News May 16, 2024
பாக். ஆக்கிரமிப்பு காஷ்மீரில் ஏன் திடீர் கொந்தளிப்பு? (1)

காலனியாதிக்கத்தில் இருந்து இந்தியா சுதந்திரம் பெற்றபோது, தனிநாடாக இருந்த ஜம்மு-காஷ்மீரின் சில பகுதிகளை பாகிஸ்தான் ஆக்கிரமித்து கொண்டது. எஞ்சியப் பகுதிகள் இந்தியாவின் கட்டுப்பாட்டின்கீழ் வந்தன. அண்மையில் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் வெடித்த போராட்டத்தில் 4 பேர் பலியாகினர். இந்த போராட்டத்திற்கு உணவு, எரிபொருள் உள்ளிட்டவற்றின் விலை அதிகரிப்பும் ஒரு காரணமாகக் கூறப்படுகிறது.
Similar News
News September 19, 2025
ரோபோ சங்கர் மறைவு வேதனையளிக்கிறது: தமிழிசை

சின்னத்திரை முதல் வெள்ளித்திரை வரை ஜொலித்த நடிகர் ரோபோ சங்கரின் மறைவு மிகுந்த வருத்தத்தை அளிப்பதாக தமிழிசை செளந்தரராஜன் இரங்கல் தெரிவித்துள்ளார். ரோபோ சங்கர் குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்துள்ள தமிழிசை, திரைப்படக் கலைஞர்கள் தங்கள் கடுமையான பணிகளுக்கிடையில் உடல் நலத்தையும் பேணிப் பாதுகாக்க வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார்.
News September 19, 2025
அக்.1 முதல் ஆன்லைன் கேமிங் தடை மசோதா அமலாகிறது

ஆன்லைன் கேமிங் தடை மசோதா, அக்.1 முதல் அமலுக்கு வரும் என்று மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார். அதேநேரம், அமலுக்கு வருவதற்கு முன்பு மீண்டும் கேமிங் துறையினருடன் ஆலோசனை மேற்கொள்வோம் என்றும் அவர் கூறியுள்ளார். இந்த மசோதா மூலம், பணம் கட்டி விளையாடும் சூதாட்ட கேம்ஸ்களுக்கு தடை, மீறி விளையாடினால் 3 ஆண்டுகள் சிறை தண்டனை முதல் ₹2 கோடி வரை அபராதமும் விதிக்கப்படும்.
News September 19, 2025
சனிக்கிழமை, சிரிச்சா போச்சு.. ரோபோ சங்கரின் நினைவுகள்

சிரிச்சா போச்சு, கலக்க போவது யாரு போன்ற நிகழ்ச்சிகள் மூலம் நம்மை வயிறு குலுங்க சிரிக்க வைத்த ரோபோ சங்கர் உயிரிழந்துள்ளார். ஸ்டாண்ட் அப் காமெடி மட்டுமல்ல நடன நிகழ்ச்சிகளிலும் அவர் கலக்கி வந்தார். 100-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ள ரோபோ சங்கர் ‘மாரி’ படத்தின் சனிக்கிழமை, ‘வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன்’ ஜாக்கெட் ஜானகிராமன், ‘விஸ்வாசம்’ படத்தின் மெரிட்டு கதாபாத்திரங்களில் கவனம் ஈர்த்தார்.RIP