News March 18, 2024
பழனியில் இன்று பங்குனி உத்திர திருவிழா தொடக்கம்

பழனி கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் பங்குனி உத்திர திருவிழா விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த நிலையில் இந்த ஆண்டு பங்குனி உத்திர திருவிழா, பழனி திருஆவினன்குடி குழந்தை வேலாயுதசுவாமி கோவிலில் இன்று கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.10 நாட்கள் நடைபெறும் இத்திருவிழாவில் 23ஆம் தேதி முத்துக்குமாரசுவாமி, வள்ளி-தெய்வானை திருக்கல்யாணமும், அடுத்த நாள் பங்குனி உத்திரத்தன்று தேரோட்டமும் நடக்கிறது.
Similar News
News January 9, 2026
திண்டுக்கல் பிரபலம் காலமானார்!

சத்திரப்பட்டியைச் சேர்ந்த முதுபெரும் காந்தியவாதி மா. வன்னிக்காளை (வயது 90+) உடல்நலக்குறைவு காரணமாக நேற்று காலமானார். காந்தியக் கொள்கைகளைப் பரப்பி வந்த இவரது சேவையைப் பாராட்டி கடந்த 2024-ம் ஆண்டு தமிழக அரசு இவருக்கு ‘சிறந்த காந்தியவாதி’ விருது வழங்கி கௌரவித்தது. அவரது மறைவையொட்டி, சத்திரப்பட்டியில் வைக்கப்பட்டுள்ள அவரது உடலுக்கு பலரும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
News January 9, 2026
திண்டுக்கல்: தொழிலாளி ஆற்றில் மூழ்கி மரணம்!

சோழவந்தானைச் சேர்ந்த தொழிலாளி செல்லப்பாண்டி (35). குடும்பத் தகராறு காரணமாக மனைவியிடம் கோபித்துக்கொண்டு, தனது இரண்டு மகன்களுடன் திண்டுக்கல் குண்டலபட்டியில் உள்ள தந்தை வீட்டிற்கு வந்திருந்தார். இந்நிலையில், அணைப்பட்டி அருகே உள்ள முல்லைப் பெரியாறு வாய்க்காலில் குளித்தபோது, எதிர்பாராதவிதமாகத் தவறி விழுந்து மூச்சுத்திணறி உயிரிழந்தார். இதுகுறித்து விளாம்பட்டி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
News January 9, 2026
திண்டுக்கல்லில் இனி அலைய வேண்டாம்!

திண்டுக்கல் மக்களே பிறப்பு/இறப்பு சான்றிதழ், வருமான சான்று, பட்டா, சொத்துவரி, வேளான் திட்டங்கள்,மாணவர்களுக்கு உதவித்தொகை மற்றும் மின்சாரக் கட்டணம் செலுத்துதல் உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்ட அரசு சேவைகளை இனி வாட்ஸ்அப் மூலமாகவே பொதுமக்கள் எளிதாகப் பெறலாம். இதற்காகத் தமிழக அரசு 7845252525 என்ற பிரத்யேக வாட்ஸ்அப் எண்ணிற்கு ‘Hi’ என மெசேஜ் அனுப்பினால் போதும். இதனை அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க!


