News November 10, 2024
பாக். குண்டுவெடிப்பு: பலி 27ஆக உயர்வு

பாகிஸ்தானின் குவெட்டா ரயில் நிலையத்தில் நிகழ்த்தப்பட்ட குண்டுவெடிப்பில் பலியானோர் எண்ணிக்கை 27ஆக அதிகரித்துள்ளது. குவெட்டா ரயில் நிலையத்தில் ரயிலுக்காக பயணிகள் காத்திருந்தபோது திடீரென குண்டு வெடித்து சிதறியது. இதில் 62 பேர் பலத்த காயமடைந்து ஹாஸ்பிடலில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அதில் பலரின் நிலை கவலையளிக்கும் நிலையில் உள்ளது. இந்தத் தாக்குதலுக்கு பலுசிஸ்தான் விடுதலை ராணுவம் பொறுப்பேற்றுள்ளது.
Similar News
News December 7, 2025
வரத்து குறைவால் மீன்கள் விலை உயர்வு

டிட்வா புயலால் கடந்த வாரம் வெறிச்சோடி இருந்த சென்னை, கடலூர் மீன் சந்தைகள் இந்த வாரம் களைகட்டியுள்ளன. சென்னை காசிமேடு சந்தையில் மீன்கள் வரத்து குறைந்து காணப்பட்டதால் விலை கிடுகிடுவென உயர்ந்தது. 1 கிலோ வஞ்சிரம் – ₹900 – ₹1,400, கொடுவா ₹700 – ₹800, பால் சுறா – ₹350 – ₹500, சங்கரா, இறால் – ₹400 – ₹500, பாறை, கடமா ₹600 – ₹800, நண்டு ₹500 – ₹600-க்கு விற்பனையாகிறது. உங்கள் ஊரில் விலை என்ன?
News December 7, 2025
தேர்தல் பணியை தீவிரப்படுத்திய ECI

2026 சட்டப்பேரவை தேர்தலுக்கான பணிகளை தேர்தல் ஆணையம் தீவிரப்படுத்தியுள்ளது. சமீபத்தில் 234 தொகுதிகளுக்கும் தேர்தல் நடத்தும் அலுவலர்கள் நியமிக்கப்பட்ட நிலையில், அவர்களுடன் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் தேர்தல் முன்னெச்சரிக்கை நடவடிக்கை உள்ளிட்டவை குறித்து ஆலோசனை மேற்கொண்டுள்ளார். மேலும், வாக்குப்பதிவு இயந்திரங்களை சரிபார்க்கும் பணி வரும் வியாழக்கிழமை தொடங்கும் எனவும் தெரிகிறது.
News December 7, 2025
மதியத்தில் விஜய் பொதுக்கூட்டம்

ஈரோட்டில் விஜய் பங்கேற்கும் பொதுக்கூட்டம் டிச.16-ம் தேதி மதியம் 1 – மாலை 6 மணிக்குள் நடைபெறவிருப்பதாக கலெக்டரிடம் செங்கோட்டையன் அளித்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், ஈரோடு, பவளத்தாம்பாளையத்தில் 75,000 பேர் வந்து, செல்லும் வகையில் 7 ஏக்கர் இடத்தில் பொதுக்கூட்டம் நடைபெறவுள்ளதாகவும், ரோடு ஷோ இல்லாமல் பரப்புரை வாகனத்தில் விஜய் உரையாற்ற உள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.


