News March 26, 2025

பாம்பன் பாலம் திறப்பு விழா: ஏப்.6ல் TN வருகிறார் பிரதமர்

image

பாம்பன் புதிய ரயில் பாலத்தை திறந்து வைக்க பிரதமர் மோடி ஏப். 6 ஆம் தேதி தமிழகம் வருகிறார். முன்பாக 5 ஆம் தேதி இலங்கை செல்லும் பிரதமர், பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்றுவிட்டு, அங்கிருந்து பாம்பன் வருகிறார். புதிய ரயில் பாலம் திறப்பு விழாவில் ஆளுநர் ரவி, CM ஸ்டாலின், மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் உள்ளிட்டோர் கலந்து கொள்கின்றனர். இந்நிகழ்ச்சிக்குப் பின் ராமேஸ்வரத்திற்கும் பிரதமர் செல்கிறார்.

Similar News

News December 1, 2025

பார்லிமென்ட்டில் டிராமா பண்ண கூடாது: PM மோடி

image

பார்லிமென்ட் டிராமா செய்யும் இடமல்ல; அது விவாதம் நடத்துவதற்கான இடம் என PM மோடி தெரிவித்துள்ளார். இன்னும் சற்றுநேரத்தில் குளிர்கால கூட்டத் தொடர் தொடங்கவுள்ள நிலையில், எதிர்க்கட்சிகள் அவைக்குள் அமளி செய்யக்கூடாது; அதனை வெளியில் வைத்துக்கொள்ள வேண்டும் என்றார். மேலும், ஜனநாயகத்தை பாதுகாக்கும் வகையில் இளம் MP-க்கள் பேசுவதற்கு எதிர்க்கட்சிகள் இடமளிக்க வேண்டும் எனவும் வலியுறுத்தினார். உங்கள் கருத்து?

News December 1, 2025

BREAKING: அதிமுகவில் இருந்து விலகி திமுகவில் இணைந்தனர்

image

கிருஷ்ணகிரியில் அதிமுகவில் இருந்து விலகிய 2,000 பேர் அமைச்சர் சக்கரபாணி முன்னிலையில் திமுகவில் இணைந்தனர். கடந்த மாதம் 13-ம் தேதி திமுகவில் இணைந்த அதிமுகவின் Ex ஓசூர் மாநகர கிழக்கு மண்டல குழுத் தலைவர் புருசோத்தமரெட்டி தலைமையில் இந்த இணைப்பு நடைபெற்றுள்ளது. மேலும், கே.பி.முனுசாமியின் மீது அதிருப்தியில் உள்ள நிர்வாகிகளை குறிவைத்து திமுக பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

News December 1, 2025

டிரம்ப் கொள்கை: அடிவாங்கும் இந்திய IT நிறுவனங்கள்

image

டிரம்பின் கடுமையான விசா கொள்கைகளால், இந்திய IT நிறுவனங்களுக்கான விசா ஒப்புதல்கள் கடும் சரிவை சந்தித்துள்ளன. ஆய்வு ஒன்றின்படி, 2015 உடன் ஒப்பிடுகையில் H-1B விசா ஒப்புதல்கள் 70% குறைந்துள்ள நிலையில், 2024-ஐ விட 37% குறைந்துள்ளது. 2025-ம் நிதியாண்டில் வெறும் 4,573 விசா ஒப்புதல்கள் மட்டுமே பெறப்பட்டுள்ளன. USA-வில் புதிய H-1B விசாக்களை பெறும் முதல் 5 நிறுவனங்களில் TCS மட்டுமே இந்திய நிறுவனம் ஆகும்.

error: Content is protected !!