News March 26, 2025
பாம்பன் பாலம் திறப்பு விழா: ஏப்.6ல் TN வருகிறார் பிரதமர்

பாம்பன் புதிய ரயில் பாலத்தை திறந்து வைக்க பிரதமர் மோடி ஏப். 6 ஆம் தேதி தமிழகம் வருகிறார். முன்பாக 5 ஆம் தேதி இலங்கை செல்லும் பிரதமர், பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்றுவிட்டு, அங்கிருந்து பாம்பன் வருகிறார். புதிய ரயில் பாலம் திறப்பு விழாவில் ஆளுநர் ரவி, CM ஸ்டாலின், மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் உள்ளிட்டோர் கலந்து கொள்கின்றனர். இந்நிகழ்ச்சிக்குப் பின் ராமேஸ்வரத்திற்கும் பிரதமர் செல்கிறார்.
Similar News
News October 22, 2025
இன்றைய நல்ல நேரம்

▶அக்டோபர் 22, ஐப்பசி 5 ▶கிழமை: புதன் ▶நல்ல நேரம்:9:15 AM – 10:15 AM & 4:45 PM – 5:45 PM ▶கெளரி நல்ல நேரம்: 10:45 AM – 11:45 AM & 6:30 PM – 7:30 PM ▶ராகு காலம்: 12:00 PM – 1:30 PM ▶எமகண்டம்:7:30 AM – 9:00 AM ▶குளிகை: 10:30 AM – 12:00 PM ▶திதி: பிரதமை ▶சூலம்: வடக்கு ▶பரிகாரம்: பால் ▶பிறை: வளர்பிறை
News October 22, 2025
இந்தியா மீதான பாகிஸ்தான் குற்றச்சாட்டு.. ஆப்கன் பதிலடி

ஆப்கன் உடனான மோதலுக்கு இந்தியாவே காரணம் என பாக்., குற்றஞ்சாட்டியிருந்தது. ஆனால், இது அடிப்படை ஆதாரமற்றது என ஆப்கன் பாதுகாப்பு அமைச்சர் முகமது யாகூப் மறுத்துள்ளார். இந்தியா உடனான தங்களது நட்பு தொடரும் எனவும், ஆப்கனின் நலன் சார்ந்தே நட்புறவு பேணப்படும் என்றும் அவர் கூறியுள்ளார். மேலும், பிற நாடுகளுக்கு எதிராக தங்களது பிராந்தியத்தை பயன்படுத்த எப்போது அனுமதிக்கமாட்டோம் என்றும் பதிலடி கொடுத்துள்ளார்.
News October 22, 2025
wwc: மழையால் படுதோல்வியை சந்தித்த பாகிஸ்தான்

மகளிர் உலகக்கோப்பை லீக் ஆட்டத்தில் பாகிஸ்தானுக்கு எதிராக முதலில் விளையாடிய தெ.ஆப்பிரிக்கா 312 ரன்களை குவித்தது. கேப்டன் லாரா வால்வார்ட் 90 ரன்கள் அடித்து அணி நல்ல ஸ்கோரை எட்ட உதவினார். ஆனால் மழை குறுக்கிட்டதால், DLS விதிப்படி 20 ஓவர்களில் 234 ரன்கள் அடிக்க வேண்டும் என இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. இது பாகிஸ்தானுக்கு பெரும் பின்னடைவாக அமைய, 20 ஓவர்களில் 83 ரன்களை மட்டுமே எடுக்க படுதோல்வியடைந்தது.