News March 18, 2024
கடலூரில் கட்சி கொடி அகற்றினர்

தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ள நிலையில் கடலூரில் பல்வேறு பகுதிகளில் கட்சி கொடி கம்பம் இருந்து வந்தன.இதனை அவர்களாகவே எடுத்து கொள்ளும்படி கலெக்டர் அருண் தம்புராஜ் வலியுறுத்தினார். இதனை மீறும் பட்சத்தில் மாவட்ட நிர்வாகம் அதனை அகற்றி விடும் என்று கூறினார் இந்த நிலையில் கடலூர் பாரதி சாலையில் உள்ள கொடிக்கம்பங்களை மாநகராட்சி ஊழியர்கள் அகற்றினர்.
Similar News
News February 17, 2026
கடலூரில் இயல்பை விட அதிகம் பெய்த மழை!

கடலூர் மாவட்டத்தில் ஜனவரி 1 ஆம் தேதி முதல் இன்று பிப்ரவரி 17ம் தேதி வரை இயல்பாக 34.3 மில்லி மீட்டர் மழை பெய்ய வேண்டும். ஆனால் இன்று வரை 36.6 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது. இதன் மூலம் கடலூர் மாவட்டத்தில் மழை இயல்பை விட 7 சதவீதம் மழை அதிகமாக பதிவாகியுள்ளதாக வானிலை மையம் இன்று (பிப்.17) அறிவித்துள்ளது.
News February 17, 2026
கடலூர் மத்திய சிறையில் செல்போன் பறிமுதல்

கடலூர் கேப்பர் மலையில் உள்ள மத்திய சிறையில் இன்று (பிப்.17) சிறை அலுவலர் பிரகாஷ் மற்றும் போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். அப்போது தண்டனை கைதிகள் அடைக்கப்பட்டுள்ள தொகுதி 16 பகுதியில் உள்ள பலா மரத்தடியில் ஒரு செல்போன் கிடந்தது. இதை பார்த்த போலீசார், அந்த செல்போனை பறிமுதல் செய்தனர். தொடர்ந்து போலீசார், செல்போனை பயன்படுத்தியது யார்? என விசாரித்து வருகின்றனர்.
News February 17, 2026
கடலூர்: உங்க குழந்தைகளுக்கு மாதம் ரூ.4,000 வேண்டுமா?

மத்திய அரசின் ‘மிஷன் வாத்சல்யா’ குழந்தைகள் பாதுகாப்பு திட்டத்தின் கீழ் 1 குடும்பத்திற்கு அதிகபட்சமாக 2 குழந்தைகளுக்கு மாதம் தலா ரூ.4,000 வீதம் 3 வருடத்திற்கு நிதி வழங்கப்படுகிறது. இதற்கு வருமான சான்றிதழ் போதும், பொது சேவை மையம் (CSC) அல்லது குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் அலுவலகத்தில் நேரடியாக விண்ணப்பிக்கலாம். இந்த தகவலை அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க!


