News October 25, 2025

BREAKING: புயல் கரையை கடக்கும் இடம் அறிவிப்பு

image

ஆந்திராவின் காக்கிநாடா அருகே மச்சிலிப்பட்டினம் – கலிங்கப்பட்டினத்துக்கு இடையே அக்.28 மாலை அல்லது இரவில் Montha புயல் கரையை கடக்கும் என IMD அறிவித்துள்ளது. இன்று இரவு முதலே கடலில் காற்றின் வேகம் அதிகரிக்கும் என்றும், புயல் கரையை கடக்கும்போது அதிகபட்சம் 110 கி.மீ. வேகத்தில் காற்று வீசக்கூடும் எனவும் தெரிவித்துள்ளது. ஆந்திராவில் புயல் கரையை கடந்தாலும் தமிழகத்தில் மழை பெய்யும் எனவும் கணித்துள்ளது.

News October 25, 2025

இந்தியாவின் மிக பணக்கார ஸ்கூல்கள் இவைதான்!

image

கல்வியும், மருத்துவமும் நாட்டில் இலவசம் என்றாலும், குழந்தைகளின் கல்வித்தரத்தை மேம்படுத்த பெற்றோர்கள் பெரும் பணத்தை செலவு செய்கின்றனர். அந்த வகையில், 2025 – 26 ஆண்டு கல்வி கட்டணத்தின் அடிப்படையில் நாட்டில் அதிக கட்டணம் வசூலிக்கும் ஸ்கூல்களின் பட்டியலை மேலே கொடுத்துள்ளோம். அவை என்னென்ன என அறிய போட்டோவை வலது பக்கமாக Swipe பண்ணி பாருங்க.

News October 25, 2025

₹1,000 மகளிர் உரிமைத்தொகை.. வந்தது புதிய அறிவிப்பு

image

வேலூர், நாமக்கல், நீலகிரி, புதுக்கோட்டை, பெரம்பலூர், ராணிப்பேட்டை, ராமநாதபுரம், சிவகங்கை, திருப்பத்தூர், தேனியில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாம் நிறைவடைந்துவிட்டது. அதேநேரம் இம்மாவட்டங்களில் நவ.14-க்குள் கலெக்டர் ஆபிஸில் மக்கள் குறை தீர்க்கும் நாளில் மகளிர் உரிமைத்தொகைக்கு விண்ணப்பிக்கலாம். இதனிடையே, வரும் 28-ம் தேதி ‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாம்கள் நடைபெறும் இடங்களின் விவரங்களை அறிய <>இங்கே கிளிக்<<>> பண்ணுங்க. SHARE IT.

News October 25, 2025

TN-ல் மழைக்கு 31 பேர் பலியாகியுள்ளனர்: KKSSR

image

தமிழகத்தில் அக்.1 முதல் 25-ம் தேதி வரை பெய்த மழைக்கு, 31 பேர் உயிரிழந்துள்ளதாக அமைச்சர் KKSSR தெரிவித்துள்ளார். உயர் அதிகாரிகளுடன், மழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து அமைச்சர் ஆலோசனை நடத்தினார். தொடர்ந்து, ‘மோன்தா’ புயலை எதிர்கொள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டார். முகாம்கள் தயாராக உள்ளதாகவும், ஏரிகளின் நீர்மட்டத்தை கண்காணித்து வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

News October 25, 2025

விஜய்யிடம் என்ன கேள்வி கேட்பீர்கள்?

image

2024-ல் தவெக உதயம், புத்தக விழா ஒன்றில் திருமாவுக்கு தூதுவிட்ட விஜய், 2025-ல் கட்சியின் ஓராண்டு நிறைவு, வீட்டிற்கு வரவைத்து வெள்ள நிவாரணம், 3 சனிக்கிழமைகள் பரப்புரை, 2 முறை கல்வி விருதுகள் என விஜய்யின் அரசியல் நுழைவை சுருக்கிவிடலாம். இந்த ஒன்றரை வருடத்தில் ஒருமுறை கூட செய்தியாளர்களை விஜய் சந்திக்கவில்லை (பின்னால் வர வேண்டாம் என கூறியது தவிர). இனி விஜய் ஊடகங்களை சந்தித்தால் என்ன கேள்வி கேட்கலாம்?

News October 25, 2025

டிகிரி போதும்.. வங்கியில் பயிற்சியுடன் வேலைவாய்ப்பு

image

UCO வங்கியில் 532 Apprentice பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஏதேனும் ஒரு டிகிரி முடித்திருந்தால் போதும். 20 – 28 வயதுடையவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம். ஊக்கத்தொகையாக ₹15,000 வழங்கப்படும். இதற்கு எழுத்துத் தேர்வு மூலம் ஆட்கள் தேர்வு செய்யப்படுவர். விருப்பமுள்ளவர்கள் இங்கே <>கிளிக்<<>> செய்து அக்.30-க்குள் விண்ணப்பிக்கலாம். ஷேர் பண்ணுங்க

News October 25, 2025

சமையல் எண்ணெயை ரீயூஸ் பண்றீங்களா?

image

சமையல் எண்ணெயை ரீயூஸ் செய்வது ஆரோக்கியம் மற்றும் சுற்றுச்சூழல் பாதிப்பை ஏற்படுத்தும் என மனித உரிமைகள் ஆணையம் கூறியுள்ளது. மனிதர்களுக்கு இதய நோய், கல்லீரல் பாதிப்பு, புற்றுநோய் ஏற்படும் அபாயம் உள்ளதாகவும், சுத்திகரிக்கப்படாத எண்ணெயை கொட்டுவதால் நிலம் மற்றும் நிலத்தடி நீர் பாதிக்கப்படுவதாகவும் கூறியுள்ளது. இதற்கு தகுந்த நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்று FSSAI-க்கு வலியுறுத்தப்பட்டுள்ளது.

News October 25, 2025

அதிமுகவுடன் கூட்டணி.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு

image

அதிமுக உடனான கூட்டணியை அதிகாரப்பூர்வமாக தமாகா தலைவர் ஜி.கே.வாசன் உறுதி செய்துள்ளார். சென்னையில் ஜி.கே.வாசன் தலைமையில் நடந்த தமாகா பொதுக்குழுவில், அதிமுக தலைமையில் 2026 தேர்தலை சந்திப்போம் உள்ளிட்ட 18 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. மேலும், திமுகவுக்கு எதிரான கொள்கை உடைய அனைத்து கட்சிகளும் ஓரணியில் திரள வேண்டும் எனவும் அவர் அழைப்பு விடுத்துள்ளார்.

News October 25, 2025

₹1 கோடி சம்பளம் வாங்கிய முதல் நடிகை யார் தெரியுமா?

image

சினிமாவில் முதலில் ₹1 கோடி சம்பளம் வாங்கிய ஹீரோ சிரஞ்சீவி. ஆனால் நடிகை யாரென்று தெரியுமா? இந்தியாவில் ஹீரோக்களுக்கு போட்டியாக முதல் முதலாக ₹1 கோடிக்கு மேல் சம்பளம் வாங்கியவர் ஸ்ரீதேவி. 1993-ம் ஆண்டு வெளியான ‘ரூப் கி ராணி சொரோம் கா ராஜா’ படத்திற்காக இவர் ₹1 கோடி சம்பளம் பெற்றார். இந்த படத்தை தயாரித்தவர் அவரது கணவரான போனி கபூர் தான். இந்த படத்தில் அனில் கபூர் ஹீரோவாக நடித்தார்.

News October 25, 2025

நிதிஷ் குமாரை பாஜக கடத்தி சென்றுவிட்டது; தேஜஸ்வி

image

NDA கூட்டணி மீண்டும் ஆட்சிக்கு வந்தாலும் நிதிஷ் குமாரை முதல்வராக்க மாட்டார்கள் என்று தேஜஸ்வி யாதவ் தெரிவித்துள்ளார். NDA கூட்டணி தற்போது நிதிஷ் கட்டுப்பாட்டில் இல்லை; அவர் பிஹாருக்கு வெளியில் இருந்து செயல்படும் மோடி, அமித்ஷாவால் கடத்தப்பட்டுள்ளார். வரவிருக்கும் சட்டப்பேரவைத் தேர்தலில் வெளியாட்களுக்கு வாக்களிக்காமல், ஒரு பிஹாரிக்கு வாக்களிக்க வேண்டும் என்று மக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

error: Content is protected !!