News May 19, 2024
சோன் பப்டியால் சிக்கிய பதஞ்சலி அதிகாரி

உத்தரகாண்டின் பெரினாக் பகுதியில் உள்ள கடையில் உணவு பொருட்களின் தரம் குறித்து 2019இல் புகார் எழுந்த நிலையில், அதன் மாதிரிகள் சோதனை செய்யப்பட்டது. தர சோதனையில் பதஞ்சலி நிறுவன சோன் பப்டி தரமற்றது என தெரியவந்ததை அடுத்து, அந்நிறுவனத்தின் உதவி பொது மேலாளர், கடை உரிமையாளர் உட்பட மூவர் கைது செய்யப்பட்டனர். இந்நிலையில், அவர்களுக்கு உத்தரகாண்ட் நீதிமன்றம் 6 மாத சிறை தண்டனையோடு அபராதமும் விதித்துள்ளது.
Similar News
News March 6, 2026
இன்று சனிப்பெயர்ச்சி.. இதெல்லாம் செய்யாதீங்க!

இன்று காலை 8.26 மணிக்கு சனிபகவான், கும்பத்தில் இருந்து மீனத்திற்கு செல்கிறார். எனவே, சனிப்பெயர்ச்சி நாளில் செய்யக்கூடாதவை பற்றிய விவரம் *கருப்பு நிற ஆடைகளை அணியக் கூடாது *பகல் நேரத்தில் தூங்கக்கூடாது *அசைவத்தை தவிர்க்கவும் *பிறரிடம் இருந்து கடன் வாங்குவது, நகையை அடமானம் வைக்க கூடாது *யாரிடமும் எந்தவித வாக்குவாதத்திலும் ஈடுபடக் கூடாது *நெகட்டிவான வார்த்தைகளை பேசக் கூடாது
News March 6, 2026
35 சீட்.. தவெக கூட்டணியில் ராமதாஸ்?

NDA-வில் இணைவதற்கு அன்புமணி செக் வைத்ததாலும், திருமாவின் நிலைப்பாட்டால் திமுகவுடன் கூட்டணி அமைக்க முடியாமலும் ராமதாஸ் தவிக்கிறார். சமீபத்தில் தங்களுக்கான வாகனம் வந்துவிட்டதாக அவர் கூறினாலும், அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகவில்லை. இந்நிலையில், பாமகவுக்கு செல்வாக்கு உள்ள 35 தொகுதிகளின் லிஸ்ட்டை ராமதாஸ் தயாரித்துள்ளாராம். அதை விஜய்யிடம் தந்து தவெகவுடன் கூட்டணி சேர முடிவெடுத்துள்ளதாக கூறப்படுகிறது.
News March 6, 2026
6G சேவை.. பின்லாந்துடன் இந்தியா ஒப்பந்தம்

பின்லாந்து அதிபர் அலெக்சாண்டர் ஸ்டப் இந்தியா வந்துள்ள நிலையில், இந்தியா-பின்லாந்து இடையே 3 முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. குடியேற்ற ஒத்துழைப்பு, சுற்றுச்சுழல், புள்ளிவிபரத் துறையில் ஒத்துழைப்பு ஒப்பந்தங்கள் PM மோடி முன்னிலையில் கையெழுத்தானது. இதன் மூலம், இந்தியா-பின்லாந்து இடையே AI, 6ஜி தொலைத்தொடர்பு, எரிசக்தி, குவாண்டம் கம்ப்யூட்டிங் துறைகளில் ஒத்துழைப்பு மேம்படும்.


