News March 22, 2024

பாரிஸ் ஒலிம்பிக்: இந்தியக் கொடியை ஏந்தும் தமிழக வீரர்

image

பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் வரும் ஜூலை 26 – ஆக. 11 வரை 33ஆவது ஒலிம்பிக் போட்டி நடக்கவுள்ளது.
இதன் தொடக்க விழாவில் இந்திய மூவர்ணக் கொடியை ஏந்திச் செல்லும் கௌரவம், ஆண் வீரர்கள் சார்பில் தமிழக டேபிள் டென்னிஸ் வீரர் அஜந்தா சரத் கமலுக்கு வழங்கப்பட்டுள்ளது. எந்த வீராங்கனை இந்தியக் கொடியை ஏந்துவார் என்பது இன்னும் அறிவிக்கப்படவில்லை. இந்திய வீரர்கள் குழுவின் தலைவராக மேரி கோம் நியமிக்கப்பட்டுள்ளார்.

Similar News

News August 20, 2025

Windows OS யூஸ் பண்றீங்களா? உடனே இதை செய்யுங்கள்!

image

எளிதாக ஹேக் செய்யப்பட வாய்ப்பு உள்ளதால் மைக்ரோசாஃப்ட் விண்டோஸ் 10, விண்டோஸ் 11 பயன்படுத்துபவர்கள் எச்சரிக்கையாக இருக்க மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. Microsoft Office, Microsoft Dynamics, Browser, Device, Developer Tools, Open Source Software ஆகியவை ஆபத்து பட்டியலில் உள்ளன. இச்செயலிகளை உடனே அப்டேட் செய்யவும், விண்டோஸை அப்டேட் செய்து சிஸ்டமை ரீபூட் செய்யவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

News August 20, 2025

3 மணி நேரத்தில் பணம் டெபாசிட்.. விரைவில் அமல்!

image

காசோலைகளை பணமாக்க தற்போது 2 நாள்கள் வரை ஆகிறது. பணமாக்கும் செயல்பாட்டுக்கு CTS முறை பின்பற்றப்படுகிறது. இந்நிலையில், 3 மணி நேரத்தில் காசோலையை பணமாக மாற்றும் முறையை செயல்படுத்த வங்கிகளுக்கு RBI அறிவுறுத்தியுள்ளது. Continuous Clearing, Settlement on Realisation முறையில் இச்செயல்பாடு விரைவாக முடிக்கப்படும். அக்.4 முதல் அமலுக்கு வரும் புதிய முறையால் தனிநபர்கள், நிறுவனங்களின் சிரமம் குறையும்.

News August 20, 2025

சவுதியின் நவீன வான்வெளி மைதானம்!

image

2034 ஃபிஃபா உலகக்கோப்பைக்காக சவுதி அரேபியா ஒரு புதுமையான மைதானத்தை உருவாக்க உள்ளது. அந்நாட்டின் The Line ஸ்மார்ட் சிட்டியில், பாலைவனத்தில் இருந்து 350 உயரத்தில் அதிநவீன வசதிகளுடன் மைதானம் கட்டப்பட உள்ளது. 46,000 பேர் அமரும் வகையில், $1 பில்லியன் மதிப்பில் அந்த வான்வெளி மைதானம் அமைக்கப்பட உள்ளது. இதற்கான கட்டுமானம் 2027-ல் தொடங்கப்பட்டு 2032-ல் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

error: Content is protected !!