News August 17, 2024

சூடானில் கோரத்தாண்டவம் ஆடிய துணை ராணுவப் படை

image

சூடானில் துணை ராணுவப் படை (RSF) நடத்திய தாக்குதலில் 80க்கும் மேற்பட்ட அப்பாவி மக்கள் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சினார் மாநிலம் ஜல்க்னி கிராமத்தில் இருந்து பெண்களை RSF படையினர் கடத்த முயன்றபோது, கிராம மக்கள் தடுத்ததாகக் கூறப்படுகிறது. இதனால் கோபமடைந்த துணை ராணுவத்தினர், கண்மூடித்தனமாக மக்களை நோக்கி சுட்டனர். இந்த தாக்குதலால் ஒட்டுமொத்த கிராமமும் ரத்தக்களரியானது.

Similar News

News November 2, 2025

BREAKING: விபத்தில் இந்திய கிரிக்கெட் வீரர் மரணம்

image

ரஞ்சி வீரர் ராஜேஷ் பனிக் (40), திரிபுராவில் ஏற்பட்ட சாலை விபத்தில் உயிரிழந்தார். U19 உலகக்கோப்பையில் இந்திய அணிக்காக விளையாடியுள்ள அவர், 2002 முதல் திரிபுரா அணிக்காக ரஞ்சி தொடரில் விளையாடி வந்தார். மேலும் , U-15 இந்திய அணியில் இர்பான் பதான் மற்றும் அம்பத்தி ராயுடு உடன் இந்தியாவுக்காக விளையாடியுள்ளார். அவரின் திடீர் மறைவுக்கு ரசிகர்களும் கிரிக்கெட் வீரர்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

News November 2, 2025

‘பூத் கமிட்டி ஆக்டிவேஷன்’ அதிமுக புது ரூட்டு!

image

அதிமுக IT விங் பொறுப்பாளர்களுடன் இபிஎஸ் ஆலோசனை நடத்தினார். அப்போது, ‘பூத் கமிட்டி ஆக்டிவேஷன்’ பணிகளையும் அவர் தொடங்கி வைத்தார். இதில், ஒவ்வொரு பூத்துக்கும் 9 பேர் கொண்ட குழு அமைக்கப்படவுள்ளது. அவர்கள் வீடு வீடாக சென்று தீவிர பிரசாரம் செய்ய உள்ளனர். மேலும், தேர்தல் சமயத்தில் வாக்காளர்கள் அனைவரும் வாக்களித்து விட்டனரா, ஓட்டு போட வரும் நபர் அந்த பகுதியை சேர்ந்தவர் தானா என்பதை ஆய்வு செய்யவார்களாம்.

News November 2, 2025

அக்டோபரில் உச்சம் தொட்ட UPI பரிவர்த்தனை!

image

கடந்த அக்டோபரில் 2,070 கோடி UPI பரிவர்த்தனைகள் மேற்கொள்ளபட்டுள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது. இவற்றின் மொத்த மதிப்பு ₹27.28 லட்சம் கோடியாம். NPCI தரவுப்படி, இது செப்டம்பர் மாதத்தை விட பரிவர்த்தனையில் 5%, பண மதிப்பில் 10% அதிகம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அக்டோபரில் தினமும் சராசரியாக 66.8 கோடி பரிவர்த்தனைகளும், ₹88,000 கோடி பணமும் பரிவர்த்தனை செய்யப்பட்டுள்ளது. நீங்க UPI மூலம் எவ்வளவு செலவு செஞ்சீங்க?

error: Content is protected !!