News March 13, 2025
பார்க்கிங் தகராறு – பறிபோனது விஞ்ஞானியின் உயிர்

ஜார்க்கண்டைச் சேர்ந்த அபிஷேக் ஸ்வார்ன்கர், ஜெர்மனியில் விஞ்ஞானியாக பணியாற்றியவர். இந்தியா திரும்பிய அவர், மொஹாலியில் உள்ள ஆராய்ச்சி நிறுவனத்தில் திட்ட இயக்குநராக வேலை பார்த்து வந்தார். விஞ்ஞானி அபிஷேக் தான் வசித்து வந்த வீட்டின் முன், பைக்கை நிறுத்தக் கூடாது என அக்கம்பக்கத்தினர் தகராறில் ஈடுபட்டுள்ளனர். அப்போது, நடந்த மோதலில் அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து போலீஸ் விசாரித்து வருகிறது.
Similar News
News March 14, 2025
நாளை வங்கிக் கணக்கில் ₹1,000

மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில், 1 கோடிக்கும் அதிகமான பெண்களுக்கு, TN அரசு மாதம் தலா ₹1,000 வழங்கி வருகிறது. ஒவ்வொரு மாதமும் 15ஆம் தேதி வங்கிக் கணக்கில் செலுத்தப்படும் இத்தொகை, நாளை வங்கிக்கணக்கில் வரவு வைக்கப்பட உள்ளது. இதனிடையே, இன்றைய தமிழக பட்ஜெட்டில் மகளிர் உதவித்தொகை திட்டம் இன்னும் விரிவுபடுத்தப்பட்டு, ₹1,000ல் இருந்து ₹2,500 ஆக உயர்த்தி அறிவிக்கப்படுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
News March 14, 2025
மீண்டும் பாமகவுடன் நெருக்கம் காட்டும் பண்ருட்டி வேல்முருகன்

எலியும், பூனையுமாக இருந்த பாமக, தவாக மீண்டும் நெருக்கம் காட்ட ஆரம்பித்துள்ளது. வேல்முருகனை சந்தித்த பாமக நிர்வாகிகள், அக்கட்சியின் நிழல் பட்ஜெட் நகலை வழங்கினர். இதனை X பக்கத்தில் பகிர்ந்துள்ள வேல்முருகன், ‘அய்யா, சின்னய்யாவுக்கு நன்றி’ என பதிவிட்டுள்ளார். பாமகவிலிருந்து விலகிய பிறகு ராமதாஸ், அன்புமணியை கடுமையாக விமர்சித்து வந்த வேல்முருகனின் இந்த திடீர் மனமாற்றம் அரசியல் களத்தை சூடாக்கியுள்ளது.
News March 14, 2025
பிரபல வீரருக்கு IPL-லில் விளையாட 2 ஆண்டுகள் தடை

ஐபிஎல் விதிகளை மீறியதற்காக இங்கிலாந்து வீரர் ஹாரி புருக்குக்கு 2 ஆண்டுகள் தடை விதிக்கப்படுவதாக பிசிசிஐ தெரிவித்துள்ளது. நடப்பாண்டு IPLல சீசனில் டெல்லி கேபிடல்ஸ் அணியால் ₹6.25 கோடிக்கு ஏலம் எடுக்கப்பட்ட அவர், இறுதி நேரத்தில் தன்னால் அனைத்துப் போட்டிகளிலும் பங்கேற்க முடியாது என தெரிவித்தார். இது விதிகளுக்கு புறம்பானது என்பதால் ஹாரி புருக் மீது பிசிசிஐ நடவடிக்கை எடுத்துள்ளது.