News April 12, 2025
இந்தியா மீது தாக்குதல் நடத்த பாக். பயங்கரவாதிகள் சதியா?

மும்பை தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட ராணா நாடு கடத்தப்பட்ட நிலையில், இந்திய நகரங்கள் மீது பயங்கரவாத தாக்குதல் நடத்தப்படலாம் என உளவுத் துறை எச்சரித்துள்ளது. 2008ல் நிகழ்ந்தது போல, பாகிஸ்தான் பயங்கரவாதிகள் கடல் வழியாக ஊடுருவி தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ளதாக உஷார்படுத்தியுள்ளது. எனவே மக்கள் அதிகம் கூடும் இடங்கள், ரயில்வே நிலையங்களில் கண்காணிப்பை தீவிரப்படுத்தும்படி அலர்ட் செய்துள்ளது.
Similar News
News September 5, 2025
பகல் 12 மணி வரை இன்று.. முக்கிய செய்திகள்

✪கட்சியில் இருந்து <<17618597>>விலகியவர்களை <<>>மீண்டும் இணைக்க வேண்டும்: EPS-க்கு செங்கோட்டையன் கெடு!
✪அறிவியல் <<17617037>>மாற்றத்துக்கு <<>>அடிக்கோடிட்டவர் பெரியார்: CM
✪தங்கம் <<17617924>>விலை <<>>சவரனுக்கு ₹560 உயர்வு
✪ஐரோப்பா மூலம் சீனாவுக்கு செக் வைக்கும் டிரம்ப்
✪மகளிர் <<17616660>>உலகக் <<>>கோப்பை டிக்கெட் ₹100 மட்டுமே! ✪எனது <<17616643>>வாழ்க்கை<<>> சலிப்பானது: அனுஷ்கா
News September 5, 2025
BREAKING: மீண்டும் ஒன்றிணையும் அதிமுக?

அதிமுக மீண்டும் ஒன்றிணைவதற்கான சமிக்ஞையை <<17618597>>செங்கோட்டையன்<<>> கொடுத்துள்ளதாக அரசியல் பார்வையாளர்கள் கூறுகின்றனர். தனக்கு வந்த 2 வாய்ப்புகளை தியாகம் செய்தவன் என அழுத்தம் திருத்தமாக, 2017-ல் CM பதவி அவரை தேடி வந்ததை மறைமுகமாக கூறியுள்ளார். மூத்த நிர்வாகிகள் சிலர் தன்பக்கம் இருப்பதாகவும் அவர் கூறியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனால், விரைவில் OPS, சசிகலா, TTV ஆகியோர் அதிமுகவில் இணைய வாய்ப்புள்ளதாம்.
News September 5, 2025
டெல்லி சென்றது ஏன்? செங்கோட்டையன் விளக்கம்

பாஜக அழைத்ததால்தான் டெல்லி சென்று தலைவர்களை சந்தித்ததாக செங்கோட்டையன் கூறியுள்ளார். கட்சித் தலைமைக்கு தெரியாமல் அவர் டெல்லி சென்றது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்த நிலையில், இந்த அதிரடி கருத்தை தெரிவித்துள்ளார். இதன் மூலம், அதிமுகவை ஒன்றிணைக்க BJP முயல்வதாக கூறப்படுவது வெட்ட வெளிச்சமாகியுள்ளதாக அரசியல் நோக்கர்கள் கருத்து தெரிவிக்கின்றனர். உங்கள் கருத்து என்ன கமெண்ட்ல சொல்லுங்க.