News August 19, 2024
மருத்துவர்கள் போராட்டத்தால் நோயாளிகள் அவதி

கொல்கத்தாவில் கடந்த 8ஆம் தேதி மருத்துவ மாணவி பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டது நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்தில் பலருக்கு தொடர்பிருக்கலாம் என சந்தேகிக்கப்படும் நிலையில், சஞ்சய் ராய் என்பவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். இந்த சம்பவத்தை கண்டித்து டெல்லியில் தொடர்ந்து 8ஆவது நாளாக மருத்துவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதால், நோயாளிகள் அவதியடைந்துள்ளனர்.
Similar News
News March 24, 2026
கட்டண உயர்வால் குமுறும் ’ஆன்லைன் உணவு பிரியர்கள்’

<<19434398>>Zomato-வைத் தொடர்ந்து<<>>, Swiggy-யும் தனது பிளாட்பார்ம் கட்டணத்தை ஒரு டெலிவரிக்கு ₹14.99-லிருந்து ₹17.58-ஆக உயர்த்தியுள்ளது. ஏற்கெனவே ஆன்லைனில் ஆர்டர் செய்யும் உணவுகளுக்கு தாறுமாறாக கட்டணம் வசூலிக்கப்படுவதாக குற்றச்சாட்டு உள்ளது. இந்நிலையில் இந்நடவடிக்கையால், Swiggy-யில் இனி ஆர்டர் செய்வதையே நிறுத்திவிடுவோம் என வாடிக்கையாளர்கள் கடும் எதிர்ப்பை பதிவு செய்து வருகின்றனர். உங்கள் ரியாக்சன் என்ன?
News March 24, 2026
புதன்கிழமை பள்ளிகள் விடுமுறை.. கலெக்டர் அறிவிப்பு

பங்குனி உத்திர திருவிழாவையொட்டி, தென்காசி, நெல்லை மாவட்டங்களில் ஏப்.1(புதன்கிழமை) உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், ஏப்.1-ம் தேதி முழு ஆண்டுத் தேர்வும் தொடங்கவிருப்பதால் விடுமுறை கிடைக்குமா என்று பள்ளி மாணவர்களிடையே குழப்பம் ஏற்பட்டது. ஆனால், உள்ளூர் விடுமுறை அறிவிப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு பொருந்தாது என மாவட்ட நிர்வாகங்கள் தெரிவித்துள்ளன. SHARE IT
News March 24, 2026
13 ஆண்டுகளாக கோமாவில் இருந்தவர் மரணம்

‘எங்களை மன்னித்துவிடு’ என பெற்றோர் உருக, என்ன நடக்கிறது என தெரியாமலே சுயநினைவற்று இருந்தான் மகன். இந்த மனதை உருக்கிய காட்சிகள் இணையவாசிகளை சமீபத்தில் ஆக்கிரமித்தது. இந்நிலையில், 13 ஆண்டுகளாக கோமாவில் இருந்த ஹரிஷ் ராணா (32) உயிரிழந்துவிட்டதாக டெல்லி AIIMS கூறியுள்ளது. 2013-ல் கல்லூரி மாடியிலிருந்து தவறி விழுந்த ஹரிஷை <<19390375>>கருணைக் கொலை<<>> செய்ய SC அனுமதி அளித்தது குறிப்பிடத்தக்கது.


