News March 23, 2025
2 வாரத்தில் பாம்பன் ரயில் பாலம் திறப்பு

பாம்பனில் கட்டப்பட்டுள்ள புதிய ரயில் பாலம் 2 வாரத்தில் திறக்கப்படவுள்ளது. பாலத்தை ஆய்வு செய்த தெற்கு ரயில்வே கூடுதல் பொது மேலாளர் கவுசல் கிஷோர் இந்த தகவலை வெளியிட்டார். திறப்பு விழாவில் பிரதமர் மோடி பங்கேற்பார் என்றும் பழைய ரயில் பாலத்தை அகற்றுவது குறித்து எந்த முடிவும் எடுக்கவில்லை என்றும் தெரிவித்தார். புதிய பாலம் திறந்த பிறகே, ராமேஸ்வரம் ரயில் நிலைய பணிகளும் முடிவடையும் என்றும் கூறினார்.
Similar News
News March 24, 2025
ஜாக்டோ ஜியோ போராட்டம்: அடுத்து என்ன?

TN முழுவதும் ஜாக்டோ ஜியோ அமைப்பினர் நேற்று நடத்திய உண்ணாவிரதப் போராட்டத்தில், பல்லாயிரக்கணக்கான அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் கலந்துகொண்டனர். மீண்டும் 30ஆம் தேதி உயர்மட்ட நிர்வாகிகள் குழு கூட்டம் நடைபெற உள்ளது. அதுவரை, அரசுக்கு கால அவகாசம் கொடுக்கும் வகையில், ஒரு வாரம் காத்திருக்க முடிவு செய்துள்ளதாகக் கூறப்படுகிறது. அதற்குள், விதி எண் 110 கீழ் அறிவிப்பு வெளியாகுமா என்ற எதிர்பார்ப்பில் உள்ளனர்.
News March 24, 2025
முதலில் வந்தது ஆணா? பெண்ணா? MP சர்ச்சை கருத்து

வழக்கமாக ஒரு விஷயத்தில் முதல் முயற்சி தவறாகவே முடியும் என்பதால், கடவுள் முதலில் ஆண்களை தான் படைத்திருப்பார் என சமாஜ்வாதி எம்.பி டிம்பிள் யாதவ் தெரிவித்துள்ளார். உலகில் முதலில் தோன்றியது ஆணா? பெண்ணா? என்ற கேள்விக்கு அவர் இப்பதிலை கூறியுள்ளார். மேலும் 2வது முறை, கடவுள் பெண்களைப் படைத்து, அவர்களுக்குத் தேவையான திறனை கொடுத்திருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார். இவரின் கருத்து பற்றி என்ன நினைக்கிறீங்க?
News March 24, 2025
விடுதியாக மாறிய மம்மூட்டி வீடு.. ஒரு நாள் வாடகை என்ன?

பிரபல மலையாள நடிகர் மம்மூட்டி, கொச்சியில் தான் வசித்து வந்த வீட்டில் இருந்து வேறு இடத்திற்கு மாறிவிட்டார். பிரபல நடிகர்கள் வசிக்கும் பகுதியில் உள்ள அந்த வீடு, தற்போது சுற்றுலாப் பயணிகள் தங்கும் விடுதியாக மாற்றப்பட்டுள்ளது. 4அறைகள் உள்ள வீட்டின் ஒருநாள் வாடகை ₹75,000. மம்மூட்டி வீட்டின் முன் நின்று ஒரு புகைப்படம் எடுத்துவிட மாட்டோமா? என ஏங்கிய ரசிகர்களுக்கு இப்போது தங்கும் வாய்ப்பே கிடைத்துள்ளது.