News December 28, 2024
பெற்றோர், மாணவர்கள் அச்சம் கொள்ள வேண்டாம்: R.N.ரவி

அண்ணா பல்கலைக்கழகத்தில் படிக்கும் மாணவர்கள் மற்றும் அவர்களது பெற்றோர் அச்சம் கொள்ள வேண்டாம் என ஆளுநர் ரவி கூறியுள்ளார். அங்கு மேற்கொண்ட ஆய்வு குறித்து அறிக்கை வெளியிட்டுள்ள அவர், மாணவர்கள் முன்வைத்துள்ள பாதுகாப்பு குறைபாடுகளை உடனடியாக களைய, பல்கலை., நிர்வாகத்திற்கு உத்தரவிட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார். மேலும், மாணவர்களின் பாதுகாப்பே பிரதானம் எனவும் அவர் தனது அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளார்.
Similar News
News September 12, 2025
சிம்பு மேல தப்பில்ல: அஷ்வத்

‘STR 51’ ஷூட்டிங் இன்னும் தொடங்காததற்கு சிம்பு காரணமல்ல, தான் திரைக்கதை எழுதுவதில் தொய்வு ஏற்பட்டதாலேயே தாமதமாவதாக இயக்குநர் அஷ்வத் மாரிமுத்து தெரிவித்துள்ளார். குத்து, தம், மன்மதன் காலகட்ட சிம்புவை மீண்டும் அனைவரும் ரசிக்கும்படி திரையில் கொண்டுவர உள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். படம் 2026-ல் ரிலீஸாகும் என்றும் அவர் உறுதியளித்துள்ளார். இதனால், சிம்பு ரசிகர்கள் படுகுஷியாக உள்ளனர்.
News September 12, 2025
அற்புதம்.. 6.2 கிலோவில் பிறந்த ‘பீம் பாய்’

பிறந்த குழந்தைகளின் எடை, வழக்கமாக 2.5- 3.2 கிலோ வரை இருக்கும். ஆனால், கடந்த வாரம் ம.பி.யில் பெண்ணுக்கு <<17618155>>5.2 கிலோ எடையில்<<>> ‘பீம் பாய்’ குழந்தை பிறந்தது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. தற்போது, அதனை மிஞ்சும் சம்பவம் அமெரிக்காவில் நிகழ்ந்துள்ளது. புளோரிடாவில் டேனியல்லா ஹைன்ஸ் என்பவர் 6.2 கிலோ எடையுள்ள குழந்தையை ஈன்றுள்ளார். போட்டோஸ் SM-ல் பரவியதால், ஓவர் நைட்டில் அந்த குழந்தை பிரபலமாகியுள்ளது.
News September 12, 2025
ரேஷன் கார்டு அப்டேட்.. உடனே இதை பண்ணுங்க

சென்னை, திருப்பத்தூர், நாமக்கல், திருவள்ளூர், கரூர் உள்ளிட்ட மாவட்டங்களில் ரேஷன் கார்டு குறைதீர் முகாம்கள் நாளை முதல் தொடங்குகின்றன. அதில், பெயர் சேர்த்தல், முகவரி மாற்றம் உள்ளிட்டவற்றுக்கு தீர்வு காணப்படும். மேலும், ரேஷன் கார்டில் கைரேகை பதிவு செய்யாதவர்கள் செப்.25-க்குள் பதிவு செய்து கொள்ள மாவட்ட நிர்வாகங்கள் அறிவுறுத்தியுள்ளன. இந்த வாய்ப்பை பயன்படுத்திக்கோங்க மக்களே! SHARE IT.