News April 27, 2025

பஹல்காம் தாக்குதல் விசாரணை: என்ஐஏவிடம் ஒப்படைப்பு

image

26 பேர் உயிரிழந்த பஹல்காம் தாக்குதல் தொடர்பான வழக்கை தேசிய புலனாய்வு முகமையிடம் (NIA) மத்திய உள்துறை அமைச்சகம் ஒப்படைத்துள்ளது. தாக்குதல் நடந்த பகுதியில் 60 தீவிரவாதிகள் வரை இருப்பதாகவும், அவர்களில் 14 தீவிரவாதிகளின் அடையாளங்கள் முகவரிகளுடன் கிடைத்துள்ளதாகவும் புலனாய்வு அமைப்பின் அறிக்கை கூறுகிறது. மேலும், 3 பேர் அடங்கிய என்ஐஏ குழு, புலனாய்வு அமைப்பின் தகவல்களை எடுத்துக் கொண்டது.

Similar News

News April 27, 2025

அடுத்த 3 மணி நேரத்திற்கு மழை

image

தமிழகத்தில் இரவு 10 மணி வரை மழை பெய்ய வாய்ப்பிருக்கும் மாவட்டங்களின் பட்டியலை IMD வெளியிட்டுள்ளது. அதன்படி, திருவண்ணாமலை, திருப்பத்தூர், சேலம், கள்ளக்குறிச்சி, நாமக்கல், திருச்சி, திண்டுக்கல், தேனி, விருதுநகர், தூத்துக்குடி, தென்காசி, மதுரை மற்றும் கரூர் ஆகிய மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும்.

News April 27, 2025

தங்கம் விலை மேலும் குறையுமா?

image

தங்கம் விலை கடந்த 4 நாள்களாக கிணற்றில் போட்ட கல்லைப் போல் ஏற்ற இறக்கமின்றி அசையாமல் உள்ளது. இதனால், நகை விலை குறையும் எனப் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். இது குறித்துப் பேசிய ஆனந்த் சீனிவாசன், தங்கம் விலை தற்போதைய சரிவுக்கு டிரம்ப் தான் காரணம், அவர் சீக்கிரமே மாற்றிப் பேசுவார். இதனால் தங்கம் விலை கிராமுக்கு ₹10,000-ஐ தாண்டும். எனவே தேவை என்றால் வாங்கிக் கொள்ளுங்கள் என அறிவுறுத்தியுள்ளார்.

News April 27, 2025

பஹல்காமில் மீண்டும் சுற்றுலா பயணிகள்

image

சுற்றுலா பயணிகளின் சொர்க்க பூமியாக இருந்த பஹல்காமில், பயங்கரவாத தாக்குதலால் சுற்றுலா தொழில் முடங்கியது. தற்போது பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ள நிலையில், பஹல்காமுக்கு சுற்றுலா பயணிகள் மீண்டும் வரத் தொடங்கியுள்ளனர். எனினும், சம்பவம் நடந்த பைசரன் பள்ளத்தாக்கில் மட்டும் சுற்றுலா பயணியரை பாதுகாப்பு படையினர் அனுமதிக்கவில்லை. காஷ்மீரை முடக்க நினைக்கும் பயங்கரவாதிகளுக்கு பயணியரின் வருகை சரியான பதிலடி!

error: Content is protected !!