News April 29, 2025
இந்தியாவை கடுப்பேத்தும் PAK.. எல்லையில் தாக்குதல்

ஜம்மு காஷ்மீரில் இந்திய நிலைகளை நோக்கி பாகிஸ்தான் 5-வது நாளாக தாக்குதல் நடத்தியுள்ளது. பஹல்காம் தாக்குதலை தொடர்ந்து இந்தியா, பாக்., இடையே பதற்றம் நீடித்து வருகிறது. இதனிடையே எல்லை கோடு பகுதியில் பாகிஸ்தான் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது. நேற்று இரவும் குப்வாரா மற்றும் பாரமுல்லா பகுதியில் பாக் ராணுவம் தாக்குதல் நடத்தியுள்ளது. இதற்கு இந்திய தரப்பில் இருந்து தக்க பதிலடி கொடுக்கப்பட்டுள்ளது.
Similar News
News April 29, 2025
மேலே பாம்பு.. கீழே நரி.. மத்திய அரசை தாக்கிய CM ஸ்டாலின்!

மேலே பாம்பு.. கீழே நரி.. விழுந்தால் அகழி, இதற்கு இடையில் மாட்டியவர் போல மத்திய அரசு, ஆளுநர், நிதி நெருக்கடிக்கு இடையே சாதனை செய்கிறோம் என CM ஸ்டாலின் தெரிவித்துள்ளார். சட்டம் ஒழுங்கு சீராக, அமைதியாக இருப்பதால் இங்கு சாதி, மத வன்முறை இல்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். கலவரத்தை தூண்ட சிலர் நினைத்தாலும் மக்கள் அதனை முறியடித்து விடுகிறார்கள் என்றும் CM ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
News April 29, 2025
சந்தேகத்தால் சிதைந்த குடும்பம்

வீட்டில் அண்ணன் உள்ளாடையுடன் சுற்றித் திரிந்ததால் சந்தேகத்தில் தம்பி தனது மனைவியின் கழுத்தை நெரித்துக் கொலை செய்துள்ளார். உ.பியின் கோரக்பூரில் தம்பிக்கு அண்மையில் திருமணம் நடந்துள்ளது. புதுப்பெண் சரோஜின் சமையலை மாமியார், மைத்துனர் என அனைவரும் பாராட்டியுள்ளனர். இதனை விரும்பாத கணவர் சதீஷ், சரோஜை அழைத்து கண்டித்துள்ளார். பின்னர், சந்தேகத்தில் மனைவியை கொலை செய்ததாக போலீசில் வாக்குமூலம் அளித்துள்ளார்.
News April 29, 2025
திருப்பதி ஏழுமலையான் பக்தர்களின் கவனத்திற்கு..!

திருப்பதியில் வரும் பக்தர்களுக்கு சேவை செய்ய தொடங்கப்பட்டது தான் ஸ்ரீவாரி சேவை. இந்த சேவையில் ஜூன் மாதம் பங்கேற்க நாளை அதாவது, ஏப்ரல் 30-ம் தேதி முதல் முன்பதிவு செய்யலாம். காலை 11 மணிக்கு ஜெனரல் சேவைக்கும், மதியம் 12 மணிக்கு நவநீத சேவைக்கும், மதியம் 1 மணிக்கு பரகமணி சேவைக்கும், மதியம் 2 மணிக்கு சீனியர் சேவைக்கும் முன்பதிவு நடைபெறுகிறது. முன்பதிவு செய்ய <