News May 16, 2024

பாக். ஆக்கிரமிப்பு காஷ்மீரில் ஏன் திடீர் கொந்தளிப்பு? (1)

image

காலனியாதிக்கத்தில் இருந்து இந்தியா சுதந்திரம் பெற்றபோது, தனிநாடாக இருந்த ஜம்மு-காஷ்மீரின் சில பகுதிகளை பாகிஸ்தான் ஆக்கிரமித்து கொண்டது. எஞ்சியப் பகுதிகள் இந்தியாவின் கட்டுப்பாட்டின்கீழ் வந்தன. அண்மையில் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் வெடித்த போராட்டத்தில் 4 பேர் பலியாகினர். இந்த போராட்டத்திற்கு உணவு, எரிபொருள் உள்ளிட்டவற்றின் விலை அதிகரிப்பும் ஒரு காரணமாகக் கூறப்படுகிறது.

Similar News

News November 26, 2025

இந்தியாவில் காமன்வெல்த்: களைகட்ட போகும் அகமதாபாத்

image

2030-ம் ஆண்டு காமன்வெல்த் போட்டிகள் இந்தியாவில் நடைபெற உள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 2010- ல் டெல்லியில் காமன்வெல்த் போட்டிகள் நடந்த நிலையில், 20 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது அகமதாபாத்தில் நடைபெற இருக்கிறது. அதற்கு ஏற்றார் போன்ற உலகத்தரம் வாய்ந்த மைதானங்கள் அகமதாபாத்தில் உள்ளன. இந்தியாவின் விளையாட்டுத்துறை புதிய உச்சத்தை தொட இது உதவியாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

News November 26, 2025

பிரபல ராப் பாடகர் வேடனுக்கு தீவிர சிகிச்சை

image

உடல்நலக்குறைவால் ஹாஸ்பிடலில் அனுமதிக்கப்பட்டுள்ள பிரபல ராப் பாடகர் வேடனுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவருக்கு ஏற்பட்ட உடல் பாதிப்புகள் குறித்த தகவல்கள் வெளியிடப்படவில்லை. இதனிடையே டிச.12-ம் தேதி கத்தாரில் நடக்க இருந்த அவரது இசை நிகழ்ச்சி ஒத்திவைக்கப்பட்டுள்ளது. மலையாளத்தில் மஞ்சுமெல் பாய்ஸ், நரிவேட்டை உள்ளிட்ட படங்களில் பாடி பிரபலமான அவர், தமிழில் பைசன் படத்தில் பாடியுள்ளார்.

News November 26, 2025

இந்தியாவின் முதல் தானியங்கி டிரோன் எதிர்ப்பு வாகனம்

image

ஐதராபாத்தைச் சேர்ந்த இந்திரஜால் நிறுவனம், நாட்டின் முதல் AI-ஆல் இயங்கும் தானியங்கி டிரோன் எதிர்ப்பு ரோந்து வாகனத்தை அறிமுகம் செய்துள்ளது. எதிரிநாடுகளின் டிரோன்களை கண்காணித்து, தாக்கி அழிக்கும் வல்லமையை இது கொண்டுள்ளது. சமீபகாலமாக, பாகிஸ்தானில் இருந்து டிரோன் வழியாக ஆயுதங்கள், போதைப்பொருள்கள் கடத்தப்படுவது அதிகரித்து வரும் நிலையில், அதற்கு தீர்வாக இந்த வாகனம் வடிவமைக்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!