News September 22, 2025
ஏக்நாத் ஷிண்டேவின் X பக்கத்தில் பாகிஸ்தான் கொடி

சமீபத்தில் திரை, <<17746793>>அரசியல் பிரபலங்களின்<<>> ஷோஷியல் மீடியா, வங்கி கணக்குகள், செல்போன்கள் ஹேக் செய்யப்பட்டு வருகின்றன. அந்த வரிசையில் மகாராஷ்டிராவின் DCM ஏக்நாத் ஷிண்டேவின் X தள கணக்கு ஹேக் செய்யப்படுள்ளது. அவரின் பக்கத்தில் பாகிஸ்தான், துருக்கி நாடுகளின் கொடிகளையும் பதிவேற்றியுள்ளனர். தகவல் அறிந்து உடனடியாக தொழில்நுட்ப வல்லுநர்கள் கணக்கை ஹேக்கர்களிடம் இருந்து மீட்டுள்ளனர்.
Similar News
News September 22, 2025
நடிகர் – நடிகைகள் மீது அவதூறு பரப்பினால் சிறை

தென்னிந்திய நடிகர் சங்கத்தின் பொதுக்குழு கூட்டம் தலைவர் நாசர் தலைமையில் நேற்று நடைபெற்றது. அதில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களின் விவரம்: *யூடியூப்பில் உறுப்பினர்கள் பற்றி அவதூறு பரப்புபவர்களுக்கு 3 மாத கடுங்காவல் சிறைத் தண்டனை வழங்க வேண்டும். *மன உளைச்சலுக்கு உள்ளான உறுப்பினருக்கு அந்த நபர் ₹3 லட்சம் மான நஷ்ட ஈட்டு வழங்க வேண்டும். *அவதூறு செய்தியை பரப்பிய யூடியூப் சேனல் முடக்கப்பட வேண்டும்.
News September 22, 2025
வரலாற்றில் இன்று

➤1931 – எழுத்தாளர் அசோகமித்திரன் பிறந்தநாள்.
➤1941 – உக்ரைனில் 6,000 யூதர்கள் நாஜி படையால் கொல்லப்பட்டனர்.
➤1960 – பிரான்ஸிடம் இருந்து மாலி விடுதலை அடைந்தது.
➤1965 – இந்திய-பாகிஸ்தான் போர் ஐநாவால் முடிவுக்கு வந்தது.
1995 – நாகர்கோயில் பாடசாலை குண்டுவீச்சில் 34 மாணவர்கள் கொல்லப்பட்டனர்.
News September 22, 2025
தவறான யூடியூபர்களுக்கு ஆப்பு வைக்க வேண்டும் : வடிவேலு

சென்னையில் நடைபெற்ற நடிகர் சங்க பொதுக்குழு கூட்டத்தில் பங்கேற்ற வடிவேலு, இன்றைய சினிமா கலைஞர்களின் நிலை குறித்து பேசியுள்ளார். திரைத்துறையினரிடம் கொஞ்சம் ஒற்றுமை குறைவாக உள்ளதாக கூறிய அவர், அனைவரும் ஒற்றுமையுடன் செயல்பட வேண்டும் என தெரிவித்தார். சமூக வலைதளங்களில் திரையுலகினர் பற்றி அவதூறாக சில பேசுவதாகவும், நாம் தவறாக பேசுபவர்களுக்கு ஆப்பு வைக்க வேண்டும் எனவும் கூறினார்.