News April 26, 2025
இடுக்கண் வருங்கால் நகும் பாகிஸ்தானியர்

போர்ச் சூழலிலும், கையாலாகாத தங்கள் அரசைக் கிண்டலடித்து பாகிஸ்தானியர்கள் பதிவிட்டு வருகின்றனர். ‘இந்தியா குண்டு வீசுமா?’ என ஒருவர் கேட்க, ‘அந்த அளவுக்கு இந்தியா முட்டாளல்ல’ என்கிறார் மற்றொருவர். அதற்கு மூன்றாமவர், ‘இந்தியா முட்டாளாகவே இருக்கட்டும், அப்பத்தான் இந்த கொடுமை முடியும்’ என்கிறார். மேலே படங்களை புரட்டிப் பாருங்கள், பாகிஸ்தானியர்களின் நகைச்சுவைக்கும் பின் இருக்கும் சோகம் தெரியும்.
Similar News
News November 17, 2025
₹10,000 லஞ்சம் கொடுத்து வென்ற BJP: செல்வப்பெருந்தகை

பிஹார் தேர்தலில் காங்., தோல்வி அடையவில்லை, ஜனநாயகம் தோல்வி அடைந்துள்ளதாக செல்வப்பெருந்தகை கூறியுள்ளார். பிஹாரில் உள்ள 1.21 கோடி பெண்களுக்கு தலா ₹10,000 கொடுத்து பாஜக வென்றுள்ளதாக குறிப்பிட்ட அவர், தமிழக மக்களின் GST பணத்தை பாஜக பிஹாரில் கொடுத்து விட்டதாகவும் தெரிவித்துள்ளார். இத்தேர்தலில் 61 தொகுதிகளில் போட்டியிட்ட காங்., 6-ல் மட்டுமே வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.
News November 17, 2025
சம்பா நெற்பயிர் காப்பீட்டுக்கு கால அவகாசம் நீட்டிப்பு

தஞ்சாவூர், நாகப்பட்டினம் உள்ளிட்ட 27 மாவட்டங்களில் சம்பா நெற்பயிரைக் காப்பீடு செய்வதற்கான கடைசி தேதி வரும் 15-ம் தேதியுடன் முடிவடைந்திருந்தது. ஆனால் விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று காலக்கெடு, 30-ம் தேதி வரை நீட்டிக்கப்படுவதாக அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் அறிவித்துள்ளார். இந்த வாய்ப்பை விவசாயிகள் முழுமையாகப் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் எனவும் அறிவுறுத்தியுள்ளார்.
News November 17, 2025
அதிமுகவுடன் கூட்டணி இல்லை.. முடிவை அறிவித்தார்

2026-ல் திமுகவை வீழ்த்த தவெகவுடன் கூட்டணி வைக்க இபிஎஸ் தொடர்ந்து முயற்சித்து வருவதாக பலரும் கூறி வந்தனர். இந்நிலையில், அதிமுக – பாஜக உடன் கூட்டணி வைக்க வாய்ப்பில்லை என்று நிர்மல்குமார் திட்டவட்டமாக கூறி, கூட்டணி பேச்சுக்கு முற்றுப்புள்ளி வைத்துவிட்டார். இதனால் விஜய் தலைமையிலான கூட்டணியில் EPS-க்கு எதிராக அரசியல் செய்யும் டிடிவி, ஓபிஎஸ் உள்ளிட்டோர் இணையலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.


