News August 3, 2024
பாபநாசம் அணை நீர்வரத்து குறைந்தது

திருநெல்வேலி மாவட்டம் பாபநாசம் அணையின் நீர்மட்டம் இன்று(ஆக.03) காலை நிலவரப்படி 120.50 அடியாகவும், மணிமுத்தாறு அணையின் நீர்மட்டம் 70.68 அடியாகவும், சேர்வலாறு அணையின் நீர்மட்டம் 128.57 அடியாகவும் உள்ளது. பாபநாசம் அணைக்கு வினாடிக்கு 849 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. மேலும், மலைப் பகுதிகளில் மழைப்பொழிவு எதுவும் பதிவாகவில்லை.
Similar News
News September 12, 2025
நெல்லை வருகிறார் கமல்ஹாசன்!

சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு அரசியல் தலைவர்கள் தமிழகம் முழுவதும் சுற்று பயணம் மேற்கொண்டு வருகின்றனர். மக்கள் நீதி மையம் தலைவர் கமலஹாசன் தேர்தலை முன்னிட்டு தமிழ்நாடு முழுவதும் கலந்தாலோசனை கூட்டத்தில் பங்கேற்க இருக்கிறார். அதன்படி வரும் செப்.20ம் தேதி நெல்லை மண்டலத்தில் கமலஹாசன் சுற்றுப்பயணம் மேற்கொண்டு நிர்வாகிகளுடன் கலந்து ஆலோசனை செய்ய இருப்பதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது.
News September 12, 2025
ஒரே நாளில் மாநகராட்சிக்கு ரூ.70 லட்சம் வரி வசூல்

நெல்லை மாநகராட்சி சார்பில் பாளையங்கோட்டை பேருந்து நிலையத்தில் இன்று சிறப்பு வரி வசூல் முகாம் நடைபெற்றது. இதில் சொத்து வரி குடிநீர் வரி உள்பட பல்வேறு வரி வசூல் செய்யப்பட்டது. பொதுமக்கள் காலை முதல் ஆர்வமுடன் வரி வாக்கி செலுத்தி வந்தனர். நேற்று நடைபெற்ற சிறப்பு முகாமில் ஒரே நாளில் மொத்தம் 70 லட்சம் ரூபாய் வரி வசூல் செய்யப்பட்டிருப்பதாக மாநகராட்சி சார்பில் தற்போது அறிவிப்பு வெளியாகி உள்ளது.
News September 12, 2025
மாநகரில் இரவு காவல் பணி அதிகாரி விபரம்

திருநெல்வேலி மாநகர போலீஸ் கமிஷனர் சந்தோஷ் ஹாத்தி மணி உத்தரவின் படி நெல்லை மாநகரில் இன்று (செப்.11) இரவு முதல் நாளை காலை 6 மணி வரை காவல் பணியில் ஈடுபடும் காவல் அதிகாரிகள் பெயர் விபரம் காவல் சரகம் வாரியாக மாநகர காவல்துறை அறிவித்துள்ளது. சம்பந்தப்பட்ட காவல் அதிகாரிகள் கைபேசி எண்ணும் தரப்பட்டுள்ளது. காவல் உதவி தேவைப்படுபவர்கள் சம்பந்தப்பட்ட அதிகாரியை தொடர்பு கொள்ளலாம்.