News September 28, 2025
அர்ஷ்தீப் சிங் மீது புகார் கொடுக்கும் பாகிஸ்தான்

இந்திய பவுலர் அர்ஷ்தீப் சிங்கிற்கு எதிராக பாகிஸ்தான் ICC-ல் புகாரளிக்க முடிவு செய்துள்ளது. IND vs PAK போட்டியின் போது, பாக்., வீரர்கள் துப்பாக்கியால் சுடுவது போன்றும், இந்திய போர் விமானங்களை வீழ்த்தியதை போலவும் சைகை காட்டினர். இதை எதிர்த்து அர்ஷ்தீப் செய்த சைகை வைரலானது. இதனால் தங்களுக்கு ICC 30% அபராதம் விதித்த போல, அர்ஷ்தீப் சிங்கிற்கும் அபராதம் விதிக்க வேண்டும் என பாக்., முயன்று வருகிறது.
Similar News
News December 9, 2025
RO-KO நிரூபிக்க ஒன்றும் மிச்சமில்லை: அஸ்வின்

2027 ODI உலகக்கோப்பை வரை ரோஹித், கோலி நீடிப்பார்களா என்ற கேள்வி முன்வைக்கப்படுவதை அஸ்வின் கடுமையாக சாடியுள்ளார். 2 மூத்த வீரர்களும் இன்னும் தங்கள் திறமையை நிரூபிக்க வேண்டும் என்று நினைப்பது சிரிப்பை வரவழைக்கிறது. அவர்கள் நிரூபிக்க ஒன்றும் மிச்சமில்லை. அவர்களின் அர்ப்பணிப்பு நிறைந்த கிரிக்கெட் அடுத்த தலைமுறையினருக்கு பாடமாக இருக்கும் என்றும் அஸ்வின் தெரிவித்துள்ளார்.
News December 9, 2025
புத்தர் பொன்மொழிகள்

*நமக்கு நடக்கும் அனைத்துக்கும் காரணம், நாம் நினைத்த, சொன்ன, அல்லது செய்தவற்றின் விளைவாகும். நம் வாழ்க்கைக்கு நாம் மட்டுமே பொறுப்பு. *நீங்கள் ஒரு பூவில் விருப்பப்பட்டால் அதைப் பறித்து விடுவீர்கள். ஆனால் நீங்கள் ஒரு பூவில் அன்பு வைத்தால் தினமும் அதற்குத் தண்ணீர் ஊற்றுவீர்கள். *நாம் எங்கு சென்றாலும், எங்கிருந்தாலும், நமது செயல்களுக்கான விளைவுகள் நம்மைப் பின்தொடர்கின்றன.
News December 9, 2025
கொரோனா பற்றி கூறியவரை பழிவாங்க துடிக்கும் சீனா

சீனாவின் வுஹான் ஆய்வகத்தில் இருந்துதான் கொரோனா பரவியதாக உலகிற்கு சொன்னதால், தன்னை பழிவாங்க சீனா முயற்சிப்பதாக, வைரலாஜிஸ்ட் லி-மியாங் யான் குற்றஞ்சாட்டியுள்ளார். கடந்த 5 ஆண்டுகளாக, சீனாவில் உள்ள தனது பெற்றோர், கணவரை பிடித்து வைத்துக் கொண்டு, தன்னை நாடு திரும்ப சொல்லி அழுத்தம் கொடுத்து வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். கொரோனா பரவல் குறித்து உலகிற்கு சொன்னதும், யான் US-ல் தஞ்சம் புகுந்தார்.


