News August 31, 2024

பாகிஸ்தானுக்கு இனிமே இருக்கு

image

பாகிஸ்தானுடன் நேரடி பேச்சுவார்த்தை நடத்திய காலமெல்லாம் முடிந்துவிட்டது என வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் கூறியுள்ளார். இனிமேல் அவர்களின் ஒவ்வொரு நடவடிக்கைக்கும் எதிர்வினை இருக்கும் எனக் குறிப்பிட்ட அவர், பயங்கரவாதமும், பேச்சுவார்த்தையும் ஒருசேர நடக்காது என்பதில் உறுதியாக உள்ளோம் என்றார். மேலும், பாகிஸ்தானில் பயங்கரவாதம் என்பது தொழில்முறையாக மாறிவிட்டதாகவும் அவர் விமர்சித்துள்ளார்.

Similar News

News July 8, 2025

கடலூர் கோர விபத்து: இபிஎஸ் இரங்கல்

image

கடலூர் மாவட்டம் செம்மங்குப்பத்தில் <<16987572>>பள்ளி வேன் மீது ரயில்<<>> மோதிய விபத்தில் உயிரிழந்த மாணவர்களின் குடும்பத்தினருக்கு இபிஎஸ் இரங்கல் தெரிவித்துள்ளார். ஹாஸ்பிடலில் சிகிச்சை பெற்று வரும் மாணவர்கள் அனைவரும் பூரண உடல் நலன் பெற வேண்டும் என இறைவனை வேண்டுவதாக தனது X பக்கத்தில் குறிப்பிட்டுள்ள அவர், உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு உரிய நிவாரணம் வழங்கவும் அரசுக்கு வலியுறுத்தியுள்ளார்.

News July 8, 2025

நாடு முழுவதும் நாளை பொது வேலைநிறுத்தம்

image

பழைய ஓய்வூதியத் திட்டம் உள்ளிட்ட 17 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, நாடு முழுவதும் நாளை பொது வேலைநிறுத்தம் நடைபெற உள்ளது. இதில் தொ.மு.ச., சி.ஐ.டி.யு., ஆகிய தொழிற்சங்கங்கள் பங்கேற்பது மட்டுமல்லாமல், அவர்கள் அழைப்பும் விடுத்துள்ளனர். ஆனால், அதிமுகவின் அண்ணா தொழிற்சங்கம் பங்கேற்கவில்லை. இருப்பினும் பஸ்கள், ஆட்டோக்கள் சேவையில் பாதிப்பு இருக்கும் என தொழிற்சங்க நிர்வாகிகள் திட்டவட்டமாக தெரிவித்துள்ளனர்.

News July 8, 2025

சாதி பற்றி பேசி சர்ச்சையில் சிக்கிய ரஷ்மிகா

image

கொடவா சமூகத்தில் இருந்து திரைத்துறையில் நுழைந்த முதல் நடிகை தான் தான் என்று ரஷ்மிகா மந்தனா கூறியது சர்ச்சையாகியுள்ளது. ஏனென்றால், இச்சமூகத்தில் இருந்து பிரேமா, தஸ்வினி, கரும்பையா, ரீஷ்மா, ஸ்வேதா, வர்ஷா பொல்லம்மா, ஹரிசிகா பூனாச்சா, சுப்ரா அய்யப்பா ஆகியோர் திரைக்கு வந்துள்ளனர். இதனால், ரஷ்மிகாவின் கருத்துக்கு அச்சமூக அமைப்புகள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

error: Content is protected !!