India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

TN-ல் எலி காய்ச்சல் பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், தேங்கியுள்ள மழைநீரில் வெறும் கால்களில் நடக்க வேண்டாம் என பொது சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது. நடப்பாண்டில் 1,500-க்கும் அதிகமானோருக்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. நாய்கள், பன்றிகள், எலிகளின் கழிவுகளில் இருந்து ‘Leptospira’ தொற்று பரவுவதால் வெளியில் சென்று வீடு திரும்பிய பிறகு கை, கால்களை நன்னீரில் சோப்பு போட்டு கழுவுவது சிறந்தது.

NDA கூட்டணியில் தவெகவை சேர்க்க அடுத்தடுத்து பல முயற்சிகள் நடந்து வருகின்றன. அண்மையில், அதிமுக EX அமைச்சர் RB உதயகுமார் மறைமுகமாக விஜய்க்கு அழைப்பு விடுத்திருந்தார். இதனிடையே, அந்த கூட்டணியில் அங்கம் வகிக்கும் AC சண்முகம், வெளிப்படையாகவே விஜய்க்கு அழைப்பு விடுத்துள்ளார். அதிமுக – பாஜக கூட்டணிக்கு விஜய் வந்தால், பலமான கூட்டணியாக இருக்கும் எனவும், ஆட்சி மாற்றம் உறுதி என்றும் கூறியுள்ளார்.

கால்கள் மரத்துப்போவது சாதாரண விஷயம் என்றாலும், அடிக்கடி கால்கள் மரத்துப்போவது சில உடல்நல பிரச்னைகளை குறிப்பதாக டாக்டர்கள் எச்சரிக்கின்றனர். சுகர், வைட்டமின் குறைபாடு, நரம்பியல் பிரச்னைகள், வெரிகோஸ் வெயின், பக்கவாதம் போன்ற பல நோய்கள் ஏற்படுவதற்கான ஆரம்ப அறிகுறியாக இது பார்க்கப்படுகிறது. எனவே, காலம் தாழ்த்தாமல் டாக்டரை பாருங்கள். SHARE.

இந்தியா- ஆஸ்திரேலியா இடையேயான 3-வது ODI போட்டி இன்று சிட்னியில் தொடங்குகிறது. இந்த மைதானத்தில் 5 ODI போட்டிகளில் விளையாடியுள்ள இந்திய ஓபனர் ரோஹித் சர்மா, 1 சதம், 2 அரைசதங்கள் என மொத்தம் 333 ரன்களை குவித்துள்ளார். சிட்னியில் தனது அபாரமான பேட்டிங்கை ரோஹித் இன்றும் வெளிப்படுத்துவாரா என்ற எதிர்பார்ப்பில் ரசிகர்கள் உள்ளனர். சோபிப்பாரா Hitman?

விடியற்காலையில் நாம் சுவாசிக்கும் காற்று, நமது உடலுக்கு புத்துணர்ச்சியைக் கொடுக்கும். சுவாச மண்டலத்தை சிறப்பாக இயங்கச் செய்யும். காலை நேரத்தில் யோகா, நடைபயிற்சி, ஜாகிங், சைக்கிளிங், தியானம் போன்ற சுவாசத்திற்கு முன்னுரிமை கொடுக்கும் பயிற்சிகளை செய்யலாம். இதனால், மனமும், உடலும் புது சக்தி பெற்று, நோய் நொடியில்லாத ஆரோக்கியமான வாழ்க்கையை வாழ முடியும் என டாக்டர்கள் கூறுகின்றனர். SHARE IT.

கரூர் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை நேரில் சந்திக்க விஜய்க்கு இதுவரை யாரும் இடம் தரவில்லை. இதனால், பாதிக்கப்பட்டவர்களை பனையூருக்கு அழைத்து ஆறுதல் கூறவிருப்பதாக செய்தி வெளியானது. இது அரசியல் ரீதியாக சர்ச்சையை ஏற்படுத்தும் என்பதால், பனையூருக்கு பதில், மாமல்லபுரத்தில் உள்ள தனியார் ஹோட்டலில் வரும் அக்.27-ம் தேதி பாதிக்கப்பட்டவர்களை சந்தித்து விஜய் ஆறுதல் கூறவிருக்கிறார்.

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் 2 ODI போட்டிகளிலும் தோற்று, இந்தியா தொடரை இழந்தது. இந்நிலையில் இன்று சிட்னியில் நடைபெறும் கடைசி ஆட்டத்தில் இந்தியா ஆறுதல் வெற்றியாவது பெறுமா என ரசிகர்கள் காத்திருக்கின்றனர். இந்தியா பேட்டிங், பவுலிங் இரண்டிலும் சுமாராக செயல்பட்டதே தோல்விக்கு காரணம். முக்கியமாக விராட்டின் பார்ம் அவுட் அணிக்கு பின்னடைவாக மாறியது. இன்றைய போட்டியில் குல்தீப்புக்கு வாய்ப்பு கிடைக்கலாம்.

சனிக்கிழமை மட்டுமின்றி, தினமும் 21 முறை இந்த அனுமன் ஸ்லோகத்தை சொல்லி வாருங்கள்.
ஸ்ரீராம தூத மஹாதீர
ருத்ர வீர்ய ஸமத் பவ ஆஞ்சநேய
கர்ப்ப ஸம்பூத வாயு புத்திர நமோஸ்துதே. அர்த்தம்:
‘ராமனின் தூதனாகிய, மிகுந்த வீரமுள்ள, ருத்ரனின் சக்தியுடன் பிறந்த, ஆஞ்சநேயரே, வாயு புத்திரனே, உமக்கு வணக்கம். SHARE IT.

அதிமுக கூட்டணியில் இணைய அன்புமணி சம்மதம் தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த வாரம் பாஜக மேலிட பொறுப்பாளர் பைஜயந்த் பாண்டா, அன்புமணியை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியிருந்தார். பின்னர், ராமதாஸையும் சந்தித்து பேசியிருந்தார். இதனிடையே, ‘மாம்பழம்’ சின்னமும் அன்புமணியின் வசம் வந்துள்ள நிலையில், வெற்றி வாய்ப்புள்ள 30 தொகுதிகளை அவர் பட்டியலிட்டு லிஸ்ட்டையும் கொடுத்துள்ளதாக கூறப்படுகிறது.

ஜான்வி கபூர் போட்ட ஒரு இன்ஸ்டா ஸ்டேட்டஸ் அவருக்கு கல்யாணமா என்ற கேள்வியை ரசிகர்களிடம் எழுப்பியது. ‘Save the date 29th Oct’ என்ற பதிவுதான் ரசிகர்களை என்னவாக இருக்கும் என்ற எதிர்ப்பார்ப்பை துண்டியுள்ளது. ஆனால் இப்போது ஜான்விக்கு திருமணம் நடக்க வாய்ப்பில்லை, இது நிச்சயம் படத்தின் ப்ரோமோஷனாகதான் இருக்கும் என்று ஒரு தரப்பில் சொல்லப்படுகிறது. எதுவாக இருந்தாலும் 29-ம் தேதி உண்மை தெரிந்துவிடும்.
Sorry, no posts matched your criteria.