News March 18, 2024
கடலூரில் கட்சி கொடி அகற்றினர்

தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ள நிலையில் கடலூரில் பல்வேறு பகுதிகளில் கட்சி கொடி கம்பம் இருந்து வந்தன.இதனை அவர்களாகவே எடுத்து கொள்ளும்படி கலெக்டர் அருண் தம்புராஜ் வலியுறுத்தினார். இதனை மீறும் பட்சத்தில் மாவட்ட நிர்வாகம் அதனை அகற்றி விடும் என்று கூறினார் இந்த நிலையில் கடலூர் பாரதி சாலையில் உள்ள கொடிக்கம்பங்களை மாநகராட்சி ஊழியர்கள் அகற்றினர்.
Similar News
News November 5, 2025
கடலூர்: வேன் மோதி கொத்தனார் பலி

நெய்வேலி இந்திரா நகரை சேர்ந்தவர் கொத்தனார் கோதண்டபாணி (60). இவர் நேற்று காலை தனது பைக்கில் கீழ் வடக்குத்து பகுதியில் சென்னை- கும்பகோணம் சாலையில் சென்ற போது, எதிரே வந்த வேன் மோதியது. இதில் படுகாயம் அடைந்த கோதண்டபாணி கடலூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார். இதுகுறித்து நெய்வேலி போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.
News November 5, 2025
கடலூர் அருகே சோகம்: கார் மோதி 2 பேர் பலி

கடலூர் அன்னவெளியை சேர்ந்த வடிவேல் (35), பாஸ்கர் (1) மற்றும் பெரியகாட்டு சாகை பகுதியை சேர்ந்த ஜெயராஜ் (45) ஆகியோர் கட்டிட வேலை பார்த்து வந்துள்ளனர். இந்நிலையில் நேற்று மாலை மூவரும் தங்களது வேலையை முடித்துவிட்டு அன்னவெளி பஸ் ஸ்டாண்ட் அருகே உள்ள ஓட்டலில் நின்றுகொண்டிருந்த போது, அவ்வழியாக வேகமாக வந்த கார் மோதியதில் வடிவேல், ஜெயராஜ் ஆகியோர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் பாஸ்கர் படுகாயமடைந்தார்.
News November 5, 2025
கடலூர்: இரவு ரோந்து செல்லும் காவலர்கள் விபரம்

கடலூர் மாவட்ட காவல்துறை சார்பில் மாவட்டத்தில் தினந்தோறும் இரவு ரோந்து பணி நடைபெற்று வருகிறது. அவ்வகையில் நேற்று (நவ.4) இரவு 10 மணி முதல் இன்று (நவ.5) காலை 6 மணி வரை கடலூர் மாவட்டத்தில் கடலூர் உட்பட சிதம்பரம், விருத்தாசலம், நெய்வேலி உள்ளிட்ட இடங்களில் ரோந்து செல்லும் காவல் அலுவலர்கள் தொலைபேசி எண்கள் கடலூர் மாவட்ட காவல் துறை சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை அனைவருக்கும் ஷேர் செய்யுங்கள்.


