News September 21, 2025
டிராமாவை தொடங்கிய பாகிஸ்தான்!

ஆசிய கோப்பை சூப்பர் 4 சுற்றில் இன்று இந்தியாவும், பாகிஸ்தானும் மோத உள்ளன. இதற்கு முன்னதாக, நேற்று இருநாட்டு கேப்டன்களின் செய்தியாளர்கள் சந்திப்பு நடைபெற்றது. ஆனால், இந்திய வீரர்கள் கைகொடுக்காமல் சென்றது போல், நேற்றைய செய்தியாளர்கள் சந்திப்பை பாகிஸ்தான் புறக்கணித்துள்ளது. முன்னதாக, நடுவரை மாற்றினால் தான் விளையாடுவேன் என டிராமா செய்து, UAE உடனான போட்டியை தாமதமாக்கியதும் குறிப்பிடத்தக்கது.
Similar News
News September 21, 2025
BCCI-ன் அடுத்த தலைவர் இவர் தானா?

BCCI தலைவர் தேர்தல் வரும் 28-ம் தேதி நடைபெற உள்ளது. இதுதொடர்பான ஆலோசனை கூட்டம் டெல்லியில் நேற்று நடந்தது. இதில் உள்ளூர் கிரிக்கெட் ஜாம்பவான் மிதுன் மன்ஹாஸ் பெயர் முன்மொழியப்பட்டுள்ளது. இவரே அடுத்த BCCI தலைவராக நியமிக்கப்படுவார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. J&K கிரிக்கெட் சங்கத்தில் பணியாற்றிய மிதுன், IPL-ல் டெல்லி, குஜராத் உள்ளிட்ட பல அணி நிர்வாகங்களிலும் பணியாற்றியுள்ளார்.
News September 21, 2025
2034 வரை மோடி தான் PM வேட்பாளர்: ராஜ்நாத் சிங்

2034 வரை மோடி தான் பாஜகவின் PM வேட்பாளர் என அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார். 1980 முதல் மோடியுடன் இணைந்து பணியாற்றி வருவதாகவும், அவரைப் போன்ற மக்களிடம் நெருக்கமாக தொடர்பில் இருக்கும், பிரச்னைகளை எளிமையாக அணுகும் ஒரு தலைவனை இதுவரை பார்த்ததில்லை என்றும் ராஜ்நாத் சிங் கூறியுள்ளார். மேலும், சர்வதேச பிரச்னைகளுக்கு உலக நாடுகளின் தலைவர்களே PM மோடியுடன் ஆலோசனை கேட்பதாகவும் தெரிவித்துள்ளார்.
News September 21, 2025
சாக்ரடீஸ் பொன்மொழிகள்

*ஆடம்பரம் என்பது போலியானது வறுமை, மனநிறைவு என்பது வற்றாத செல்வம். *பைத்தியக்காரனை நிச்சயம் திருத்தி விடலாம்; தற்பெருமை பேசுபவனை திருத்தவே முடியாது. *உனது அறிவையும் ஆற்றலையும் பகிராது விட்டால் அது உன்னை அழித்துவிடும். *பிறரது குறையை காண்பவன் அரை மனிதன், தனது குறையை காண்பவன் முழு மனிதன். *உன் அன்பின் தன்மைக்கு ஏற்றபடி உன் செயல்கள் அமையும். உன் செயல்களுக்கு ஏற்றபடி உன் வாழ்க்கை அமையும்.