News April 15, 2025

சிங்கப்பூரில் நாடாளுமன்றம் கலைப்பு

image

சிங்கப்பூரில் அடுத்த பொதுத்தேர்தலுக்காக நாடாளுமன்றம் இன்று கலைக்கப்பட்டது. மே 3-ல் பொதுத்தேர்தல் நடைபெறும் எனவும், ஏப்ரல் 23-ல் வேட்பு மனு தாக்கல் தொடங்கும் என்றும் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. வரும் தேர்தலிலும் ஆளும் மக்கள் செயல் கட்சியே வெற்றி பெற வாய்ப்புள்ளதாக பார்க்கப்படுகிறது. எனினும் கடந்த தேர்தலில் சந்தித்த பின்னடைவை சரி செய்து வலுவான வெற்றியை பதிவு செய்ய ஆளும் கட்சி திட்டமிட்டுள்ளது.

Similar News

News November 22, 2025

பிரபல தமிழ் நடிகை மரணம்.. அதிர்ச்சித் தகவல்

image

தவசி உள்ளிட்ட படங்களில் நடித்த பிரதியுஷா மரண வழக்கு மீண்டும் பேசுபொருளாகியுள்ளது. 2002-ல் காதலருடன் விஷமருந்தி அவர் உயிரிழந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், தனது மகள் கேங்க் ரேப் செய்யப்பட்டதாக பிரதியுஷாவின் தாயார் குற்றஞ்சாட்டியுள்ளார். அவரது மார்பு, தொடை உள்ளிட்ட பகுதிகளில் காயங்கள் இருந்ததாகவும் தெரிவித்துள்ளார். <<18341222>>நடிகையின் மரணம் தொடர்பான வழக்கு<<>> நேற்று SC-ல் விசாரணைக்கு வந்திருந்தது.

News November 22, 2025

திமுகவின் முட்டாள்தனத்தை பார்ப்போம்: அண்ணாமலை

image

சமஸ்கிருத மொழி வளர்ச்சிக்கு மத்திய அரசு அதிக நிதி ஒதுக்கியதாக உதயநிதி குற்றஞ்சாட்டியிருந்தார். இந்நிலையில், நாட்டில் தமிழ் பல்கலைகளை விட சமஸ்கிருத பல்கலைகள் அதிகமாக இருப்பதால் அதிக நிதியை பெறுவதாக அண்ணாமலை விளக்கமளித்துள்ளார். திமுகவால் வளர்ச்சி பற்றி பேச முடியாது என்று விமர்சித்த அவர், அடுத்த 6 மாதங்களுக்கு மொழி, வடக்கு, தெற்கு போன்ற முட்டாள்தனங்களை பார்க்கலாம் என்றும் சாடியுள்ளார்.

News November 21, 2025

நகைக் கடன் தள்ளுபடியா? தமிழக அரசு திட்டம்

image

2021 தேர்தல் போலவே 2026 சட்டப்பேரவைத் தேர்தலிலும் கூட்டுறவு நிறுவனங்களில் நகைக் கடன் தள்ளுபடிக்கான அறிவிப்பு வெளியாகும் என தகவல் கசிந்துள்ளது. இதனிடையே, 31.03.21 வரை நகைக் கடன் பெற்றிருந்த 11.70 லட்சம் பயனாளிகளுக்கு நிலுவையில் இருந்த ₹6,000 கோடி நகைக் கடன் தள்ளுபடி செய்யப்பட்டதாக அரசு தெரிவித்துள்ளது. தற்போது நிலுவையில் உள்ள நகைக் கடன்கள் எவ்வளவு என்ற பட்டியலை எடுக்க அரசு அறிவுறுத்தியுள்ளதாம்.

error: Content is protected !!