News August 17, 2024
சூடானில் கோரத்தாண்டவம் ஆடிய துணை ராணுவப் படை

சூடானில் துணை ராணுவப் படை (RSF) நடத்திய தாக்குதலில் 80க்கும் மேற்பட்ட அப்பாவி மக்கள் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சினார் மாநிலம் ஜல்க்னி கிராமத்தில் இருந்து பெண்களை RSF படையினர் கடத்த முயன்றபோது, கிராம மக்கள் தடுத்ததாகக் கூறப்படுகிறது. இதனால் கோபமடைந்த துணை ராணுவத்தினர், கண்மூடித்தனமாக மக்களை நோக்கி சுட்டனர். இந்த தாக்குதலால் ஒட்டுமொத்த கிராமமும் ரத்தக்களரியானது.
Similar News
News December 19, 2025
சிம்புவின் ‘அரசன்’ படத்தில் ஆண்ட்ரியாவா?

வெற்றிமாறன் இயக்கத்தில் சிம்பு நடிக்கும் அரசன் படத்தின் ஷுட்டிங் கோவில்பட்டியில் நடைபெற்று வருகிறது. இந்த படத்தில் விஜய்சேதுபதி இணைந்துள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்ட நிலையில், ஆண்ட்ரியாவும் அரசனில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதை உறுதிப்படுத்தும் வகையில் ‘வடசென்னை’ சந்திரா போட்டோவை ஆண்ட்ரியா இன்ஸ்டாவில் பதிவிட்டுள்ளார். கூடிய விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகலாம்.
News December 19, 2025
பாகிஸ்தான் தாதா CM நிதிஷ் குமாருக்கு மிரட்டல்

பிஹார் CM நிதிஷ்குமார் <<18575369>>பெண் டாக்டரின்<<>> ஹிஜாப்பை இழுத்த விவகாரம் பெரும் சர்ச்சையானது. இந்நிலையில் நிதிஷுக்கு எதிராக சில சமூக விரோதிகள் சதித்திட்டம் தீட்டி வருவதாக புலனாய்வுத்துறை எச்சரித்துள்ளது. மேலும் பாகிஸ்தானை சேர்ந்த தாதா ஷெஹ்சாத் பட்டி நிதிஷுக்கு மிரட்டல் விடுத்துள்ளதாகவும் கூறப்படுகிறது. இதனையடுத்து அவரது பாதுகாப்பு பலமடங்கு அதிகரிக்கப்பட்டுள்ளது.
News December 19, 2025
சச்சின் பொன்மொழிகள்

*நான் என்னை எப்பொழுதும் மற்றொருவருடன் ஒப்பிட்டதில்லை. *எதிரி யாராக இருந்தால் என்ன? முதலில் மோதிப்பார். *உங்கள் கனவுகளை பின்தொடருங்கள். ஆனால், குறுக்கு வழியில் இல்லை என்பதை உறுதி செய்யுங்கள். *அனைத்து துறைகளிலும் உயர்வு தாழ்வு இருக்கும். முயற்சியை மட்டும் கைவிட்டுவிடாதீர்கள். *தேடல் முடிந்ததும்தான் தேவையை அறிவாய். *துரோகத்தை அன்பினால் வெல்லுங்கள்.


