India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
கடந்த மக்களவை தேர்தலில் பாஜக 400 இடங்களில் வென்றிருந்தால் இடஒதுக்கீடு ரத்து செய்யப்பட்டு அரசியலமைப்பும் மாற்றி அமைக்கப்பட்டிருக்கும் என்று தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி தெரிவித்துள்ளார். 400 இடங்களை வெல்ல வேண்டும் என்ற பாஜகவின் திட்டத்தை எதிர்க்கட்சிகள் முறியடித்துவிட்டன. இல்லையென்றால், தற்போது சாதிவாரி கணக்கெடுப்புக்கு ஒப்புக்கொண்டிருக்க மாட்டார்கள் எனத் விமர்சித்துள்ளார்.
விரைவில் சட்டப்பேரவை தேர்தல் வரவுள்ள நிலையில், வாக்காளர்கள் வசதிக்காக 3 முக்கிய மாற்றங்களை செய்ய தலைமை தேர்தல் ஆணையம் முடிவெடுத்துள்ளது. வாக்காளர் பட்டியலில் இருந்து இறந்தவர்கள் பெயர்களை உடனடியாக நீக்கவும், பூத் சிலிப்களில் தொகுதி, வாக்கு செலுத்தும் இடம் உள்ளிட்டவைகளை பெரிய அளவில் அச்சிடவும், BLO எனப்படும் பூத் அளவிலான அதிகாரிகளின் அடையாள அட்டைகளை மாற்றியமைக்கவும் திட்டமிட்டுள்ளது.
அமெரிக்காவில் ஓடும் ரயிலில் ஆண் பிணத்துடன் பாலியல் உறவில் ஈடுபட்ட நபர், கோர்ட்டில் சரண் அடைந்தார். நியூயார்க் ரயிலில் சடலத்துடன் உறவில் ஈடுபட்ட மர்ம நபரை போலீஸ் தேடி வந்தது. இந்நிலையில், அவரே முன்வந்து மன்ஹாட்டன் கோர்ட்டில் சரணடைந்தார். விசாரணையில் அவர் பெயர் பெலிக்ஸ் ரோஜாஸ் (44) என்பதும், பிணத்திடம் இருந்து திருடியதும் தெரிந்தது. அவர் மீது ரேப் குற்றச்சாட்டு பதியப்பட்டுள்ளது.
கை விரலில் எலும்பு முறிவு ஏற்பட்டிருப்பதால் PBKS வீரர் க்ளென் மேக்ஸ்வெல் ஐபிஎல் தொடரில் இருந்து வெளியேறினார். இந்நிலையில், அவருக்கு பதில் சூர்யன்ஷ் ஷெட்ஜ் களமிறங்குவார் என்று PBKS அணி அறிவித்துள்ளது. CSK-க்கு எதிரான போட்டியில் வெற்றி பெற்றதன் மூலம் புள்ளிப்பட்டியலில் 2வது இடத்தில் இருக்கும் PBKS-க்கு சூர்யன்ஷ் ஷெட்ஜ் மேலும் வலுசேர்ப்பாரா என்று பொறுத்திருந்து பார்ப்போம்.
ஏப்ரல் மாத GST வசூல் 12.6% அதிகரித்துள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. கடந்த மாதம் ₹2.37 லட்சம் ஜிஎஸ்டி வசூலாகியுள்ளது. GST அமலான பிறகு வசூலான அதிகபட்ச தொகை இதுதான். உள்நாட்டு பரிவர்த்தனைகள் மூலம் ஜிஎஸ்டி வருவாய் 10.7% அதிகரித்து சுமார் ₹1.9 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது, அதே நேரத்தில் இறக்குமதி செய்யப்பட்ட பொருட்களிலிருந்து வருவாய் 20.8 % அதிகரித்து ₹46,913 கோடியாக உள்ளது.
விஷால் முன்பே நடிகர்கள் குறித்து இயக்குநர் ஆர்.கே.செல்வமணி காட்டமாக பேசியதால், தமிழ் சினிமா துறையில் பேசுபொருளாக மாறியுள்ளது. சூட்டிங்கிற்கு வந்தோம், மேக்கப் போட்டோம், சென்றோம் என நடிகர்கள் இருக்கக்கூடாது. திரைப்பட தொழிலாளர்களுக்கு படத்தின் பட்ஜெட்டில் 5% மட்டுமே சம்பளம் தரப்படுகிறது. படத்தில் நடிக்கும் நடிகர்களுக்கும் பொறுப்பு இருக்கிறது. அதனை உணர்ந்து செயல்பட வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.
மிசோரம் மாநிலத்தின் காங்கிரஸ் ராஜ்யசபா முன்னாள் MP ரொனால்ட் சபா த்லாவ் (71) காலமானார். இவருக்கு அண்மையில்தான், டெல்லி AIIMS-ல் இதய அறுவை சிகிச்சை நடந்தது. 2014-ல் இவர், ராஜ்யசபா MP ஆக இருந்தார். 2003 முதல் பொதுச் செயலாளர், தலைமை செய்தித் தொடர்பாளர், மருத்துவப் பிரிவுத் தலைவர் போன்ற பதவிகளை வகித்த ரொனால்ட், இறக்கும் வரை மிசோரம் காங்கிரஸ் கமிட்டியின் (MPCC) துணைத் தலைவராக இருந்தார்.
சூர்யாவின் ‘ரெட்ரோ’ படம் வெளியான இன்று சசிகுமாரின் ‘டூரிஸ்ட் பேமிலி’ படமும் திரைக்கு வந்துள்ளது. இந்நிலையில் டூரிஸ்ட் பேமிலி இயக்குநர் அபிஷன், ரெட்ரோவை பாராட்டியுள்ளார். ஒரு அருமையான படத்தை கார்த்திக் சுப்புராஜ் கொடுத்துள்ளதாகவும், சூர்யாவின் மேஜிக் ஒவ்வொரு காட்சியிலும் திரையை மொத்தமாக வசப்படுத்தியுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். படம் பெரிய வெற்றியடைய வாழ்த்துகள் எனவும் கூறியுள்ளார்.
உழைப்பாளர் தினத்தையொட்டி எம்ஜிஆர் பாடலை பதிவிட்டு இபிஎஸ் வாழ்த்து கூறியுள்ளார். அதில், வாழ்க்கை என்றொரு பயணத்திலே பலர் வருவார் போவார், பூமியிலே வானத்து நிலவாய் சிலரிருப்பார், அந்த வரிசையில் முதல்வன் தொழிலாளி. உழைப்பே உயர்வு தரும்; மனநிறைவு தரும்; ஒளிமயமான எதிர்காலத்திற்கு வழிவகுக்கும் என குறிப்பிட்டுள்ளார். வியர்வை சிந்தும் கரங்கள் உயரட்டும்! உழைப்போம்! உயர்வோம்! எனவும் பதிவிட்டுள்ளார்.
கரும்புக்கான கொள்முதல் விலையை குவிண்டாலுக்கு ₹355-ஆக ( டன்னுக்கு ₹3,550) <<16266764>>மத்திய அரசு <<>>நேற்று உயர்த்தியது. இந்நிலையில், கரும்புக்கான கொள்முதல் விலையை மத்திய அரசு குறைவாக நிர்ணயித்ததால், அதனால் ஏற்படும் பாதிப்புகளை சமாளிக்கும் வகையில் உழவர்களுக்கு தமிழக அரசு ஊக்கத்தொகை வழங்க வேண்டும் என்றும், உடனே ஒரு டன் கரும்புக்கு ₹5000 வழங்குவதை உறுதி செய்ய வேண்டும் எனவும் ராமதாஸ் கோரிக்கை விடுத்துள்ளார்.
Sorry, no posts matched your criteria.