News May 8, 2025
பாக்., ஏவுகணை தாக்குதல்: முறியடித்த இந்திய ராணுவம்

இந்திய நகரங்கள் மீது பாகிஸ்தான் நடத்திய தாக்குதல் முயற்சிகள் முறியடிக்கப்பட்டதாக நமது பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது. ஸ்ரீநகர், ஜம்மு, பதான்கோட், அமிர்தசரஸ், ஜலந்தர், சண்டிகர், கபூர்தலா, லூதியானா உள்ளிட்ட 15 நகரங்கள் மீது பாகிஸ்தான் ஏவுகணைகள் மற்றும் டிரோன்களை ஏவியது. ஆனால், அவை அனைத்து இந்திய வான்பாதுகாப்பு அமைப்பால் நடுவானில் சுட்டு வீழ்த்தப்பட்டன என்று மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Similar News
News December 4, 2025
‘டியூட்’ சர்ச்சை.. இழப்பீடு பெற்ற இளையராஜா

‘டியூட்’ படத்தில் கருத்த மச்சான், நூறு வருஷம் உள்ளிட்ட பாடல்களை, தன்னுடைய அனுமதியின்றி பயன்படுத்தியதாக மெட்ராஸ் HC-ல் இளையராஜா வழக்கு தொடுத்திருந்தார். இந்நிலையில், இளையராஜாவுக்கு உரிய இழப்பீடு வழங்கியதாகவும், படத்தின் டைட்டில் கார்டில் நன்றி தெரிவிக்கப்படும் என்றும் தயாரிப்பு நிறுவனம் பதிலளித்துள்ளது. இருதரப்பும் சமரசத்திற்கு ஒப்புக்கொண்டதால், டியூட்-ல் மீண்டும் அப்பாடல்கள் சேர்க்கப்பட்டுள்ளன.
News December 4, 2025
தினம் ஒரு திருக்குறள்

▶குறள் பால்: பொருட்பால் ▶இயல்: அரசியல் ▶அதிகாரம்: பொச்சாவாமை
▶குறள் எண்: 539
▶குறள்:
இகழ்ச்சியின் கெட்டாரை உள்ளுக தாந்தம்
மகிழ்ச்சியின் மைந்துறும் போழ்து.
▶பொருள்: மமதையால் பூரித்துப்போய்க் கடமைகளை மறந்திருப்பவர்கள், அப்படி மறந்துபோய் அழிந்து போனவர்களை நினைத்துப் பார்த்துத் திருந்திக் கொள்ள வேண்டும்.
News December 4, 2025
தோல்விக்கான காரணங்களை அடுக்கிய கே.எல்.ராகுல்

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான 2-வது ODI-ல் தோற்றதற்கு டாஸும் ஒரு முக்கிய காரணம் என்று கேப்டன் கே.எல்.ராகுல் கூறியுள்ளார். ஏனெனில், 2-வது இன்னிங்ஸில் பனிப்பொழிவின் காரணமாக பந்துவீசுவது மிகவும் கடினமாக இருந்ததாக அவர் தெரிவித்துள்ளார். பந்துவீச்சாளர்கள் இன்னும் சிறப்பாக செயல்பட்டிருக்க வேண்டும் என்றும், பேட்டிங்கின் போது 20-25 ரன்கள் கூடுதலாக அடித்திருக்கலாம் எனவும் கே.எல்.ராகுல் பேசியுள்ளார்.


