News May 20, 2024

CISF வசம் ஒப்படைக்கப்படும் நாடாளுமன்றம்

image

இந்திய நாடாளுமன்றத்தின் பாதுகாப்பு கட்டமைப்பு சி.ஆர்.பி.எஃப் வசமிருந்து மத்திய சி.ஐ.எஸ்.எஃப் பொறுப்பில் இன்று (மே 20) ஒப்படைக்கப்படவுள்ளது. இவ்வமைப்பில் 3.300 பேர் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர். கடந்த 10 நாள்களாக சி.ஐ.எஸ்.எஃப் பணியாளர்கள் வளாகத்தில் பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். தேர்தலுக்கு பின்னர் புதிய அரசு பதவியேற்கும்போது, அங்கு முழு அளவில் பாதுகாப்பு வழங்கப்படும் எனக் கூறப்படுகிறது.

Similar News

News March 4, 2026

₹5,083 கோடிக்கு ஒப்பந்தம்.. பலத்தை கூட்டும் இந்தியா

image

இந்திய கடலோர காவல்படை & கடற்படைக்கு ₹5,083 கோடிக்கு ஹெலிகாப்டர்கள், ஏவுகணைகள் கொள்முதல் செய்ய பாதுகாப்பு அமைச்சகம் ஒப்பந்தம் கையெழுத்திட்டுள்ளது. டெல்லியில் பாதுகாப்புத் துறை செயலாளர் ராஜேஷ் குமார் சிங் முன்னிலையில் இந்த ஒப்பந்தம் கையெழுத்தானது. Make In India திட்டத்தில் இந்துஸ்தான் ஏரோ நாட்டிக்ஸிடம் 6 Mk-III வகை ஹெலிகாப்டர்களும், ரஷ்ய நிறுவனத்திடம் இருந்து ஷெட்டில் ஏவுகணைகளும் வாங்கப்படுகின்றன.

News March 4, 2026

ஈரானின் உயர் தலைவரானார் கமேனியின் மகன்

image

போரில் அயதுல்லா அலி கமேனி கொல்லப்பட்டதையடுத்து, ஈரானின் புதிய உயர் தலைவராக முஜ்தபா கமேனி தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ளதாக ஈரானிய ஊடகங்கள் கூறுகின்றன. இவர் கமேனியின் 2-வது மூத்த மகன் ஆவார். இஸ்லாமிய புரட்சிகர காவலர் படை கொடுத்த அழுத்தத்தினால், ஷியா மதகுருக்கள் இவரை தலைவராக தேர்ந்தெடுத்ததாக சொல்லப்படுகிறது. ஈரானில் பரம்பரை ஆட்சி முறை எதிர்க்கப்படும் நிலையில், முஜ்தபாவின் தேர்வு சர்ச்சையாகியுள்ளது.

News March 4, 2026

முதல் அரையிறுதி : NZ Vs SA பலப்பரீட்சை

image

டி20 WC முதலாவது அரையிறுதி போட்டியில், இன்று தென்னாப்பிரிக்கா-நியூசிலாந்து அணிகள் மோதுகின்றன. நடப்பு தொடரில் தோல்வியே சந்திக்காத தென்னாப்பிரிக்கா பேட்டிங், பவுலிங், பீல்டிங் என அனைத்திலும் வலுவாக காணப்படுகிறது. சூப்பர் 8 சுற்றில் தட்டுத்தடுமாறி அரையிறுதிக்குள் நுழைந்துள்ள நியூசிலாந்து, SA-வுக்கு கடும் சவால் அளிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. போட்டியில் யார் வெல்ல வாய்ப்பு? உங்கள் கணிப்பு

error: Content is protected !!