News August 17, 2024
சூடானில் கோரத்தாண்டவம் ஆடிய துணை ராணுவப் படை

சூடானில் துணை ராணுவப் படை (RSF) நடத்திய தாக்குதலில் 80க்கும் மேற்பட்ட அப்பாவி மக்கள் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சினார் மாநிலம் ஜல்க்னி கிராமத்தில் இருந்து பெண்களை RSF படையினர் கடத்த முயன்றபோது, கிராம மக்கள் தடுத்ததாகக் கூறப்படுகிறது. இதனால் கோபமடைந்த துணை ராணுவத்தினர், கண்மூடித்தனமாக மக்களை நோக்கி சுட்டனர். இந்த தாக்குதலால் ஒட்டுமொத்த கிராமமும் ரத்தக்களரியானது.
Similar News
News November 24, 2025
குஜராத்தில் காலடி வைத்த புலி PHOTOS

குஜராத் மாநிலத்தில் சுமார் 30 ஆண்டுகளுக்கு பிறகு முதல்முறையாக இளம் ராயல் பெங்கால் புலி காலடி வைத்துள்ளது. ரத்தன்மஹால் வனவிலங்கு சரணாலயத்தில் குடியேறியுள்ள புலி, மத்தியப் பிரதேசத்திலிருந்து இயற்கையாகவே இடம்பெயர்ந்திருக்கலாம் என்று வன அதிகாரிகள் நம்புகின்றனர். புலியின் போட்டோஸை மேலே பகிர்ந்துள்ளோம். ஒவ்வொன்றாக ஸ்வைப் செய்து பாருங்க. SHARE.
News November 24, 2025
அயோத்தி ராமருக்காக விரதம் இருக்கும் PM மோடி

அயோத்தி ராமர் கோயிலில் 161 அடி உயர கொடி ஏற்றும் நிகழ்வு, நவ.25-ல் நடைபெறவுள்ளது. இதற்காக வருகை தரும் PM மோடி, அன்று காலை 11:50 மணிக்கு மேல் கொடியேற்றவுள்ளார். பின்னர், மகாதீபாராதனையில் பங்கேற்கும் அவர், சுவாமி தரிசனம் செய்வார். இவ்வாறு கொடி ஏற்றுகையில், மோடி விரதத்தில் இருப்பார் என ராமர் கோயில் நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்பின்னர், மனிதநேயம் பற்றி உரையாற்றுவாராம்.
News November 24, 2025
கபில் தேவ் பொன்மொழிகள்

* வெற்றி பெறுவதற்கான பசி இறக்கக்கூடாது. பசி பெரிதாக இருக்க வேண்டும்.
*நான் எதிர்மறையான விஷயங்களைப் பார்ப்பதில்லை. தவறுகளைத் தாண்டி முன்னோக்கிப் பாருங்கள்.
* நீங்கள் ஏதாவது செய்ய விரும்பினால், ஏதாவது சாதிக்க விரும்பினால், உங்களிடம் இல்லாததைப் பற்றி எப்போதும் யோசித்துக்கொண்டிருக்க முடியாது. * உங்களையும் உங்கள் திறன்களையும் நம்புங்கள். அதுதான் மகத்துவத்தை அடைவதற்கான முதல் படி.


