News May 8, 2025

பாகிஸ்தான் பொய் சொல்கிறது: விக்ரம் மிஸ்ரி

image

இந்தியா நடத்திய தாக்குதல் குறித்து பாகிஸ்தான் பொய் சொல்வதாக நம் வெளியுறவு செயலாளர் விக்ரம் மிஸ்ரி தெரிவித்துள்ளார். தீவிரவாதிகள் மீது மட்டுமே தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் உயிரிழந்தவர்கள் அனைவரும் தீவிரவாதிகள் மட்டுமே, பொதுமக்கள் அல்ல என்று கூறிய மிஸ்ரி, தீவிரவாதிகளுக்கு ஆதரவு தரவில்லை எனில், அவர்களின் உடல்களுக்கு ஏன் பாக்., அரசு கொடி போர்த்தி மரியாதை தந்தது எனக் கேள்வி எழுப்பினார்.

Similar News

News September 19, 2025

என்ன பண்றது எனக்கே கஷ்டமா தான் இருக்கு!

image

ஹிமாச்சலில் வெள்ளப் பாதிப்பு பகுதிகளை பார்வையிட பாஜக MP கங்கனா ரனாவத் சென்றார். அவரை சூழ்ந்த பொதுமக்கள், வெள்ளத்தால் தங்களது உடமைகளை இழந்தது குறித்து வேதனையுடன் தெரிவித்தனர். அப்போது, என்ன செய்ய, மணலியில் உள்ள எனது ஹோட்டலில் நேற்று ₹50-க்கு தான் வியாபாரம் நடந்தது, ஆனால் ஊழியர்களுக்கு ₹15 லட்சம் சம்பளம் கொடுக்க வேண்டும் என்ற தன்னுடைய கஷ்டங்களை புலம்ப ஆரம்பித்தது இணையத்தில் பேசுபொருளாகியுள்ளது.

News September 19, 2025

இந்தியா, சீனாவிடம் டிரம்பின் பாட்சா பலிக்காது: ரஷ்யா

image

சீனா, இந்தியாவை மிரட்டி பணிய வைக்கலாம் என டிரம்ப் நினைத்தால், அது நடக்காது என ரஷ்ய அமைச்சர் செர்ஜி லவ்ரோ தெரிவித்துள்ளார். இரு நாடுகளும் பழங்காலம் முதலே சிறந்து விளங்கிய நாகரீகங்கள் எனவும், அவர்களிடம் போய் இதை செய், அதை செய், இல்லையென்றால் வரிவிதிப்பேன் என்று சொல்வது நகைப்புக்குரியதாக இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார். டிரம்ப் வரிவிதிப்புகளால் மிரட்டி வரும் நிலையில் அவர் இவ்வாறு சாடியுள்ளார்.

News September 19, 2025

தினம் ஒரு திருக்குறள்

image

▶குறள் பால்: பொருட்பால் ▶இயல்: அரசியல். ▶அதிகாரம்: தெரிந்துசெயல்வகை. ▶குறள் எண்: 463 ▶குறள்: ஆக்கம் கருதி முதலிழக்கும் செய்வினை ஊக்கார் அறிவுடை யார். ▶பொருள்: பெரும் ஆதாயம் கிட்டுமென்று எதிர்பார்த்துக் கை முதலையும் இழந்து விடக்கூடிய காரியத்தை அறிவுடையவர்கள் செய்யமாட்டார்கள்.

error: Content is protected !!