News April 28, 2025
பயத்தில் நாட்டை விட்டு ஓடும் பாக். தளபதிகள்!

பஹல்காம் தாக்குதல் பாகிஸ்தானை கதிகலங்க செய்துள்ளது. இந்தியாவின் பதிலடி குறித்த அச்சத்தில் அந்நாட்டு முக்கிய ராணுவ தளபதிகள் பதவியை ராஜினாமா செய்துவிட்டு வெளிநாடுகளுக்குச் சென்று வருகின்றனர். தலைமை தளபதி ஆசிம் முனிர் எங்கே இருக்கிறார் என்றே தெரியாத நிலையில், தளபதிகளின் ராஜினாமா குறித்த லெப்டினண்ட் ஜெனரல் உமர் அகமத்தின் கடிதம் வைரலாகி வருகிறது. இது தொடர்பாக பாக். அரசு எந்த விளக்கமும் அளிக்கவில்லை.
Similar News
News December 1, 2025
பார்லிமென்ட்டில் டிராமா பண்ண கூடாது: PM மோடி

பார்லிமென்ட் டிராமா செய்யும் இடமல்ல; அது விவாதம் நடத்துவதற்கான இடம் என PM மோடி தெரிவித்துள்ளார். இன்னும் சற்றுநேரத்தில் குளிர்கால கூட்டத் தொடர் தொடங்கவுள்ள நிலையில், எதிர்க்கட்சிகள் அவைக்குள் அமளி செய்யக்கூடாது; அதனை வெளியில் வைத்துக்கொள்ள வேண்டும் என்றார். மேலும், ஜனநாயகத்தை பாதுகாக்கும் வகையில் இளம் MP-க்கள் பேசுவதற்கு எதிர்க்கட்சிகள் இடமளிக்க வேண்டும் எனவும் வலியுறுத்தினார். உங்கள் கருத்து?
News December 1, 2025
BREAKING: அதிமுகவில் இருந்து விலகி திமுகவில் இணைந்தனர்

கிருஷ்ணகிரியில் அதிமுகவில் இருந்து விலகிய 2,000 பேர் அமைச்சர் சக்கரபாணி முன்னிலையில் திமுகவில் இணைந்தனர். கடந்த மாதம் 13-ம் தேதி திமுகவில் இணைந்த அதிமுகவின் Ex ஓசூர் மாநகர கிழக்கு மண்டல குழுத் தலைவர் புருசோத்தமரெட்டி தலைமையில் இந்த இணைப்பு நடைபெற்றுள்ளது. மேலும், கே.பி.முனுசாமியின் மீது அதிருப்தியில் உள்ள நிர்வாகிகளை குறிவைத்து திமுக பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
News December 1, 2025
டிரம்ப் கொள்கை: அடிவாங்கும் இந்திய IT நிறுவனங்கள்

டிரம்பின் கடுமையான விசா கொள்கைகளால், இந்திய IT நிறுவனங்களுக்கான விசா ஒப்புதல்கள் கடும் சரிவை சந்தித்துள்ளன. ஆய்வு ஒன்றின்படி, 2015 உடன் ஒப்பிடுகையில் H-1B விசா ஒப்புதல்கள் 70% குறைந்துள்ள நிலையில், 2024-ஐ விட 37% குறைந்துள்ளது. 2025-ம் நிதியாண்டில் வெறும் 4,573 விசா ஒப்புதல்கள் மட்டுமே பெறப்பட்டுள்ளன. USA-வில் புதிய H-1B விசாக்களை பெறும் முதல் 5 நிறுவனங்களில் TCS மட்டுமே இந்திய நிறுவனம் ஆகும்.


