News September 22, 2025
பாகிஸ்தான் விமானப்படை தாக்குதல்… 30 பேர் உயிரிழப்பு

பாக்.,ன் கைபர் பக்துன்க்வா பகுதியில் அந்நாட்டு விமானப்படை குண்டு மழை பொழிந்துள்ளது. இன்று அதிகாலை 2 மணியளவில் 8 வெடிகுண்டுகள் வீசப்பட்டதில், பெண்கள், குழந்தைகள் உள்பட 30 பேர் கொல்லப்பட்டுள்ளனர். ஆனால், தெஹ்ரீக்-இ-தலிபான் பயங்கரவாத அமைப்பை குறிவைத்து நடத்திய தாக்குதலில், பொதுமக்களே பலியானதாக உள்ளூர் ஊடகங்கள் தெரிவிக்கின்றன. இதனால், சொந்த நாட்டு மக்களை ராணுவமே கொன்ற விவகாரம் விவாதமாகியுள்ளது.
Similar News
News September 22, 2025
கண்களை மூடினால் தோன்றும் நிறம் கருப்பு கிடையாதா?

கண்களை மூடினால் என்ன நிறம் தெரியும்? கருப்பு என்கிறீர்களா? இல்லை. கண்களை மூடும் போது இருட்டாக இருப்பதால் கருப்பு நிறம் தான் தோன்றுகிறது என நீங்கள் நினைக்கலாம். ஆனால் கண்களை மூடினால் தோன்றும் நிறம் eigengrau என அழைக்கப்படுகிறது. அதாவது, அடர்ந்த சாம்பல் நிறத்தை தான் ஜெர்மன் மொழியில் இவ்வாறு குறிப்பிடுகின்றனர். 99% பேருக்கு தெரியாத இந்த தகவலை SHARE பண்ணுங்க.
News September 22, 2025
டிகிரி போதும்.. ₹64,820 சம்பளத்தில் வேலை

SBI வங்கியில் காலியாகவுள்ள 122 மேனேஜர், டெபுடி மேனேஜர், மேனேஜர் (Credit Analyst) உள்ளிட்ட காலியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. கல்வித்தகுதி: B.E., B.Tech., MBA. வயது வரம்பு: 25 – 35 (சில பதவிகள் மாறுதலுக்கு உட்பட்டது). சம்பளம்: ₹64,820 – ₹1,05,280. விண்ணப்பிக்க கடைசி நாள்: அக்.2. மேலும் அறிய மற்றும் விண்ணப்பிக்க இங்கே <
News September 22, 2025
நடிகை ராதிகாவின் தாயார் காலமானார்… இறுதி அஞ்சலி

மறைந்த MR ராதாவின் மனைவியும், நடிகை ராதிகாவின் தாயாருமான கீதா ராதாவின் உடல், பெசன்ட் நகர் மின்மயானத்தில் தகனம் செய்யப்பட்டது. கண்ணீர் மல்க தனது தாயாரை, சகோதரிகள் ராதிகா மற்றும் நிரோஷா உள்பட உறவினர்கள் இறுதி அஞ்சலி செலுத்தினர். முன்னதாக, CM ஸ்டாலின், கி.வீரமணி போன்ற அரசியல் தலைவர்கள், திரை பிரபலங்கள் உள்ளிட்ட பலரும் கீதா ராதாவின் உடலுக்கு நேரில் அஞ்சலி செலுத்தினர்.