உருவாகிறது

மலாக்கா ஜலசந்தி பகுதிகளில் வலுப்பெற்ற காற்றழுத்த தாழ்வு மண்டலம், மேற்கு-வடமேற்கு நோக்கி நகர்ந்து, இன்று (நவ.26) மதியம் புயலாக தீவிரமடையும் என IMD கணித்துள்ளது. தென்மேற்கு வங்கக்கடலில் நிலவும் காற்றழுத்த தாழ்வு பகுதி, 12 மணிநேரத்தில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக மாறி, 24 மணிநேரத்தில் தாழ்வு மண்டலமாக வலுப்பெறக்கூடும் என்றும் தெரிவித்துள்ளது. எனவே, தென் & வட மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளது.
News November 26, 2025
நவம்பர் 26: வரலாற்றில் இன்று

*அரசியல் சாசன தினம்.
*1949 – அம்பேத்கர் சமர்ப்பித்த இந்தியாவின் அரசியலமைப்புச் சட்டத்தை இந்திய அரசியலமைப்பு நிர்ணய மன்றம் ஏற்றுக்கொண்டது.
*1954 – விடுதலைப் புலிகள் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் பிறந்தநாள்.
*1957 – சாதியை பாதுகாக்கும் இந்திய அரசியல் சட்டப் பிரிவுகளை தீயிடும் போராட்டத்தை பெரியார் தொடங்கி வைத்தார். *2008 – மும்பை தீவிரவாத தாக்குதலில் 166 பேர் கொல்லப்பட்டனர்.
News November 26, 2025
இளையராஜாவுக்கு நன்றி என்று போடலாமே: கங்கை அமரன்

இளையராஜாவிடம் கேட்டாலே அவருடைய பாடல்களுக்கு காப்பிரைட் கொடுத்துவிடுவார் என கங்கை அமரன் கூறியுள்ளார். தான் இசையமைத்த பாடல்கள் வேறு படங்களில் பயன்படுத்தப்படுவதற்கு எதிராக இளையராஜா காப்பிரைட் வழக்கு தொடர்வது விமர்சனத்திற்கு உள்ளாகிறது. இந்நிலையில், இதுகுறித்து விளக்கம் அளித்துள்ள கங்கை அமரன், படத்தில் இந்த பாடலை வழங்கிய இளையராஜாவுக்கு நன்றி என்று போட்டால் என்ன தவறு என்றும் கேள்வி எழுப்பினார்.


