News April 28, 2025
பயத்தில் நாட்டை விட்டு ஓடும் பாக். தளபதிகள்!

பஹல்காம் தாக்குதல் பாகிஸ்தானை கதிகலங்க செய்துள்ளது. இந்தியாவின் பதிலடி குறித்த அச்சத்தில் அந்நாட்டு முக்கிய ராணுவ தளபதிகள் பதவியை ராஜினாமா செய்துவிட்டு வெளிநாடுகளுக்குச் சென்று வருகின்றனர். தலைமை தளபதி ஆசிம் முனிர் எங்கே இருக்கிறார் என்றே தெரியாத நிலையில், தளபதிகளின் ராஜினாமா குறித்த லெப்டினண்ட் ஜெனரல் உமர் அகமத்தின் கடிதம் வைரலாகி வருகிறது. இது தொடர்பாக பாக். அரசு எந்த விளக்கமும் அளிக்கவில்லை.
Similar News
News November 13, 2025
தேவநாதனை கைது செய்ய தீவிரம்

நிதி நிறுவனம் நடத்தி ₹500 கோடிக்கு மேல் மோசடி செய்த வழக்கில், அரசியல் தலைவரும், பாஜக ஆதரவாளருமான தேவநாதன் யாதவ் நிபந்தனை ஜாமீன் பெற்று வெளியே வந்தார். ஆனால், ஜாமீன் நிபந்தனைப்படி ₹100 கோடி வைப்புத்தொகை செலுத்தாததால், அவரை உடனே கைது செய்ய வேண்டும் என்று நேற்று கோர்ட் அதிரடியாக உத்தரவிட்டது. இந்நிலையில், இன்னும் சற்றுநேரத்தில் அவரை கைது செய்ய போலீஸ் தீவிரம் காட்டி வருவதாக கூறப்படுகிறது.
News November 13, 2025
வாக்காளர்களை தீர்மானிக்கும் ஆட்சியாளர்கள்: சீமான்

தேர்தல் ஆணையத்தின் SIR பணிகளை எதிர்ப்பது போல் திமுக அரசு நாடகமாடுவதாக சீமான் குற்றம்சாட்டினார். உண்மையில் SIR-ஐ எதிர்த்திருந்தால் அவசரமாக சட்டசபையை கூட்டி, இது சீரழிவு என திமுக சொல்லியிருக்க வேண்டும் எனவும் தெரிவித்தார். மேலும் அன்று வாக்காளர்கள் ஆட்சியாளர்களை தீர்மானித்தார்கள் என்றும், இன்று ஆட்சியாளர்கள் வாக்காளர்களை தீர்மானிக்கிறார்கள் எனவும் சீமான் சாடினார்.
News November 13, 2025
மாதவிடாய் வலியால் உயிர்போகுதா? இதோ Solution!

மாதவிடாயின் போது வலியால் உயிர்போகுதா? கவலையவிடுங்க. சாலியா விதை உங்கள் பிரச்னையை தீர்க்கும். இந்த விதையை இரவு முழுவதும் தண்ணீரில் ஊறவைக்க வேண்டும். பின் காலையில் எழுந்ததும் வடிகட்டி, தண்ணீரை குடியுங்கள். இதனை செய்தால் மாதவிடாய் வலி சற்று குறையும் என சித்தா டாக்டர்கள் சொல்கின்றனர். இதில் இரும்பு சத்தும் அதிகம் என்பதால் பெண்களுக்கு மிகவும் நல்லது. நீங்கள் அக்கறை கொண்டுள்ள பெண்களுக்கு SHARE THIS.


