News April 28, 2025
பெற்றோர் விவாகரத்து: மனம் திறந்த நடிகை ஸ்ருதிஹாசன்!

பெற்றோர் விவாகரத்தால் வாழ்க்கை தலைகீழாக மாறியதாக நடிகை ஸ்ருதிஹாசன் முதல்முறையாக மனம் திறந்து பேசியுள்ளார். அவரது தந்தை கமல்ஹாசன், தாயார் சரிகா இருவரும் பிரிந்தபோது ஸ்ருதிஹாசன் சரிகாவுடன் மும்பைக்கு சென்றார். ஆனால், அங்கு பெரும் சிரமத்தை அனுபவித்ததாக கூறிய அவர், BMWவில் இருந்த வாழ்க்கை லோக்கல் டிரைனுக்கு மாறியது எனத் தனது கசப்பான அனுபவங்களை நேர்காணல் ஒன்றில் பகிர்ந்துள்ளார்.
Similar News
News December 6, 2025
ஒரு சமூகம் முன்னேற கல்வியே அடிப்படை: CM

மாணவர்கள் மேல் எந்த அளவுக்கு திமுக அரசுக்கு அக்கறை உள்ளது என்பதற்கு, சமூகநீதி விடுதிகளே சாட்சி என CM ஸ்டாலின் தெரிவித்துள்ளார். அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் பேசிய அவர், ஒரு சமூகம் முன்னேற கல்வியே அடிப்படை என்று குறிப்பிட்டார். மாணவர்கள் ஆராய்ச்சி படிப்புகளையும் படிக்க வேண்டும் என்று கூறிய அவர், அரசு திட்டங்களின் பலன்கள் மக்களை சென்றடைவதற்காக கடுமையாக உழைப்பதாக தெரிவித்தார்.
News December 6, 2025
திமுக அரசு பதற்றத்தை உருவாக்குகிறது: G.K.வாசன்

மத நம்பிக்கை உடையவர்களால் எந்த பதற்றமும் ஏற்படாது, அவர்களின் ஒரே குறிக்கோள் முறையான வழிபாடு மட்டுமே என G.K.வாசன் கூறியுள்ளார். ஆனால் பதற்றம் ஏற்படுவதாக கூறி திமுக நடுநிலைமையோடு செயல்படவில்லை என்ற அவர், தேர்தல் காரணமாகவே அவர்கள் இவ்வாறு நடப்பதாக மக்களே சந்தேதிக்கின்றனர் எனவும் பேசியுள்ளார். மேலும், திருப்பரங்குன்றத்தில் அரசே செயற்கையாக ஒரு பதற்றத்தை ஏற்படுத்துவதாக அவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.
News December 6, 2025
புதிய பாபர் மசூதியின் தற்போதைய நிலை என்ன?

1992, இதே நாளில் தான் பாபர் மசூதி இடிக்கப்பட்டது. 2019-ல் SC அளித்த தீர்ப்பின்படி, அயோத்தியிலிருந்து 25 கிமீ., தொலைவில் உள்ள தன்னிபூர் கிராமத்தில் பாபர் மசூதி கட்ட 5 ஏக்கர் நிலம் ஒதுக்கப்பட்டது. இந்நிலையில், இதற்கான வரைபடத்தை இறுதி செய்யும்பணி முடியும் நிலையில் உள்ளதாக இந்தோ-இஸ்லாமிய கலாசார அறக்கட்டளை தெரிவித்துள்ளது. இத்திட்டத்திற்கான காலக்கெடு 2026, ஏப்ரலில் இருக்கலாம் என்றும் கூறியுள்ளது.


