India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

தென்னிந்தியர்கள் ஆப்பிரிக்கர்கள் போல இருந்தாலும், நாம் அனைவரும் சகோதர சகோதரிகள் என காங்., வெளிநாடுவாழ் இந்தியர் பிரிவு தலைவர் பிட்ரோடா கூறியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதை சுட்டிக்காட்டியுள்ள பிரதமர் மோடி, தமிழர்களின் பெருமையைக் காக்க காங்., உடனான கூட்டணியை முறித்துக்கொள்ள முதல்வர் ஸ்டாலின் தயாரா எனக் கேள்வி எழுப்பியுள்ளார். மேலும், ஸ்டாலினுக்கு துணிச்சல் உள்ளதா என்றும் சவால் விடுத்துள்ளார்.

இன்று (மே 9) பிறந்தநாள் காணும் அனைவருக்கும் வாழ்த்துகள். பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்ல விரும்புபவர்களின் போட்டோவை Email -way2tamilusers@way2news.com-க்கு அனுப்புங்க. Note: பிறந்தநாளுக்கு முந்தைய நாள் இரவு 11 மணிக்குள் வாழ்த்துகளை அனுப்பவும். முதலில் அனுப்பும் 20 நபர்களின் புகைப்படங்கள் மட்டும் இதில் இடம்பெறும். உங்கள் அன்புக்குரியவர்களை வாழ்த்துங்கள். பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க.

* உலகம் முழுவதும் கொரோனா தடுப்பூசியைத் திரும்பப் பெறுவதாக இங்கிலாந்தின் அஸ்ட்ராஜெனகா நிறுவனம் அறிவித்துள்ளது
* தமிழக பதிவுத்துறையில் பல்வேறு சேவைகளுக்கான கட்டணங்கள் உயர்வு.
* முன்னாள் பாஜக எம்எல்ஏ வேலாயுதன் காலமானார்
* தமிழ் புதல்வன் திட்டம் வரும் கல்வியாண்டிலேயே தொடங்கப்படும் என அறிவிப்பு.
* லக்னோ அணிக்கு எதிரான ஐபிஎல் போட்டியில் SRH அணி 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.

AI வசதியுடன் கூடிய கூகுளின் பிக்சல் 8a மாடல் ஃபோன் இந்தியாவில் அறிமுகமானது. 6.1 இன்ச் ஸ்கிரீன் மற்றும் OLED டிஸ்பிளே உடன் வரும் இந்த ஃபோன், 4492 mAh பேட்டரியை கொண்டது. 64 மெகாபிக்சல் மெயின் லென்ஸும், 13 மெகாபிக்சல் அல்ட்ரா வைடு லென்ஸும்,13 மெகாபிக்சல் செல்பி கேமராவும் இதில் உள்ளது. 2 வேரியணட்களாக விற்பனைக்கு வந்துள்ளது. 128ஜிபி வெர்ஷன் ₹.52,999க்கும், 256ஜிபி வெர்ஷன் ₹.59,999 விற்கப்படுகிறது.

டெஸ்ட் போட்டியில் 400 ரன்கள் நான் செய்த வாழ்நாள் சாதனையை யஷஸ்வி ஜெய்ஸ்வால் விரைவில் முறியடிப்பார் என்று SRH அணியின் பயிற்சியாளர் பிரையன் லாரா நம்பிக்கை தெரிவித்துள்ளார். நேர்காணல் ஒன்றில் பேசிய அவர், “தனித்தன்மையுடன் இருக்கும் ஜெய்ஸ்வால் ஒரு அற்புதமான வீரர். சீனியர்களிடம் மிகவும் பணிவாக நடந்துகொள்ளும் அவர், புதிய நுணுக்கங்களைக் கற்பதில் ஆர்வமாக இருக்கிறார் ” எனக் கூறியுள்ளார்.

விமானப் போக்குவரத்துத் துறையில் டாடா குழுமம் தொடர்ந்து பின்னடைவைச் சந்தித்து வருகிறது. அதன் விஸ்தாரா ஏர்லைன்ஸுடன் ஏர் இந்தியாவின் துணை நிறுவனமான ஏர் இந்தியா எக்ஸ்பிரஸை இணைக்கும் செயல்முறை தொடங்கியதிலிருந்து, ஊழியர்கள் மத்தியில் அதிருப்தி நிலவுகிறது. பணி தொடர்பான ஒப்பந்த விதிமுறைகளுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் ஊழியர்களுடன் சமரசம் ஏற்படும் வரை நெருக்கடி நிலை தொடரலாம் என நிபுணர்கள் கூறுகின்றனர்.

கடந்த 72 ஆண்டுகளில் இமாச்சலில் இருந்து 3 பெண்கள் மட்டுமே மக்களவைக்கு தேர்வாகியுள்ளார்கள். வெற்றி பெற்ற அந்த மூவரும் அரச குடும்பத்தை சேர்ந்தவர்கள். மாநிலத்தில் உள்ள 4 தொகுதிகளுக்கும் வரும் ஜூன் 1இல் தேர்தல் நடைபெற உள்ளது. பாஜக மற்றும் பிஎஸ்பி கட்சிகள் மட்டுமே பெண் வேட்பாளர்களை நிறுத்தியுள்ளது. பாஜக சார்பாக மண்டி தொகுதியில் கங்கனாவும், காங்க்ரா தொகுதியில் ரேகா ராணியும் போட்டியிடுகிறார்கள்.

2024 ஐபிஎல் சீசனில், முதல் 6 ஓவர்களில் (பவர் பிளே) 2 முறை 100 ரன்களை கடந்த அணி என்ற பெருமையை, ஹைதராபாத் அணி தட்டிச் சென்றது. நடப்பு சீசனில் அதிரடியாக விளையாடி வரும் SRH அணி பல்வேறு சாதனைகளை படைத்து வருகிறது. அந்த வகையில், லக்னோ அணிக்கு எதிரான இன்றைய ஆட்டத்தில், 6 ஓவர்களில் 100 ரன்களை கடந்தது. இதேபோல, ஏப்ரல் 20ஆம் தேதி நடைபெற்ற டெல்லிக்கு எதிரான போட்டியிலும் முதல் 6 ஓவர்களில் 100 ரன்களை கடந்தது.

*மேஷம் – முயற்சிக்கு ஏற்ற பலன்
*ரிஷபம் – ஆக்கப்பூர்வமான நாள்
*மிதுனம் – வெற்றி கிடைக்கும்
*கடகம் – சிறு பிரச்னைகள் உண்டாகும்
*சிம்மம் – உற்சாகம் காணப்படும்
*கன்னி – கவனம் தேவை
*துலாம் – மகிழ்ச்சியான நாள்
*விருச்சிகம் – செய்யும் செயலில் வெற்றி
*தனுசு – பொறுமை காக்க வேண்டும்
*மகரம் – அனுகூலமான நாள் *கும்பம் – வளர்ச்சி ஏற்படும் *மீனம் – நம்பிக்கையான நாள்

இந்தியாவில் தயாரிக்கப்பட்ட ‘செமிகண்டக்டர் சிப்’ மாதிரிகளை ஆய்வுக்காக வெளிநாடுகளுக்கு டாடா எலக்ட்ரானிக்ஸ் நிறுவனம் ஏற்றுமதி செய்துள்ளது. பெங்களூருவில் இயங்கிவரும் டாடா ஆய்வு மையத்தில் தயாரிக்கப்பட்ட இண்டர்கரேடட் & சர்க்யூட் போர்டுகளை ஜப்பான், அமெரிக்கா மற்றும் ஐரோப்பா போன்ற நாடுகளுக்கு அனுப்பியுள்ளது. இந்த சிப்களின் வணிக ரீதியான தயாரிப்பை, 2027ஆம் ஆண்டு முதல் தொடங்க டாடா திட்டமிட்டுள்ளது.
Sorry, no posts matched your criteria.