News August 17, 2024

சூடானில் கோரத்தாண்டவம் ஆடிய துணை ராணுவப் படை

image

சூடானில் துணை ராணுவப் படை (RSF) நடத்திய தாக்குதலில் 80க்கும் மேற்பட்ட அப்பாவி மக்கள் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சினார் மாநிலம் ஜல்க்னி கிராமத்தில் இருந்து பெண்களை RSF படையினர் கடத்த முயன்றபோது, கிராம மக்கள் தடுத்ததாகக் கூறப்படுகிறது. இதனால் கோபமடைந்த துணை ராணுவத்தினர், கண்மூடித்தனமாக மக்களை நோக்கி சுட்டனர். இந்த தாக்குதலால் ஒட்டுமொத்த கிராமமும் ரத்தக்களரியானது.

Similar News

News November 25, 2025

தவெகவில் இணைகிறாரா அதிமுக EX எம்பி?

image

அதிமுக EX MP கே.சி.பழனிசாமியுடன் தவெக தரப்பு பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. 2018-ல் அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட இவர், EPS-ஐ தொடர்ச்சியாக விமர்சித்து வருகிறார். 1984-ல் MGR-ன் ஆட்சியில் MLA-வாக(காங்கேயம் தொகுதி) இருந்த இவருக்கு இன்றளவும் திருப்பூர், ஈரோடு மாவட்டங்களில் கணிசமான செல்வாக்கு உள்ளது. அதனால், அவரை கட்சியில் இணைக்க தவெக தரப்பு முயல்வதாக கூறப்படுகிறது.

News November 25, 2025

14 வகை கேன்சரை அழிக்கும் ஒரே தடுப்பூசி!

image

ரஷ்யா உருவாக்கியுள்ள கேன்சர் தடுப்பூசியை முதல் நாடாக வியட்நாம் பயன்பாட்டுக்கு கொண்டுவந்துள்ளது. Pembroria என அழைக்கப்படும் இந்த தடுப்பூசி, 14 வகையான கேன்சரை அழிக்க உதவுவதாக கூறப்படுகிறது. இந்த தடுப்பூசியின் விலையும் குறைவு என்பதால், பலர் இதன்மூலம் பயனடையலாம். இந்தியாவில் இந்த மருந்து தற்போது டெஸ்டிங்கில் உள்ளதால், கூடிய விரைவில் பயன்பாட்டிற்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

News November 25, 2025

இன்னும் ஒரு மணி நேரத்தில்.. ரெடியா இருங்க

image

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பிப்ரவரி மாத சிறப்பு தரிசன டிக்கெட் (₹300) காலை 10 மணிக்கு வெளியிடப்படுகிறது. அறைகளுக்கான முன்பதிவு மாலை 3 மணிக்கு தொடங்கும். ஸ்ரீவாரி ஆர்ஜித சேவை மற்றும் தரிசன டிக்கெட்டுகள், தங்குமிட டிக்கெட்டுகள் ஆகியவற்றை திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் அதிகாரப்பூர்வ இணையதளமான https://ttdevasthanams.ap.gov.in மூலம் மட்டுமே முன்பதிவு செய்ய வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!