News May 16, 2024
பாக். ஆக்கிரமிப்பு காஷ்மீரில் ஏன் திடீர் கொந்தளிப்பு? (1)

காலனியாதிக்கத்தில் இருந்து இந்தியா சுதந்திரம் பெற்றபோது, தனிநாடாக இருந்த ஜம்மு-காஷ்மீரின் சில பகுதிகளை பாகிஸ்தான் ஆக்கிரமித்து கொண்டது. எஞ்சியப் பகுதிகள் இந்தியாவின் கட்டுப்பாட்டின்கீழ் வந்தன. அண்மையில் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் வெடித்த போராட்டத்தில் 4 பேர் பலியாகினர். இந்த போராட்டத்திற்கு உணவு, எரிபொருள் உள்ளிட்டவற்றின் விலை அதிகரிப்பும் ஒரு காரணமாகக் கூறப்படுகிறது.
Similar News
News November 28, 2025
மிகவும் விலையுயர்ந்த 10 வீடுகள்

இந்தியாவின் பல முன்னணி தொழிலதிபர்கள் மிகப்பெரும் செலவில் அழகான, பிரமாண்டமான வீடுகளை கட்டியுள்ளனர். அவர்களில் யாரெல்லாம் மிகவும் விலையுயர்ந்த வீடுகளை வைத்துள்ளனர்? அந்த வீடுகள் எங்கு அமைந்துள்ளன? அவற்றின் மதிப்பு எவ்வளவு? இந்த தகவல்களை எல்லாம் மேலே போட்டோக்களாக பகிர்ந்துள்ளோம். ஒவ்வொரு படமாக ஸ்வைப் செய்து பார்த்து விவரங்களை தெரிந்து கொள்ளுங்கள். SHARE
News November 28, 2025
காற்றுமாசு விவகாரத்தில் மோடி மௌனம் சரியா? ராகுல் காந்தி

டெல்லியில் காற்று மாசுபாடு குறித்து நாடாளுமன்றத்தில் விரிவாக விவாதிக்க வேண்டும் என ராகுல் காந்தி வலியுறுத்தியுள்ளார். தங்கள் குழந்தைகள் விஷக்காற்றை சுவாசித்து வருவதாக ஒவ்வொரு தாய்மாரும் வேதனைப்படுவதாகவும் அவர் கூறியுள்ளார். குழந்தைகள் மூச்சுத்திணறலால் துடிக்கும் போது மோடி அமைதியாக இருப்பது சரியா என கேள்வி எழுப்பியுள்ளார். உங்கள் அரசு ஏன் எந்த அவசர நடவடிக்கையும் எடுக்கவில்லை என சாடியுள்ளார்.
News November 28, 2025
புயல் அலர்ட்: 10 மாவட்டங்களில் அடைமழை வெளுக்கும்

டிட்வா புயல் எதிரொலியாக தமிழகத்தில் கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில், இரவு 7 மணி வரை புதுக்கோட்டை, ராமநாதபுரம், தூத்துக்குடி, நெல்லை, குமரி, தென்காசி, தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை ஆகிய 10 மாவட்டங்களில் மழை பெய்யக்கூடும் என IMD கணித்துள்ளது. தேவையின்றி வெளியே செல்வதை தவிர்க்குமாறு CM ஸ்டாலினும் அறிவுறுத்தியுள்ளார். ஆகையால், பாதுகாப்பாக இருங்கள் மக்களே!


