News May 8, 2025

பஹல்காம் தாக்குதல் தான் தொடக்கப்புள்ளி: விக்ரம் மிஸ்ரி

image

இந்தியா – பாக்., இடையே தற்போதைய பதற்றத்துக்கு தொடக்கப்புள்ளி பஹல்காம் தாக்குதலே என்று வெளியுறவு செயலாளர் விக்ரம் மிஸ்ரி தெரிவித்துள்ளார். இந்தியா பதற்றத்தை உருவாக்க முயலவில்லை என்றும், இந்தியாவின் பதிலடி பதற்றத்தை தூண்டாத வகையில், பயங்கரவாதிகள் மீது மட்டுமே நடத்தப்பட்டதாகவும் குறிப்பிட்டார். மேலும், பஹல்காம் தாக்குதலுக்கு டி.ஆர்.எப்., அமைப்பு 2 முறை பொறுப்பேற்றதையும் அவர் சுட்டிக் காட்டினார்.

Similar News

News November 3, 2025

Chokers இல்ல… நாங்க சாம்பியன்ஸ்

image

என்ன தான் திறமை இருந்தாலும் கோப்பையை வெல்லாத அணியை வசைபாடி கொண்டே தான் இருப்பார்கள். மகளிர் ODI WC வரலாற்றில் 1997, 2000-ல் அரையிறுதி வரை முன்னேறியும், 2005 மற்றும் 2017-ல் இறுதிப்போட்டியில் விளையாடி ரன்னர் அப் ஆக வெறும் கையுடன் திரும்பியதால் இந்திய அணி மீது Chokers டேக் இருந்தது. இன்றைய வெற்றியானது Chokers டேக்கை உடைத்ததோடு மட்டுமின்றி பல விமர்சனங்களுக்கும் முற்றுப்புள்ளி வைத்துள்ளது.

News November 3, 2025

அன்று கபில் தேவ்.. இன்று ஹர்மன்பிரீத் கவுர்

image

ஆடவர் கிரிக்கெட்டில் இந்தியா தற்போது கோலோச்சுவதற்கு 1983 உலகக் கோப்பை வெற்றி முக்கியமானதாகவும். கபில் தேவ் அண்ட் கோ வெற்றி, இந்திய கிரிக்கெட்டுக்கு திருப்புமுனையாக அமைந்தது. அவ்வெற்றியால் ஊக்கமடைந்து சச்சின், தோனி, கோலி, ரோஹித் போன்ற பல ஜாம்பவான்கள் உருவெடுத்தனர். அதுபோல, மகளிர் WC-ல் ஹர்மன்பிரீத் கவுர் தலைமையிலான வெற்றியின் உந்துதலால் எதிர்காலத்தில் பல நட்சத்திர வீராங்கனைகள் உருவாவார்கள்.

News November 3, 2025

தினம் ஒரு திருக்குறள்

image

▶குறள் பால்: பொருட்பால் ▶இயல்: அரசியல் ▶அதிகாரம்: தெரிந்துதெளிதல் ▶குறள் எண்: 508 ▶குறள்: தேரான் பிறனைத் தெளிந்தான் வழிமுறை தீரா இடும்பை தரும். ▶பொருள்: நாட்டுச் சிந்தனைகளில் பற்று இல்லாதவனை, அவன் பின்னணி பற்றி ஆராயாது பதவியில் அமர்த்தினால் அச்செயல் நீங்காத துன்பத்தைத் தரும்.

error: Content is protected !!