News May 8, 2025

பஹல்காம் தாக்குதல் தான் தொடக்கப்புள்ளி: விக்ரம் மிஸ்ரி

image

இந்தியா – பாக்., இடையே தற்போதைய பதற்றத்துக்கு தொடக்கப்புள்ளி பஹல்காம் தாக்குதலே என்று வெளியுறவு செயலாளர் விக்ரம் மிஸ்ரி தெரிவித்துள்ளார். இந்தியா பதற்றத்தை உருவாக்க முயலவில்லை என்றும், இந்தியாவின் பதிலடி பதற்றத்தை தூண்டாத வகையில், பயங்கரவாதிகள் மீது மட்டுமே நடத்தப்பட்டதாகவும் குறிப்பிட்டார். மேலும், பஹல்காம் தாக்குதலுக்கு டி.ஆர்.எப்., அமைப்பு 2 முறை பொறுப்பேற்றதையும் அவர் சுட்டிக் காட்டினார்.

Similar News

News December 6, 2025

உணவு விஷயத்தில் இந்த தவறு வேண்டாம்.. ஆபத்து!

image

நார்ச்சத்து, புரதம் இருக்கும் உணவுகளை சாப்பிட்டாலும் சோர்வாகவே உணர்கிறீர்களா? இதற்கு நீங்கள் சாப்பிடும் முறை காரணமாக இருக்கலாம். உணவை வேக வேகமாக மென்று விழுங்காதீங்க. இப்படி செய்தால் உணவில் உள்ள சத்துக்கள் உடலில் சேராது. அத்துடன் சுகர், இதய பிரச்னை, அஜீரணம் போன்ற பிரச்னைகளும் ஏற்படும். இதனால் எவ்வளவு நல்ல உணவை சாப்பிட்டாலும் பிரயோஜனம் இல்லை. எனவே, உணவை பொறுமையாக மென்று சாப்பிடுங்கள். SHARE.

News December 6, 2025

இன்று ரேஸில் வெல்வாரா அஜித்குமார்?

image

மலேசியாவில் இன்று நடைபெறும் Michelin 12H கார் ரேஸிங்கில் அஜித்குமார் களமிறங்கவுள்ளார். இந்த ஆண்டில் ரேஸிங்கிலேயே முழுக்கவனமும் செலுத்தி வரும் அஜித், சில போட்டிகளில் வெற்றி பெற்று இந்தியாவுக்கு பெருமை சேர்த்துள்ளார். இந்நிலையில், இன்றைய போட்டியிலும் அஜித் வெற்றி பெற வேண்டும் என நெட்டிசன்கள் வாழ்த்துகளை கூறி வருகின்றனர். இதனிடையே, ரேஸ் களத்தில் அஜித்தின் போட்டோஸ் வெளியாகி வைரலாகிறது.

News December 6, 2025

ஜீரண சக்தியை அதிகரிக்கும் மூலிகை தேநீர்!

image

உடலின் ரத்த ஓட்டத்தைத் துரிதப்படுத்தவும், ஜீரண சக்தியை அதிகரிக்கவும் சீமை சாமந்தி தேநீர் உதவும். ➤சாமந்திப்பூ இதழ்களை பிரித்து நன்கு காய வைக்கவும். ➤1 கப் தண்ணீரை கொதிக்க வைத்து, அதில் 1 தேக்கரண்டி உலர்ந்த பூக்களை போடவும். ➤8- 10 நிமிடங்கள் வரை கொதிக்க வைக்கவும். ➤அதை அடுப்பிலிருந்து இறக்கி, அதில் கொஞ்சம் தேன் கலந்து கொண்டால், சத்தான சீமை சாமந்தி தேநீர் ரெடி. SHARE THIS.

error: Content is protected !!