News August 17, 2024
சூடானில் கோரத்தாண்டவம் ஆடிய துணை ராணுவப் படை

சூடானில் துணை ராணுவப் படை (RSF) நடத்திய தாக்குதலில் 80க்கும் மேற்பட்ட அப்பாவி மக்கள் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சினார் மாநிலம் ஜல்க்னி கிராமத்தில் இருந்து பெண்களை RSF படையினர் கடத்த முயன்றபோது, கிராம மக்கள் தடுத்ததாகக் கூறப்படுகிறது. இதனால் கோபமடைந்த துணை ராணுவத்தினர், கண்மூடித்தனமாக மக்களை நோக்கி சுட்டனர். இந்த தாக்குதலால் ஒட்டுமொத்த கிராமமும் ரத்தக்களரியானது.
Similar News
News November 12, 2025
BREAKING: கனமழை வெளுத்து வாங்கும்

தமிழ்நாட்டில் இன்று, நவ.17, 18 ஆகிய தேதிகளில் கனமழை பெய்யக்கூடும் என IMD எச்சரித்துள்ளது. இன்று குமரி, நெல்லை, தூத்துக்குடி, தென்காசி ஆகிய மாவட்டங்களிலும், 17-ம் தேதி தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, கடலூர், கள்ளக்குறிச்சி, விழுப்புரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களிலும், 18-ம் தேதி ராமநாதபுரம், புதுகோட்டை உள்ளிட்ட 6 மாவட்டங்களிலும் கனமழை பெய்யக்கூடும் என்று அலர்ட் கொடுத்துள்ளது.
News November 12, 2025
CINEMA ROUNDUP: மீண்டும் நடிக்க தயாரான அமலா பால்

*முனீஷ்காந்தின் ‘மிடில் கிளாஸ்’ படத்தின் டிரெய்லர் வெளியானது *‘தேரே இஷ்க் மே’ படத்தின் புரமோஷனில் பிஸியாக உள்ள தனுஷ் *தனுஷின் அக்கா மகன் பவிஷ் நடிக்கும் படத்தின் டைட்டில் இன்று மாலை வெளியாகிறது *மீண்டும் படங்களில் நடிக்க கதை கேட்டு வருகிறார் அமலாபால் *ரிலீஸுக்கு தயாராகிறது வெங்கட் பிரபுவின் பார்ட்டி * சிவகார்த்திகேயனின் ‘பராசக்தி’ படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் 15 மில்லியனை கடந்தது.
News November 12, 2025
அமெரிக்காவால் இந்தியாவுக்கு ‘ஜாக்பாட்’

H-1B விசா கட்டண உயர்வு, குடியேற்ற விதிகள் கடுமையாக்கம் உள்ளிட்டவற்றால் அமெரிக்காவின் முக்கிய நிறுவனங்கள் இந்தியாவுக்கு படையெடுத்து வருகின்றன. Wall Street, ஜேபி மார்கன் உள்ளிட்ட பல நிறுவனங்கள் தங்களது நிதி மற்றும் தொழில்நுட்ப பணிகளை, பெங்களூரு, ஹைதராபாத், குருகிராம், மும்பை ஆகிய நகரங்களுக்கு மாற்றி வருகின்றன. இதனால், இந்திய இளைஞர்களுக்கு புதிய வேலைவாய்ப்புகள் உருவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.


