News September 8, 2025
இந்தியாவிற்குள் ஊடுருவ முயன்ற பாகிஸ்தானி கைது

ஜம்மு காஷ்மீரின் ஆர்.எஸ்.புரா பகுதியை ஒட்டிய இந்திய எல்லைக்குள் ஊடுருவ முயன்ற பாகிஸ்தானி கைது செய்யப்படுள்ளார். பாகிஸ்தானின் பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்த சிராஜ் கான் என்ற அந்த நபர், இந்திய எல்லைக்குள் நுழைவதை கண்டு முதலில் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது. பின்னர் அவரை பிடித்த ராணுவம், அவரிடம் இருந்து பாகிஸ்தான் பணத்தை பறிமுதல் செய்து தீவிர விசாரணை நடத்தி வருகிறது.
Similar News
News September 9, 2025
சமூக வலைதளங்களுக்கு விதித்த தடை நீக்கம்

நேபாளத்தில் சமூக வலைதளங்களுக்கு விதித்த தடையை அந்நாட்டு அரசு நீக்கியது. 26 சமூக வலைதளங்களுக்கு விதித்த தடையை கண்டித்து காட்மாண்டுவில் இளைஞர்கள் நடத்திய போராட்டத்தில் வன்முறை வெடித்து 19 பேர் உயிரிழந்தனர், ஏராளமானோர் காயமடைந்தனர். இதையடுத்து அங்கு அமைச்சரவை அவசரமாக கூடி சமூக வலைதளங்களுக்கான தடையை நீக்கியுள்ளது. இதை IT அமைச்சர் பிருத்வி சுப்பா குருங் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.
News September 9, 2025
நுண்சிலை செய்த பொன்சிலையே அதுல்யா

காந்த கண்களால் கவர்ந்திழுக்கும் அதுல்யா ரவி, இன்ஸ்டாவில் பகிர்ந்துள்ள புகைப்படங்களால் ரசிகர்கள் ‘நான் ஈ’ படத்தின் வீசும் வெளிச்சத்திலே பாடலை பாடத் தொடங்கியுள்ளனர். எந்த லுக்கிலும் தன்னால் நடிக்க முடியும் என்பதை இந்த புகைப்படங்கள் மூலம் அதுல்யா உணர்த்துகிறார். நாடோடிகள் 2, கடாவர், அடுத்த சாட்டை உள்ளிட்ட படங்களில் நடித்து கவனம் ஈர்த்த அவர், தற்போது டீசல் படத்தின் ரிலீசிற்காக காத்திருக்கிறார்.
News September 9, 2025
இந்தியாவில் அதிகரிக்கும் செல்போன் திருட்டு

இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் செல்போன் விற்பனை எண்ணிக்கை அதிகரிப்பது போல் அவை திருடப்படும் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது. கடந்த 2 ஆண்டுகளில் டெல்லியில் 8.38 லட்சம் போன்கள் திருடப்பட்டுள்ளன. செல்போன் திருட்டில் டெல்லிக்கு அடுத்து கர்நாடகா, தெலங்கானா, உத்தரப் பிரதேசம், மஹாராஷ்டிரா ஆகிய மாநிலங்கள் உள்ளன. குறிப்பாக டெல்லியில் செல்போனை தொலைத்த 100 பேரில் 2 பேருக்கு மட்டுமே அது திருப்பி கிடைத்துள்ளது.