News August 17, 2024
சூடானில் கோரத்தாண்டவம் ஆடிய துணை ராணுவப் படை

சூடானில் துணை ராணுவப் படை (RSF) நடத்திய தாக்குதலில் 80க்கும் மேற்பட்ட அப்பாவி மக்கள் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சினார் மாநிலம் ஜல்க்னி கிராமத்தில் இருந்து பெண்களை RSF படையினர் கடத்த முயன்றபோது, கிராம மக்கள் தடுத்ததாகக் கூறப்படுகிறது. இதனால் கோபமடைந்த துணை ராணுவத்தினர், கண்மூடித்தனமாக மக்களை நோக்கி சுட்டனர். இந்த தாக்குதலால் ஒட்டுமொத்த கிராமமும் ரத்தக்களரியானது.
Similar News
News September 14, 2025
காதல் திருமணம்: மனம்விட்டு பேசிய உதயநிதி

சென்னையில் அறநிலையத்துறை சார்பில் 32 ஜோடிகளுக்கு திருமணம் நடத்திவைக்கப்பட்டது. இதில் பங்கேற்று பேசிய DCM உதயநிதி, தானும் காதல் திருமணம் செய்தவர்தான் எனவும், அதற்கு எவ்வளவு தடங்கல்கள் வரும் என தனக்கு தெரியும் என்றும் கலகலப்பாக பேசினார். பிறகு, பெரும்பாலான காதல் ஜோடிகளை சேர்த்துவைப்பதால், இது அறநிலையத்துறையா? அன்புநிலையத்துறையா? என நகைச்சுவையாக கேள்வியும் எழுப்பினார்.
News September 14, 2025
பசுவை காப்பவர்களுக்கு Vote பண்ணுங்க: சங்கராச்சாரியார்

பிஹாரின் 243 தொகுதிகளிலும் சுயேட்சை வேட்பாளர்களை நிறுத்த போவதாக சங்கராச்சாரியார் அவிமுக்தேஷ்வரானந்த் சரஸ்வதி அறிவித்துள்ளார். பசு வதையை பாவமாக கருதும், இந்துக்களின் பாதுகாப்புக்காக பாடுபடும் வேட்பாளர்களுக்கு மட்டுமே வாக்களிக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார். பாஜக, பசு பாதுகாப்புக்கு ஆதரவாக இருப்பதாக மோடி கூறினாலும், நாட்டில் மாட்டிறைச்சி ஏற்றுமதி அதிகரித்து வருகிறது என சாடினார்.
News September 14, 2025
பள்ளிகளுக்கு 4 நாள்கள் விடுமுறையா?

தீபாவளி திங்களன்று(அக்.20) வருவதால், அடுத்த மாதம் 3 நாள்கள் தொடர் விடுமுறை. இந்நிலையில், அக்.21 அன்றும் விடுமுறை அளிக்கப்படுமா என எதிர்பார்ப்பு நிலவுகிறது. கடந்த காலங்களில் தீபாவளிக்கு அடுத்த நாள் லீவு கொடுத்து, அதனை ஈடுசெய்ய ஏதேனும் ஒரு சனிக்கிழமை வேலைநாளாக அறிவிக்கப்படும். இம்முறையும் அப்படி செய்தால் பள்ளி மாணவர்களுக்கு 4 நாள்கள் தொடர் விடுமுறை வரும். இதுகுறித்து அரசு விரைவில் தெரிவிக்கவுள்ளது.