News May 19, 2024
சோன் பப்டியால் சிக்கிய பதஞ்சலி அதிகாரி

உத்தரகாண்டின் பெரினாக் பகுதியில் உள்ள கடையில் உணவு பொருட்களின் தரம் குறித்து 2019இல் புகார் எழுந்த நிலையில், அதன் மாதிரிகள் சோதனை செய்யப்பட்டது. தர சோதனையில் பதஞ்சலி நிறுவன சோன் பப்டி தரமற்றது என தெரியவந்ததை அடுத்து, அந்நிறுவனத்தின் உதவி பொது மேலாளர், கடை உரிமையாளர் உட்பட மூவர் கைது செய்யப்பட்டனர். இந்நிலையில், அவர்களுக்கு உத்தரகாண்ட் நீதிமன்றம் 6 மாத சிறை தண்டனையோடு அபராதமும் விதித்துள்ளது.
Similar News
News September 13, 2025
இனி ஷாம்பு முதல் ஹார்லிக்ஸ் வரை விலை குறைகிறது!

ஜிஎஸ்டி வரம்பு மாற்றத்தை அடுத்து ஹிந்துஸ்தான் யுனிலிவர் தனது பொருள்களின் விலையை அதிரடியாக குறைத்துள்ளது. அதன்படி, ஹார்லிக்ஸ், ப்ரூ காப்பித்தூள், டவ் ஷாம்பு, கிசான் ஜாம், லக்ஸ் சோப், லைஃப் பாய் சோப் உள்ளிட்டவற்றின் விலை செப்.22-ம் தேதி முதல் குறைக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. பொருள்களின் மாற்றியமைக்கப்பட்ட விலையை மேலே உள்ள போட்டோஸை ஸ்வைப் செய்து தெரிந்து கொள்ளுங்கள்.
News September 13, 2025
திமுகவை சீண்டிய விஜய்

விஜய் தனது முதல் பரப்புரையை, திமுக எதிர்ப்புடனேயே தொடங்கியுள்ளார். 2021-ல் கொடுத்த வாக்குறுதிகளை திமுக நிறைவேற்றவில்லை என அவர் குற்றஞ்சாட்டியுள்ளார். பழைய ஓய்வூதிய திட்டம் என்னாச்சு? மாதந்திர மின்கட்டண கணக்கீடு என்னாச்சு? மாணவர்களின் கல்விக் கடன் ரத்து என்னாச்சு? என அடுக்கடுக்காக கேள்விகளை எழுப்பிய விஜய், நாம் கேட்டுக்கொண்டே இருந்தாலும் அவர்களிடம் பதில் இல்லை என சாடியுள்ளார்.
News September 13, 2025
தொண்டர்களாக மாற மறுக்கும் ரசிகர்கள்?

விஜய் அரசியல் கட்சி தொடங்கி ஒன்றரை ஆண்டாகிவிட்டது. இன்னும் கட்சி சார்ந்த நிகழ்வுகளுக்கு செல்லும் தவெக தொண்டர்கள், தியேட்டருக்கு செல்வது போன்ற மனநிலையிலேயே உள்ளனர். விஜய்யின் பேச்சை மீறி குழந்தைகளை கட்சி நிகழ்ச்சிகளுக்கு அழைத்துச் செல்வது, அருகில் இருக்கும் கட்டடங்கள், மரங்கள் மீதேறி அலப்பறை செய்வது போன்ற நிலையே தொடர்கிறது. இன்றைய சம்பவங்களும் அதையே சொல்கின்றன. தேர்தலுக்குள் இந்த நிலை மாறுமா?