News March 18, 2024

பழனியில் இன்று பங்குனி உத்திர திருவிழா தொடக்கம்

image

பழனி கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் பங்குனி உத்திர திருவிழா விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த நிலையில் இந்த ஆண்டு பங்குனி உத்திர திருவிழா, பழனி திருஆவினன்குடி குழந்தை வேலாயுதசுவாமி கோவிலில் இன்று கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.10 நாட்கள் நடைபெறும் இத்திருவிழாவில் 23ஆம் தேதி முத்துக்குமாரசுவாமி, வள்ளி-தெய்வானை திருக்கல்யாணமும், அடுத்த நாள் பங்குனி உத்திரத்தன்று தேரோட்டமும் நடக்கிறது.

Similar News

News December 26, 2025

திண்டுக்கல்: G Pay, PhonePe இருக்கா?

image

திண்டுக்கல் மக்களே, இன்றைய டிஜிட்டல் காலத்தில் செல்போன் எண் மூலமாக மேற்கொள்ளப்படும் UPI பண பரிவர்த்தனைகள் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இந்த சூழலில் உங்களது செல்போனில் இருந்து யாருக்காவது தவறுதலாக பணத்தை அனுப்பிவிட்டால் பதற வேண்டாம். Google Pay (1800 419-0157), PhonePe (080-68727374), Paytm (0120-4456-456) ஆகிய எண்களை தொடர்பு கொண்டு புகார் தெரிவித்தால், உங்கள் பணம் மீட்டு தரப்படும். SHARE பண்ணுங்க!

News December 26, 2025

திண்டுக்கல்: போதையில் நடத்த விபரீதம்!

image

திண்டுக்கல் மாவட்டம் சாணார்பட்டி அருகே சில்வார்பட்டியைச் சேர்ந்த பிரபு (35) குடிபோதையில் ஏற்பட்ட தகராறில் மனைவி ஈஸ்வரி (32)யை சம்மட்டியால் தாக்கி கொலை செய்தார். காதல் திருமணம் செய்த இவர்களுக்கு இரண்டு மகன்கள், ஒரு மகள் உள்ளனர். குடிப்பழக்கம் காரணமாக அடிக்கடி தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. சம்பவம் தொடர்பாக பிரபுவை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

News December 26, 2025

திண்டுக்கல் ஆண்களே உஷார்!

image

இணையத்தில் அறிமுகம் இல்லாத நபர்களிடம் தனிப்பட்ட தகவல்களை பகிர வேண்டாம் என்று திண்டுக்கல் மாவட்ட காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. சிலர் காதல் பேச்சு, நட்பு எனப் போலி சுயவிவரங்கள் மூலம் நம்பிக்கை பெற்று பணம் பறிக்கும் சம்பவங்கள் அதிகரித்து வருவதாகவும், ஏமாற்றத்துக்கு ஆளானால் உடனே 1930 எண்ணை அழைக்கவும் <>www.cybercrime.gov.in<<>>-ல் புகார் அளிக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த தகவலை உங்கள் நண்பர்களுக்கு ஷேர் பண்ணுங்க!

error: Content is protected !!