News March 18, 2024
பழனியில் இன்று பங்குனி உத்திர திருவிழா தொடக்கம்

பழனி கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் பங்குனி உத்திர திருவிழா விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த நிலையில் இந்த ஆண்டு பங்குனி உத்திர திருவிழா, பழனி திருஆவினன்குடி குழந்தை வேலாயுதசுவாமி கோவிலில் இன்று கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.10 நாட்கள் நடைபெறும் இத்திருவிழாவில் 23ஆம் தேதி முத்துக்குமாரசுவாமி, வள்ளி-தெய்வானை திருக்கல்யாணமும், அடுத்த நாள் பங்குனி உத்திரத்தன்று தேரோட்டமும் நடக்கிறது.
Similar News
News December 22, 2025
திண்டுக்கல் அருகே வசமாக சிக்கிய நபர்கள்!

வத்தலக்குண்டு, பிலீஸ்புரத்தை சேர்ந்தவர் குருநாதன் 23. பெரியகுளம் ரோட்டில் உள்ள சூப்பர் மார்க்கெட் அருகே தனது ஐபோனில் பேசிக் கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த இருவர் அவசரமாக பேச வேண்டுமென அவரது அலைபேசியை வாங்கினர். பேசுவது போல் நடித்து தப்பி ஓடினர். தொழில்நுட்ப உதவியுடன் வத்தலக்குண்டு போலீசார் காந்திநகரை சேர்ந்த ராஜேஷ் 39, விக்கிரமங்கலத்தைச் சேர்ந்த கணேசன் 38 ஆகியோரை கைது செய்தனர்.
News December 22, 2025
திண்டுக்கல் அருகே இருவர் தூக்கிட்டு தற்கொலை!

திண்டுக்கல், ம.மு.கோவிலூர் சக்கியம்பட்டியை சேர்ந்தவர் ஓட்டுநர் திருப்பதி. வயற்றுவலியால் அவதிப்பட்டு வந்த இவர், விரக்தியில் திண்டுக்கல் பஸ் ஸ்டேண்ட் எதிரே, எம்.ஜி,ஆர் சிலை பின்புறம் வைக்கப்பட்ட பிளக்ஸ் பேனருடன் இணைக்கப்பட்டிருந்த கம்பியில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். இதேபோல், பழனி காமராஜர் நகரை சேர்ந்த கூலித்தொழிலாளி ரங்கநாதன், குடும்ப பிரச்சனையால் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.
News December 22, 2025
திண்டுக்கல் மக்களே: இன்று இங்கு மின் தடை!

திண்டுக்கல்லில் மின் பராமரிப்பு பணிகள் காரணமாக, இன்று (டிச.22) காலை 9மணி முதல் மாலை 4 மணி வரை, தாமரைப்பட்டி, வேல்வார்கோட்டை, முத்தனங்கோட்டை, பாளையம், அணியாப்பூர், குஜிலியம்பாறை வடக்கு, பட்டிவீரன்பட்டி, அய்யம்பாளையம், பெரும்பாறை, அய்யன்கோட்டை, நத்தம், வேலம்பட்டி, செல்லப்பநாயக்கன்பட்டி, பொய்யாம்பட்டி, மூங்கில்பட்டி, சேத்தூர், எரியோடு, நாகையகோட்டை, வெல்லம்பட்டி பகுதிகளில் மின் வினியோகம் இருக்காது


