News April 5, 2025
பெற்றோர்களே, இதை கவனிங்க!

பெற்றோர்களுக்கு இடையிலுள்ள உணர்வுபூர்வமான பிணைப்பு, குழந்தையின் எதிர்காலத்தை நிர்ணயிப்பதில் முக்கிய பங்கு வகிப்பதாக ஆய்வில் தெரியவந்துள்ளது. இத்தகைய பெற்றோர் குழந்தைகளுக்காக நிறைய நேரம் செலவிடுகின்றனர். இதனால் கல்வியில் அவர்கள் ஆர்வமுடன் ஈடுபடுவதுடன், பெற்றோரை முன்மாதிரியாகவும் கொள்கின்றனர். இதனால் அவர்களின் எதிர்காலமும் சிறப்பாக அமைகிறது.
Similar News
News April 12, 2025
நாசாவின் ₹25 கோடி பரிசு: வெல்லப் போவது யார்?

அப்பல்லோ திட்டத்துக்காக 1969–72 வரை விண்வெளி வீரர்களை நாசா நிலவுக்கு அனுப்பி வைத்தது. மீண்டும் பூமிக்கு திரும்புவதற்குள் 96 பைகளில் மனிதக் கழிவுகள் சேர்ந்தன. விண்வெளி ஓடத்தில் இடப்பற்றாக்குறையை தவிர்க்க, அவை அங்கேயே வீசப்பட்டன. தற்போது நிலவில் நிரந்தர ஆய்வு மேற்கொள்ளவுள்ள நாசா மனிதக் கழிவுகளை ஆற்றலாக மாற்றும் சிறந்த யோசனைக்கு ₹25 கோடி பரிசு அறிவித்தது. விரைவில் வெற்றியாளர் தேர்வாகவுள்ளார்.
News April 12, 2025
20 கோடியைத் தாண்டிய ஜியோ ஹாட்ஸ்டார் பயனர்கள்

ஜியோ ஹாட்ஸ்டார் பயனர்களின் எண்ணிக்கை 20 கோடியைத் தாண்டியுள்ளது. ஜியோவும், ஹாட்ஸ்டாரும் 2 மாதங்களுக்கு முன்பு இணைந்தன. இதையடுத்து ஜியோ ஹாட்ஸ்டார் என்ற பெயரில் அது செயல்படுகிறது. ஐபிஎல் போட்டிகளையும் ஒளிபரப்புகிறது. இதனால் குறுகிய காலத்தில் 20 கோடியை கடந்த ஜியோ ஹாட்ஸ்டார், உலகில் நெட்பிளிக்ஸ், அமேசான் பிரைமுக்கு பிறகு 3வது பெரிய ஓடிடியாகியுள்ளது. நீங்க என்ன ஓடிடி பார்க்கறீங்க? கமெண்ட்.
News April 12, 2025
ரயில்வே 9,700 காலியிடங்கள்: 10th, ITI போதும்

ரயில்வேயில் துணை ஓட்டுநராக (Assistant Loco Pilot) பணியாற்ற விரும்புகிறீர்களா? இந்த பணிக்கு 9,700 காலி இடங்களுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த வேலையில் சேர SSLC தேர்ச்சி பெற்று, ITI முடித்திருக்க வேண்டும். இன்ஜினியரிங்கில் Diploma, பட்டம் பெற்றவர்களும் விண்ணப்பிக்கலாம். ஆரம்ப சம்பளம்: ரூ.19,900. வயது வரம்பு 30. மே.12க்குள் <