News March 18, 2024
பழனியில் இன்று பங்குனி உத்திர திருவிழா தொடக்கம்

பழனி கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் பங்குனி உத்திர திருவிழா விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த நிலையில் இந்த ஆண்டு பங்குனி உத்திர திருவிழா, பழனி திருஆவினன்குடி குழந்தை வேலாயுதசுவாமி கோவிலில் இன்று கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.10 நாட்கள் நடைபெறும் இத்திருவிழாவில் 23ஆம் தேதி முத்துக்குமாரசுவாமி, வள்ளி-தெய்வானை திருக்கல்யாணமும், அடுத்த நாள் பங்குனி உத்திரத்தன்று தேரோட்டமும் நடக்கிறது.
Similar News
News January 4, 2026
திண்டுக்கல்: ஆபத்தில் ‘உயிர்காக்கும்’ எண்கள்!

அவசர காலத்தில் உதவும் எண்கள்: தீயணைப்புத் துறை – 101, ஆம்புலன்ஸ் உதவி எண் – 102 & 108, போக்குவரத்து காவலர் -103 , பெண்கள் பாதுகாப்பு – 181 & 1091 ,ரயில்வே விபத்து அவசர சேவை – 1072 , சாலை விபத்து அவசர சேவை – 1073 , பேரிடர் கால உதவி – 1077, குழந்தைகள் பாதுகாப்பு -1098, சைபர் குற்றங்கள் தடுப்பு – 1930, சைபர் குற்ற உதவி எண் – 1930, மின்சாரத்துறை – 1912 இதை மற்றவர்களுக்கும் SHARE பண்ணுங்க
News January 4, 2026
திண்டுக்கல் ஜவுளிக்கடையில் கொள்ளை! பரபரப்பு

திண்டுக்கல் முருகபவனம் பகுதியில் சகாயமேரி என்பவரது ஜவுளிக்கடையில் ரூ.45,000 ரொக்கம் மற்றும் ரூ.20,000 மதிப்புள்ள துணிகளைத் திருடிய வழக்கில் சிவபாண்டி (30), அபினேஷ் (22) மற்றும் அருண்பாண்டி (24) ஆகிய மூவரை நகர் குற்றத்தடுப்பு பிரிவு போலீசார் கைது செய்தனர். அவர்களிடமிருந்து ரூ.15,000 பணம் மற்றும் துணிகள் பறிமுதல் செய்யப்பட்டு, மூவரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
News January 4, 2026
திண்டுக்கல்லில் இலவச தையல் பயிற்சி!

திண்டுக்கல் நத்தம் மெயின்ரோடு சிறுமலைபிரிவில் உள்ள கனரா வங்கி ஊரக சுய வேலை வாய்ப்பு நிறுவனம் நடத்தும் பெண்களுக்கான முற்றிலும் இலவச தையல் பயிற்சியானது வருகிற 5 ஆம் தேதி முதல் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.மேலும் இப்பயிற்சியில் சேர இன்று மற்றும் நாளை ஆகிய இரு நாட்கள் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் விவரங்களுக்கு : 90802 24511, 94426 28434 அழைக்கவும்.இதை ஷேர் பண்ணுங்க


