News March 18, 2024

கடலூரில் கட்சி கொடி அகற்றினர்

image

தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ள நிலையில் கடலூரில் பல்வேறு பகுதிகளில் கட்சி கொடி கம்பம் இருந்து வந்தன.இதனை அவர்களாகவே எடுத்து கொள்ளும்படி கலெக்டர் அருண் தம்புராஜ் வலியுறுத்தினார். இதனை மீறும் பட்சத்தில் மாவட்ட நிர்வாகம் அதனை அகற்றி விடும் என்று கூறினார் இந்த நிலையில் கடலூர் பாரதி சாலையில் உள்ள கொடிக்கம்பங்களை மாநகராட்சி ஊழியர்கள் அகற்றினர்.

Similar News

News February 18, 2026

கடலூர் மக்களே… முற்றிலும் இலவசம், Don’t Miss It

image

கடலூர் மக்களே கொய்யா, பப்பாளி, எலுமிச்சை உள்ளிட்ட செடிகள், தக்காளி, கத்தரி, மிளகாய், வெண்டை மற்றும் கீரை விதை அடங்கிய விதை தொகுப்பு இலவசமாக வழங்கப்படுகிறது. இதை விவசாயிகள், பொதுமக்கள் பயன் படுத்திக்கொள்ளலாம். விண்ணபிக்க இங்கே <>கிளிக் <<>>செய்யவும் அல்லது உங்கள் அருகில் உள்ள வட்டார தோட்டக்கலை உதவி இயக்குனர் அலுவலகம் மற்றும் ‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாம்களில் பதிவு செய்து பயன் பெறலாம்.SHARE பண்ணுங்க.!

News February 18, 2026

கடலூர்: தலை நசுங்கி ஒருவர் பலி

image

விருத்தாசலம் – தொழுதூர் செல்லும் மாநில நெடுஞ்சாலையில் ஆக்கணூர் அருகே நேற்று (பிப்.17) 2 பைக்குகள் நேருக்கு நேர் மோதி விபத்து ஏற்பட்டது. இதில், ஒருவர் கீழே விழுந்ததில் பின்னால் வந்த லாரி தலையில் ஏறியதால், சம்பவ இடத்திலே தலை நசுங்கி பலியானார்.மேலும் படுகாயத்துடன் 2 பேர் பெரம்பலூர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவ்விபத்து குறித்து ராமநத்தம் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

News February 18, 2026

கடலூர்: கவுன்சிலரின் மனைவி தற்கொலை – போலீஸ் விசாரணை

image

விருத்தாசலம் ஆயியார் மடத்தெருவை சேர்ந்தவர் கருணாநிதி. தேமுதிக நகர பொருளாளரான இவர், விருத்தாசலம் நகரமன்ற கவுன்சிலராகவும் உள்ளார். இவரது மனைவி சத்யாவுக்கு(38) அடிக்கடி உடல்நலம் பாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த சத்யா வீட்டில் தூக்கிட்டு நேற்று தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து விருத்தாசலம் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

error: Content is protected !!