News May 16, 2024
பாக். ஆக்கிரமிப்பு காஷ்மீரில் ஏன் திடீர் கொந்தளிப்பு? (1)

காலனியாதிக்கத்தில் இருந்து இந்தியா சுதந்திரம் பெற்றபோது, தனிநாடாக இருந்த ஜம்மு-காஷ்மீரின் சில பகுதிகளை பாகிஸ்தான் ஆக்கிரமித்து கொண்டது. எஞ்சியப் பகுதிகள் இந்தியாவின் கட்டுப்பாட்டின்கீழ் வந்தன. அண்மையில் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் வெடித்த போராட்டத்தில் 4 பேர் பலியாகினர். இந்த போராட்டத்திற்கு உணவு, எரிபொருள் உள்ளிட்டவற்றின் விலை அதிகரிப்பும் ஒரு காரணமாகக் கூறப்படுகிறது.
Similar News
News November 1, 2025
நாமக்கல் மின்வாரிய மக்கள் குறைதீர் கூட்டம்!

நாமக்கல் மாவட்ட மின்சாரத்துறை சார்பில், அடுத்த மாதம் மக்கள் குறைதீர் கூட்டம் நடைபெற உள்ளது. இந்த கூட்டம் நாமக்கல், திருச்செங்கோடு, பரமத்தி வேலூர், பள்ளிபாளையம், சேந்தமங்கலம் ஆகிய பகுதிகளில் நடைபெறுகிறது. அடுத்த மாதம் 5ஆம் தேதி முதல் 28ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இந்தத் தகவலை, தலைமை மின்செயற்பொறியாளர் செய்திக்குறிப்பில் வெளியிட்டுள்ளார்.
News November 1, 2025
பைசன் படத்துக்கு பாலிவுட் இயக்குநர் பாராட்டு

‘பைசன்’ படம் ஒரு முழுமையான அதிரடி படம் என்று பாலிவுட் முன்னணி இயக்குநர் ஹன்சல் மேத்தா பாராட்டியுள்ளார். திரை மொழியில் சாதியம், சுதந்திரம், வன்முறை, அடிமைத்தனம் ஆகியவற்றை தைரியமாக எடுத்துக் கூறியதற்காக மாரி செல்வராஜுக்கு நன்றி தெரிவித்துள்ளார். தனக்கு தெரியாத பல நடிகர்கள் இருந்தாலும், கதைக்கு தேவையான கதாபாத்திரங்களாக மாறி, அவர்கள் தன்னை ரசிக்க வைத்துள்ளதாகவும் கூறியுள்ளார்.
News November 1, 2025
காலையில் இதை செய்தால் சிறுநீரகம் செத்துபோகும்

➤காலையில் எழுந்ததும் தண்ணீர் குடிக்காமல் இருப்பது ➤தண்ணீரே அருந்தாமல் காபி, டீ குடிப்பது ➤சிறுநீர் கழிக்காமல் அடக்கி வைத்திருப்பது ➤வெறும் வயிற்றில் Pain Killer மாத்திரைகளை சாப்பிடுவது ➤உடற்பயிற்சி செய்த பின் தண்ணீர் அருந்தாமல் இருத்தல் போன்ற விஷயங்களை தொடந்து செய்தால் உங்கள் சிறுநீரகம் பாதிக்கப்படும் என டாக்டர்கள் எச்சரிக்கின்றனர். பலருக்கு தெரியாத இத்தகவலை SHARE பண்ணுங்க.


