News August 17, 2024

சூடானில் கோரத்தாண்டவம் ஆடிய துணை ராணுவப் படை

image

சூடானில் துணை ராணுவப் படை (RSF) நடத்திய தாக்குதலில் 80க்கும் மேற்பட்ட அப்பாவி மக்கள் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சினார் மாநிலம் ஜல்க்னி கிராமத்தில் இருந்து பெண்களை RSF படையினர் கடத்த முயன்றபோது, கிராம மக்கள் தடுத்ததாகக் கூறப்படுகிறது. இதனால் கோபமடைந்த துணை ராணுவத்தினர், கண்மூடித்தனமாக மக்களை நோக்கி சுட்டனர். இந்த தாக்குதலால் ஒட்டுமொத்த கிராமமும் ரத்தக்களரியானது.

Similar News

News December 5, 2025

இண்டிகோவில் மட்டும் ஏன் பிரச்னை? என்ன நடக்கிறது?

image

மற்ற அனைத்து விமான நிறுவனங்களும் வழக்கம்போல் இயங்கும்போது. இண்டிகோவில் மட்டும் ஏன் பிரச்சனையாக இருக்கிறது? DGCA-வால் சமீபத்தில் கொண்டு வரப்பட்ட, விமானிகளுக்கு கூடுதலாக ஓய்வு நேரம் என்ற விதி முக்கிய காரணமாக கூறப்படுகிறது. ஆனால், இதற்காக DGCA 6-18 மாதம் கால அவகாசமும் வழங்கியது. இருப்பினும், இண்டிகோ கூடுதலாக ஒரு விமானியை கூட பணியமர்த்தவில்லை. இதுவே இந்த குழப்பங்களுக்கு காரணம் என்று கூறப்படுகிறது.

News December 5, 2025

பாக்.,ல் இந்து கோயில்களின் நிலைமை இதுதான்

image

பாகிஸ்தானில் உள்ள 1,871 கோயில்களில் 37 மட்டுமே இயங்குவதாக அந்நாட்டு பார்லி., குழு முன் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்நாட்டின் சொத்து மீட்புக் குழு (ETPB) கோயில்களை முறையாக பராமரிக்க தவறிவிட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. மேலும், இக்குழுவின் தலைமைப் பதவியை முஸ்லிம் அல்லாத நபர் ஒருவருக்கு வழங்கவேண்டும் என அங்குள்ள சிறுபான்மையினர் கோரிக்கை வைக்கின்றனர்.

News December 5, 2025

சற்றுமுன்: விஜய்யை சந்தித்தார் அடுத்த முக்கிய தலைவர்

image

சென்னை பனையூரில் உள்ள இல்லத்தில், விஜய்யை காங்., மூத்த நிர்வாகி பிரவீன் சக்ரவர்த்தி சந்தித்துள்ளார். ராகுல் காந்திக்கு நெருக்கமானவரான <<18458010>>பிரவீன்<<>>, சமீபத்தில் தவெகவை புகழ்ந்து பதிவு ஒன்றை வெளியிட்டிருந்தார். இந்நிலையில்தான் இந்த சந்திப்பு நடந்துள்ளது. இதில், கூட்டணி தொடர்பாக பேசியிருக்கலாம் என கூறப்படுகிறது. தவெக – காங்., கூட்டணி அமையுமா?

error: Content is protected !!