India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

தமிழ்நாட்டில் வாழும் ஓபிசி மக்களின் கோரிக்கையை ஏற்காவிட்டால், எந்த கட்சிக்கும் ஓட்டு போட மாட்டோம்; நோட்டாவுக்கு வாக்களிப்போம் என்று ஓபிசி உரிமைக்கான கூட்டமைப்பு அறிவித்துள்ளது. ஓபிசி பிரிவினருக்கு வழங்கப்பட்டு வரும் இடஒதுக்கீட்டை 18%லிருந்து 27%ஆக உயர்த்த வேண்டும். கல்வி உதவித்தொகை பெறுவதற்கான வருமான உச்ச வரம்பை ரூ.8 லட்சமாக உயர்த்த வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தியுள்ளது.

பிரதமர் மோடியை எதிர்த்து, வாரணாசி தொகுதியில் மூன்றாவது முறையாக களம் காண உள்ளார் அஜய் ராய். பாஜகவில் தனது அரசியல் பயணத்தை தொடங்கிய அஜய் ராய், 1996 – 2007 வரை கோலஸ்லா சட்டமன்றத் தொகுதியில் எல்.எல்.ஏ-வாக பணியாற்றியுள்ளார். தனக்கு சீட் மறுக்கப்பட்டதால், 2009இல் சமாஜ்வாதி கட்சிக்கு தாவினார். அதன் பிறகு 2012 ஆம் ஆண்டில் காங்கிரஸ் கட்சியில் தன்னை இணைத்துக் கொண்டார்

ஐபிஎல்-2024 தொடரின் ஒரு பகுதியாக இன்று இரண்டு போட்டிகள் நடைபெறுகின்றன. முதல் போட்டி ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகளுக்கு இடையே ஜெய்ப்பூரில் பிற்பகல் 3.30 மணிக்கு தொடங்குகிறது. 2ஆவது போட்டி மும்பை இந்தியன்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகளுக்கு இடையே அகமதாபாத்தில் இரவு 7.30 மணிக்கு தொடங்குகிறது. இப்போட்டிகளை ஜியோ சினிமா ஆப் மற்றும் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனலில் பார்க்கலாம்.

போதைப் பொருள் கடத்தல் விவகாரத்தில் சர்ச்சைக்குள்ளான இயக்குநர் அமீர் பெரும் நெருக்கடிக்கு ஆளானது அனைவரும் அறிந்ததே. இந்த காரணமாக அவர் நடித்த மாயவலை திரைப்படம் வெளிவர முடியாத நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளதாம். உதவிக் கேட்ட இடங்களில் எல்லாம் பலரும் வம்பு எதற்கு என விலகிக் கொண்டார்களாம். இந்த சூழலில் இயக்குநர் வெற்றிமாறன் தான் அவருக்கு ஆறுதல் சொல்லி, ஆதரவாக நிற்கிறாராம்.

மக்களவைத் தேர்தலில் தமிழக காங்கிரஸ் சார்பில் போட்டியிட உள்ள 7 பேர் கொண்ட முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை அக்கட்சியின் தேசியத் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே வெளியிட்டுள்ளார். 1. திருவள்ளூர் (தனி) – சசிகாந்த் செந்தில் 2.குமரி – விஜய் வசந்த் 3.விருதுநகர் – மாணிக்கம் தாகூர் 4.சிவகங்கை – கார்த்தி சிதம்பரம் 5.கரூர் – ஜோதிமணி 6.கிருஷ்ணகிரி – கோபிநாத் 7.கடலூர் – விஷ்ணு பிரசாத் உள்ளிட்டோர் போட்டியிட உள்ளனர்.

✍கற்பி, ஒன்று சேர், கிளர்ச்சி செய்.✍நீ என்னை உன் அடிமை என்று நினைக்கும்போது, உன்னை அழிக்கும் ஆயுதமாக நான் மாறிவிடுவது என் கடமை.✍சமூகத்தின் விடுதலைக்காக போராடவில்லை எனில் அந்த சமூகத்தின் முதல் சாபக்கேடு நீ தான்.✍தலைவிதி என்ற எண்ணமே ஒடுக்கப்பட்டவர்களின் விடுதலை உணர்வுகளை மரத்துப்போக செய்கின்றது.✍கடவுளுக்கு கொடுக்கும் காணிக்கையை விட ஏழைகளுக்கு கொடுக்கும் கல்வி மேலானது.
– அண்ணல் அம்பேத்கர்

மகாராஷ்டிராவில் சிவசேனா உடைந்த பிறகு உத்தவ் தாக்கரே எதிர்கொள்ளும் முதல் தேர்தல் இது. பால் தாக்கரேயின் வில் அம்பு சின்னத்தையே எதிரணியிடம் இழந்து நிற்கும் அவருக்கு வாழ்வா சாவா என்ற நிலையை தேர்தல் ஏற்படுத்தி இருக்கிறது. ED போன்ற விசாரணை அமைப்புகளின் சோதனை உள்ளிட்ட சவாலை எதிர்கொண்டுள்ள அவர், பாஜகவை தேர்தலில் எப்படியாவது வீழ்த்திட வேண்டுமென பழிதீர்க்கும் தீவிர முனைப்பில் இருப்பதாகக் கூறப்படுகிறது.

நடப்பு ஐ.பி.எல் (17ஆவது சீசன்) தொடரின் இறுதிப் போட்டி சென்னையில் நடைபெற வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 21 போட்டிகளுக்கான அட்டவணை வெளியிடப்பட்ட நிலையில், மீதமுள்ள போட்டிகளுக்கான அட்டவணை தயாராகிவிட்டதாம். அதன்படி, மே 26ஆம் தேதி சென்னையில் பைனல் போட்டி நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளதாம். குவாலிபையர், எலிமினேட்டர் போட்டிகள் குஜராத்தில் நடைபெறும் என அறியமுடிகிறது.

இயக்குநர் ராமின் இயக்கத்தில் சாக்லேட் பாய் நிவின் பாலி மாறுபட்ட கதாபாத்திரத்தில் நடித்துள்ள படம் ‘ஏழு கடல் ஏழு மலை’. காதலை மையப்படுத்தி எடுக்கப்பட்டிருக்கும் இந்த படத்தில் சூரி, அஞ்சலி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ரோட்டர்டாம் போன்ற பல சர்வதேச திரைப்பட விழாக்களில் திரையிடப்பட்டு, நல்ல வரவேற்பைப் பெற்றுள்ள இப்படம், நிவினுக்கு கம்பேக் கொடுக்கும் என்று ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்க்கிறார்கள்.

▶மார்ச் – 24 | பங்குனி – 11
▶கிழமை: ஞாயிறு | திதி: பௌர்ணமி
▶நல்ல நேரம்: காலை 07:30 – 08:30 வரை, மாலை 03:00 – 04:00 வரை
▶கெளரி நேரம்: காலை 10:30 – 11:30 வரை, மாலை 01:30 – 02:30 வரை
▶ராகு காலம்: மாலை 04:30 – 06:00 வரை
▶எமகண்டம்: நண்பகல் 12:00 – 01:30 வரை
▶குளிகை: மதியம் 03:00 – 04:30 வரை
▶சூலம்: மேற்கு ▶பரிகாரம்: வெல்லம்
Sorry, no posts matched your criteria.