India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
வர்த்தக பேச்சுவார்த்தைகளில் இந்தியா கொஞ்சம் பிடிவாதம் காட்டுவதாக அமெரிக்க கருவூலத்துறை அமைச்சர் ஸ்காட் பெசன்ட் விமர்சித்துள்ளார். வரும் அக்டோபர் மாதமே இரு நாடுகளுக்கும் இடையேயான வர்த்தக ஒப்பந்தம் இறுதியாகும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். முன்னதாக, ரஷ்யாவிடம் இருந்து
கச்சா எண்ணெய் வாங்குவதை நிறுத்த மறுத்ததாக கூறி, இந்திய பொருள்களுக்கு டிரம்ப் 50% வரிவிதித்திருந்தார்.
‘இறந்தும் வாழ்கிறார்’ என்ற சொல்லே நாம் வாழ்ந்ததற்கான அடையாளம். இதற்கு நமது நன்மை மிகுந்த செயல்பாடுகள் ஒரு அடையாளமாக இருந்தாலும், இறப்பின் விளிம்பில் உள்ளவர்களுக்கு கொடுக்கும் உடலுறுப்பு தானம் நமக்கு மேலும் புகழ் சேர்க்கும். உடலுறுப்பு தானம் செய்பவருக்கு அரசு மரியாதையுடன் இறுதிச்சடங்கு என்ற முன்னெடுப்பும் தமிழகத்தில் உள்ளது. உடலுறுப்பு தான தினமான இன்று, உடலுறுப்புகளை தானம் செய்ய முன்வாருங்கள்!
நடிகரும் சமையல் கலைஞருமான மாதம்பட்டி ரங்கராஜின் திருமண சர்ச்சை இன்னும் ஓயவில்லை. திருமண செய்தி வெளியான அடுத்த நாளே, தான் கர்ப்பம் என 2-வது மனைவி ஜாய் கிரிசில்டா கூறினார். ஆனால், <<17386595>>முதல் மனைவி ஷ்ருதியுடன்<<>> நேற்று நிகழ்ச்சியில் ரங்கராஜ் பங்கேற்றது பல கேள்விகளை எழுப்பியது. இதனிடையே, மெடிக்கல் செக் அப் படங்களை பதிவிட்ட கிரிசில்டா, குழந்தைக்கு ராஹா ரங்கராஜ் என பெயர் வைத்துள்ளாராம். ஒரே குழப்பம்!
பெங்களூருவின் டிராபிக்கால் மக்கள் கடும் சிரமத்தை அனுபவித்து வருகின்றனர். இதுகுறித்து 5 வயது சிறுமி ஒருவர், PM மோடிக்கு லெட்டர் எழுதி இருக்கிறார். அதில், ‘மோடி ஜி, ஓவர் டிராபிக்கால் ஸ்கூலுக்கும் ஆபிஸுக்கும் லேட்டாக போகிறோம், ரோடு மோசமாக இருக்கு. ஹெல்ப் பண்ணுங்க’ என எழுதியுள்ளார். இந்த லெட்டர் வைரலாக, PM மோடி இதற்கு என்ன செய்ய போகிறார்? என நெட்டிசன்கள் வினவி வருகின்றனர்.
RBI வழிகாட்டுதலின்படி வங்கிகள், நிதி நிறுவனங்கள் நகை கடன் வழங்குகின்றன. ₹1 லட்சம் மதிப்புள்ள தங்க நகைக்கு நிதி நிறுவனங்கள் ₹75,000 வரை (75%) கடன் வழங்கும். ஆனால், அங்கு வட்டி அதிகம் (12 – 24%). பொதுத்துறை வங்கிகள் சற்று குறைவாக ₹60,000 – ₹70,000 வரை கடன் வழங்கும். ஆறுதல் என்னவென்றால் அங்கு வட்டி விகிதம் குறைவாக (7.25 – 9%) இருக்கும். தேவையை பொறுத்து தேர்வு செய்யுங்கள் நண்பர்களே! SHARE IT.
இன்ஸ்டா, யூடியூப்பில் அதிகமாக ரீல்ஸ் பார்ப்பது மது அருந்துவதை விட 5 மடங்கு ஆபத்தானது என நரம்பியல் ஆராய்ச்சியாளர்கள் எச்சரிக்கின்றனர். தொடர்ந்து ரீல்ஸ் பார்ப்பது நினைவாற்றல், கவனம் ஆகியவற்றை கடுமையாக பாதிக்கிறதாம். டோபமைன் அதிகமாக சுரப்பதால், மூளை எப்போதும் விரைவான தூண்டுதலை மட்டுமே விரும்பும் விதமாக பழகிவிடுகிறது. இதனால், எந்த விஷயத்திலும் நீண்ட நேரம் கவனம் செலுத்த முடியாமல் போய்விடுகிறது.
‘என்னை அழைத்துச் செல். வீட்டில் சொல்பவரை நான் திருமணம் செய்ய மறுத்துவிட்டால், என் குடும்பத்தினர் என்னை கொன்று விடுவார்கள்.’ குஜராத்தில் ஆணவக் கொலை செய்யப்பட்ட பெண், தனது காதலனுக்கு கடைசியாக அனுப்பிய மெசேஜ் இது. காதலன் கொடுத்த புகாரின்பேரில், பெண்ணின் உறவினர் கைது செய்யப்பட்டுள்ளார். மேலும், தலைமறைவான பெண்ணின் தந்தையை போலீஸ் தேடி வருகிறது. ஜூனில் நடந்த சம்பவம் தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
தான் சிக்கமகளூர் சேர்மனாக இருந்தபோது 2,500 தெருநாய்களைக் கொன்று, அதனை மரங்களுக்கு அடியில் புதைத்து இயற்கை உரமாக்கியதாக கர்நாடக MLC போஜேகவுடா சட்டசபையில் கூறியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. மேலும், யாராவது தெருநாய்கள் அகற்றப்படுவதை எதிர்த்தால் அவர்களது வீடுகளுக்குள் 10 தெருநாய்களை விட்டு விடுவேன் என்றும் அவர் ஆக்ரோஷமாக பேசியுள்ளார். இதற்கு கடும் எதிர்ப்புகள் எழுந்துள்ளன.
‘என் முதல் ஆசிரியர்களில் நீங்களும் ஒருவர்’ என ரஜினிகாந்தைக் குறிப்பிட்டு, அவரது 50 ஆண்டுகால திரைப் பயணத்துக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார் ஹிருத்திக் ரோஷன். ‘கூலி’ படத்துடன் ஹிருத்திக், ஜூனியர் NTR நடித்துள்ள ‘WAR 2′ படமும் ரிலீஸாகிறது. இந்நிலையில், ஒரு நடிகராக எனது முதல் படியை உங்கள் (ரஜினி) அருகில் இருந்து தொடங்கியதாகக் கூறி அவர் நெகிழ்ந்துள்ளார். நீங்க படம் பார்க்க ரெடியா?
பிஹாரில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிக்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. இந்நிலையில், முசாஃபர்பூரில் உள்ள ஒரு வீட்டில் 269 வாக்காளர்கள் இருப்பதாக ECI தரவு வெளியிட்டது. இது அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், ஒரேயொரு வாக்கு மட்டுமே உள்ளதாக அந்த வீட்டின் உரிமையாளர் கூறியுள்ளார். இது BJP – ECI வாக்கு முறைகேட்டிற்கான சான்று என காங்., குற்றஞ்சாட்டியுள்ளது.
Sorry, no posts matched your criteria.