News August 17, 2024
சூடானில் கோரத்தாண்டவம் ஆடிய துணை ராணுவப் படை

சூடானில் துணை ராணுவப் படை (RSF) நடத்திய தாக்குதலில் 80க்கும் மேற்பட்ட அப்பாவி மக்கள் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சினார் மாநிலம் ஜல்க்னி கிராமத்தில் இருந்து பெண்களை RSF படையினர் கடத்த முயன்றபோது, கிராம மக்கள் தடுத்ததாகக் கூறப்படுகிறது. இதனால் கோபமடைந்த துணை ராணுவத்தினர், கண்மூடித்தனமாக மக்களை நோக்கி சுட்டனர். இந்த தாக்குதலால் ஒட்டுமொத்த கிராமமும் ரத்தக்களரியானது.
Similar News
News December 20, 2025
விஜய் கட்சியின் சின்னம்.. ரகசியம் கசிந்தது!

தவெகவுக்கு வரும் 24-ம் தேதி விசில் (அ) மோதிரம் சின்னம் உறுதியாகிவிடும் எனத் தகவல் வெளியாகியுள்ளது. இதனால், செங்கோட்டையன் தலைமையில் கூட்டணி பேச்சுவார்த்தையை நடத்த குழு அமைக்க விஜய் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில், தற்போதைய சூழலில் எந்த அணியிலும் இல்லாத பாமக, தேமுதிக, அமமுக, புதிய தமிழகம் உள்ளிட்ட கட்சிகளுடன் பேச்சுவார்த்தையை தொடங்க செங்கோட்டையன் தீவிரமாக தயாராகி வருகிறாராம்.
News December 20, 2025
T20 WC: இந்திய அணி இன்று அறிவிப்பு

டி20 உலகக் கோப்பை மற்றும் நியூசிலாந்து டி20 தொடருக்கான இந்திய அணி இன்று அறிவிக்கப்படவுள்ளது. கேப்டன் சூர்யகுமார் யாதவுடன் ஆலோசித்த பிறகு தேர்வுக்குழு தலைவர் அஜித் அகர்கர், மதியம் 1 மணி அளவில் அணியில் இடம்பெற்றுள்ள 15 வீரர்களை அறிவிக்கிறார். SA-வுக்கு எதிரான டி20 தொடரில் விளையாடிய அணியில் இருந்து ஒரு சில வீரர்கள் மாற்றப்பட்ட வாய்ப்புள்ளது. பிப்.7-ல் டி20 உலகக் கோப்பை தொடங்குவது குறிப்பிடத்தக்கது.
News December 20, 2025
மனைவியுடன் கும்பாபிஷேகம் செல்லலாமே? தமிழிசை

இந்துக்களின் உணர்வுகளை மதிக்கவில்லை என்றால் அதற்கான விலையை திமுக அரசு கொடுக்க நேரிடும் என தமிழிசை செளந்தரராஜன் எச்சரித்துள்ளார். திருப்பரங்குன்றம் விவகாரத்தில் இந்துக்களின் உணர்வை CM ஸ்டாலின் புண்படுத்தி வருவதாகவும் அவர் விமர்சித்தார். மேலும், மனைவி சொல்வதை கேட்பதாக கூறும் CM ஸ்டாலின், அவரது மனைவியுடன் கோயில் கும்பாபிஷேகங்களுக்கு செல்லலாமே என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.


