News April 15, 2025
சிங்கப்பூரில் நாடாளுமன்றம் கலைப்பு

சிங்கப்பூரில் அடுத்த பொதுத்தேர்தலுக்காக நாடாளுமன்றம் இன்று கலைக்கப்பட்டது. மே 3-ல் பொதுத்தேர்தல் நடைபெறும் எனவும், ஏப்ரல் 23-ல் வேட்பு மனு தாக்கல் தொடங்கும் என்றும் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. வரும் தேர்தலிலும் ஆளும் மக்கள் செயல் கட்சியே வெற்றி பெற வாய்ப்புள்ளதாக பார்க்கப்படுகிறது. எனினும் கடந்த தேர்தலில் சந்தித்த பின்னடைவை சரி செய்து வலுவான வெற்றியை பதிவு செய்ய ஆளும் கட்சி திட்டமிட்டுள்ளது.
Similar News
News November 24, 2025
பெரம்பலூர்: மாவட்ட ஆட்சியர் முக்கிய தகவல்!

பெரம்பலூர் மாவட்ட நிர்வாகம் மற்றும் முன்னோடி வங்கி இணைந்து நடத்தும் சிறப்பு கல்விக் கடன் முகாம், வரும் நவம்பர் 27-ம் தேதி அன்று நடைபெற உள்ளது. மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறும் இம்முகாமில், இளங்கலை மற்றும் முதுகலைப் பட்டப்படிப்பு பயிலும் மாணவ, மாணவிகள் தேவையான ஆவணங்களுடன் கலந்துகொண்டு கல்விக்கடன் பெற விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.
News November 24, 2025
BREAKING: 14 மாவட்டங்களுக்கு இன்று விடுமுறை.. முழு விபரம்

கனமழை எதிரொலியால் இதுவரை 14 மாவட்டங்களுக்கு விடுமுறை அறிவிப்பு வெளியாகியுள்ளது. புதிதாக நாகை, தஞ்சை, மயிலாடுதுறை, விருதுநகர், சிவகங்கை, கரூர் மாவட்டங்களில் இன்று பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளித்து உத்தரவிடப்பட்டுள்ளது. ஏற்கெனவே, தூத்துக்குடி, ராமநாதபுரம், திருவாரூர், தென்காசி, நெல்லை, திருச்சி, புதுக்கோட்டை, கள்ளக்குறிச்சி ஆகிய மாவட்டங்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
News November 24, 2025
வாழனும், செமயா வாழனும்: மிருணாள் தாகூர்

தன்னை இகழ்ந்தவர்களுக்கு முன்பு நன்றாக வாழ்ந்து காட்டுவதே தனி கெத்து தான். அப்படித்தான், தனது அம்மாவை காரில் ஏற்ற மறுத்த உறவுக்காரர்களுக்கு முன், பென்ஸ் கார் வாங்கி, அதில் அம்மாவை அமர வைத்து உலா வந்து கெத்து காட்டியுள்ளார் மிருணாள் தாகூர். உறவினர்கள் தனது அம்மாவை அவமானப்படுத்தியபோது ஏற்பட்ட வைராக்கியமே, தான் கார் வாங்கியதற்கான காரணம் என்றும் அவர் உணர்ச்சி பொங்க கூறியுள்ளார்.


