News April 15, 2025
சிங்கப்பூரில் நாடாளுமன்றம் கலைப்பு

சிங்கப்பூரில் அடுத்த பொதுத்தேர்தலுக்காக நாடாளுமன்றம் இன்று கலைக்கப்பட்டது. மே 3-ல் பொதுத்தேர்தல் நடைபெறும் எனவும், ஏப்ரல் 23-ல் வேட்பு மனு தாக்கல் தொடங்கும் என்றும் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. வரும் தேர்தலிலும் ஆளும் மக்கள் செயல் கட்சியே வெற்றி பெற வாய்ப்புள்ளதாக பார்க்கப்படுகிறது. எனினும் கடந்த தேர்தலில் சந்தித்த பின்னடைவை சரி செய்து வலுவான வெற்றியை பதிவு செய்ய ஆளும் கட்சி திட்டமிட்டுள்ளது.
Similar News
News November 22, 2025
நாங்க இன்னமும் ஃப்ரெண்ட்ஸ் தான்பா!

சமீபத்தில் ‘தலைவர் 173’ படத்தில் இருந்து சுந்தர் சி விலகியதால், குஷ்பு மற்றும் கமலின் நீண்ட கால நட்பு குறித்து பலர் சந்தேகம் எழுப்பினர். ஆனால், அப்படியெல்லாம் ஒன்றும் இல்லை, நாங்கள் இன்னமும் ப்ரெண்ட்ஸ் தான் என இருவரும் நிரூபித்துள்ளனர். ஏர்போர்ட்டில் அவர்கள் ஜாலியாக பேசி வந்த புகைப்படங்களை குஷ்பு தனது SM-ல் பகிர்ந்த நிலையில், ரசிகர்கள் இந்த நட்பை வெகுவாக பாராட்டி வருகின்றனர்.
News November 22, 2025
சற்றுமுன்: CM ஸ்டாலின் நேரில் கண்ணீர் அஞ்சலி

உடல்நலக் குறைவால் மறைந்த <<18358061>>மூத்த கவிஞர் ஈரோடு தமிழன்பனின்<<>> உடலுக்கு CM ஸ்டாலின் நேரில் அஞ்சலி செலுத்தினார். முன்னதாக, கவிஞர் வைரமுத்து, மதன் கார்க்கி உள்ளிட்டோரும் கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினர். ஈரோடு தமிழன்பனின் மறைவுக்கு அன்புமணி, தங்கம் தென்னரசு உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்துள்ளனர். அவரது உடல் நாளை மாலை அரும்பாக்கம் மின் மயானத்தில் தகனம் செய்யப்படவுள்ளது.
News November 22, 2025
திமுகவில் பாலியல் SIR-கள் உள்ளனர்: EPS

திமுக ஆட்சியில், அக்கட்சியினரிடம் இருந்தே பெண்களை காக்க வேண்டிய அவல நிலை ஏற்பட்டுள்ளதாக EPS சாடியுள்ளார். அமைச்சருக்கு நெருக்கமான அனுதாபி என்ற பெயரில் விழுப்புரம் திமுக ஒன்றிய செயலாளரான பாஸ்கரன், கடந்த 6 மாதங்களாக பெண் ஒருவருக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக EPS குற்றஞ்சாட்டியுள்ளர். இதுபோன்ற திமுக பாலியல் SIR-களை கட்டுப்படுத்த கையாலாகாத தலைவராக CM இருக்கிறார் என்றும் அவர் விமர்சித்துள்ளார்.


