News June 21, 2024

பவன் கல்யாண் வென்றதால் பெயர் மாற்றிய வேட்பாளர்

image

ஆந்திராவின் பிதாபுரம் தொகுதியில் பவன் கல்யாணை எதிர்த்து, ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் சார்பில் முத்ரகடா பத்மநாபம் பேட்டியிட்டார். பிரசாரத்தின் போது, பவன் கல்யாணிடம் தோற்றால் தனது பெயரை மாற்றிக் கொள்வதாக மேடை தோறும் சபதமிட்டு வந்தார். இந்நிலையில், பவன் கல்யாண் வெற்றி பெற்றது மட்டுமின்றி, துணை முதல்வராகவும் ஆகிவிட்டார். இந்நிலையில், முத்ரகடா பத்மநாபம் என்ற பெயரை ‘பத்மநாப ரெட்டி’ என மாற்றிக் கொண்டுள்ளார்.

Similar News

News September 16, 2025

மீனவர்கள் மீது திமுகவுக்கு அக்கறையில்லை: நயினார்

image

திமுக தேர்தல் அறிக்கையில் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை என தொடர்ச்சியாக பாஜக விமர்சித்து வருகிறது. அதன் ஒருபகுதியாக, மீனவர்களுக்கு 2 லட்சம் புது வீடுகள் கட்டித்தரப்படும் என சொன்னீங்களே, செஞ்சீங்களா என நயினார் நாகேந்திரன் கேள்வி எழுப்பியுள்ளார். பல கோடி செலவில் பேனா சிலை அமைக்க ஆர்வம் காட்டும் திமுக, 4 ஆண்டுகளாக மீனவர்களுக்கென ஒரு வீடு கூட கட்டித்தரவில்லை என விமர்சித்துள்ளார்.

News September 16, 2025

இன்றைய நல்ல நேரம்

image

▶செப்டம்பர் 16, ஆவணி 31 ▶கிழமை: செவ்வாய் ▶நல்ல நேரம்: 7:45 AM – 8:45 AM & 4.45 PM – 5.45 PM ▶கெளரி நல்ல நேரம்: 10:45 AM – 11:45 AM & 7:30 PM – 8:30 PM ▶ராகு காலம்: 3:00 AM – 4:30 AM ▶எமகண்டம்: 9:00 AM – 10:30 AM ▶குளிகை: 12:00 PM – 1:30 PM ▶திதி: தசமி ▶சூலம்: வடக்கு ▶பரிகாரம்: பால் ▶பிறை: தேய்பிறை.

News September 16, 2025

பணியிட அவமானத்தால் தற்கொலை: ₹90 கோடி இழப்பீடு

image

பணியிடத்தில் அவமானப்படுத்தியதால் தற்கொலை செய்த பெண்ணின் குடும்பத்தாருக்கு, சம்பந்தப்பட்ட நிறுவனம் ₹90 கோடி இழப்பீடு வழங்க ஜப்பான் கோர்ட் உத்தரவிட்டுள்ளது. கடந்த 2021-ல் சடோமி (25) என்ற பெண்ணை, நிறுவன தலைவர் தெரு நாய் என கூறி அவமானப்படுத்தியதால் அவர் தற்கொலைக்கு முயன்றுள்ளார். அது தோல்வியில் முடிய, கோமாவில் இருந்த அவர் 2023-ல் உயிரிழந்தார். இதையடுத்து, அப்பெண்ணின் குடும்பத்தார் கோர்ட்டை அணுகினர்.

error: Content is protected !!