India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

அறுவடைக்குத் தயாரான நெற்பயிர்களில், 33% மேல் பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் MRK பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். மேலும் பயிர் சேதம் குறித்து கணக்கீடு செய்தபின், பாதிப்பு சதவிகிதத்திற்கு ஏற்ப நிவாரணம் வழங்கப்படும் எனவும் கூறியுள்ளார். திமுக அரசு மீது குறை சொல்ல வேண்டும் என்ற நோக்கத்தில் EPS பொய்யான குற்றச்சாட்டுகளை வைப்பதாகவும் அவர் விமர்சித்துள்ளார்.

சேவல் சண்டைக்கு அனுமதி கேட்டு மதுரையை சேர்ந்த ஒருவர் வழக்குத் தொடர்ந்திருந்தார். இந்த வழக்கை விசாரித்த மதுரை HC, மனிதர்களால் ஏற்பாடு செய்யப்படும் விலங்கு சண்டை நிகழ்வுகளை சட்டம் வெளிப்படையாகத் தடை செய்வதாக கூறினார். அதேசமயம், ஜல்லிக்கட்டு போன்று சேவல் சண்டை நடத்துவதற்கு அரசு சட்டத் திருத்தம் கொண்டுவந்தால், அதற்கும் அனுமதி அளிக்கலாம் எனக் கூறிய நீதிபதி G.R.விஸ்வநாதன் மனுவை தள்ளுபடி செய்தார்.

இரு பிரிவுகளாக உள்ள பாமக இணைவதற்கான எந்த சாத்திய கூறுகளும் கண்ணுக்கு எட்டிய தூரம் தெரியவில்லை. நாளுக்கு நாள் விரிசல் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. இதனிடையே பாமகவில் அன்புமணி தரப்பு என்று ஒன்று இல்லை என்றும், அது ஒரு கும்பல் மட்டுமே எனவும் ராமதாஸ் விளக்கம் அளித்துள்ளார். மேலும் சின்னம் எங்களுக்குதான் என சொல்பவர்களின் முகம் விரையில் தொங்கிவிடும் என்றும் கூறியுள்ளார்.

* வாரத்திற்கு 2 முறை பாகற்காய் ஜூஸ் குடித்தால், உங்கள் ரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவு குறையும்.*நெல்லிக்காய் ஜூஸில் வைட்டமின்கள், மினரல்ஸ் மற்றும் அதிக ஆன்டி ஆக்ஸிடன்ட்டுகள் உள்ளது. மேலும், இதனை வெறும் வயிற்றில் எடுத்து கொண்டால் ரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவு குறையும். * மாதுளை, கேரட், தக்காளி தர்பூசணி, சாத்துக்குடி போன்ற ஜூஸ்களை தாராளமாக குடிக்கலாம்.

விவகாரத்து, உடல் நலப் பிரச்னை என தடைகளை தாண்டி மீண்டும் நடிப்பு, தயாரிப்பு என சமந்தா பிஸியாக உள்ளார். இந்நிலையில் சமீபத்திய பேட்டியில், தனக்கு மயோசிடிஸ் நோய் வந்தபோதும், விவாகரத்தின் போதும் பலரும் அதை கொண்டாடி மகிழ்ந்ததாக கூறியுள்ளார். அதை பார்த்து மனம் வலித்ததாகவும், பின்னர் படிப்படியாக அதில் இருந்து வெளியே வந்ததாகவும் சமந்தா வேதனையுடன் தெரிவித்துள்ளார்.

விராட் கோலி விரைவில் ஃபார்முக்கு திரும்ப வேண்டும் என்று முன்னாள் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி கூறியுள்ளார். விராட், ரோஹித் அணியில் தங்களுக்கான இடம் உறுதி என மெத்தனமாக இருக்க முடியாது என்றும் தெரிவித்துள்ளார். மேலும் விராட் விரைவில் பழைய நிலைக்கு வரவில்லை என்றால், 2027 உலகக்கோப்பையில் அவர் இடம்பிடிப்பது கடினமாகி விடும் எனவும் எச்சரித்துள்ளார்.

*1881 – ஸ்பானிஷ் ஓவியர் பிக்காசோ பிறந்த நாள்.
*1854 – இந்தியாவில் அஞ்சல் துறை தொடங்கப்பட்டது.
*1951 – இந்தியாவின் முதல் பொதுத் தேர்தல் நடைபெற்றது.
*1987: கிரிக்கெட் வீரர் உமேஷ் யாதவ் பிறந்த நாள்.
*2006 – பாண்டிச்சேரியின் பெயர் புதுச்சேரி என மாற்றம் பெற்றது.

நெல் கொள்முதல் செய்வதற்கான அதிகபட்ச ஈரப்பத அளவை 17%-ஆக மத்திய அரசு நிர்ணயித்துள்ளது. பலத்த மழையின் காரணமாக அதை 22%-ஆக குறைக்க தமிழக அரசு கோரிக்கை வைத்தது. இந்நிலையில் நெல்லின் ஈரப்பதத்தை அளவை ஆய்வு செய்ய 3 குழுக்களை மத்திய அரசு அமைந்துள்ளது. இந்த குழுக்கள் இன்றும், நாளையும் செங்கல்பட்டு, தஞ்சை, நாகை, திருவாரூர், தேனி, மதுரை உள்ளிட்ட பகுதிகளில் ஆய்வு செய்கிறது.

சீரகம், ஓமம், சோம்பு ஆகிய மூன்றையும் ஊற வைத்த நீரை காலையில் குடிப்பதன் மூலம் உடலின் ஆரோக்கியத்தை எதிர்பாராத அளவில் மேம்படும். ▶செரிமானம் தொடர்பான பிரச்சனைகள் தடுக்கப்படுவதோடு, செரிமானம் சிறப்பாக இருக்கும் ▶உடல் எடையில் பெரிய மாற்றத்தைக் காணலாம் ▶உங்கள் சருமம் இயற்கையான ஆரோக்கியத்தை பெறும்▶கல்லீரலின் செயல்பாட்டை மேம்படுத்தி, உடலை சுத்தமாக வைத்துக் கொள்ள உதவும். SHARE IT

*வியன்னா ஓபன் டென்னிஸ் தொடரில் அரையிறுதிக்கு முன்னேறினர் சின்னர், ஸ்வெரேவ் *ஜப்பான் ஓபன் டென்னிஸ் தொடரில் அரையிறுதிக்கு முன்னேறினார் ரிபாகினா *மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட்டில் ஒரு வெற்றிக் கூட பெறாமல் பாகிஸ்தான் வெளியேற்றம் *காயம் காரணமாக ஓய்வில் இருந்த ஆல்ரவுண்டர் மேக்ஸ்வெல் இந்தியாவுக்கு எதிரான டி20-ல் களமிறங்க தயார்
Sorry, no posts matched your criteria.